நண்பனின் காதலி – 6 87

யே என்ன நீயும் லவ்ல விழுந்து யாரையாச்சும் காலேஜ் டேஸ்ல காதலிச்சப்ப உங்க அப்பா அம்மா பிரிச்சு விட்டுட்டாங்களா என்றான் .சுவாதி தன் கண்களின் ஓரம் வழிந்த சின்ன கண்ணீர் துளிகளை துடைத்து விட்டு ம்ம் அப்படி எல்லா பேரெண்ட்ஸ் மாதிரி என் பேரெண்ட்ஸ் இருந்து இருந்தா கூட நான் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன் என்றாள் .
ஐயோ ஒரு வேல உண்மைலே இவளோட அப்பாவும் அம்மாவும் போயி செந்துருசுகளா என்று விக்கி மனதில் நினைத்து கொண்டு சுவாதி நீ என்ன சொல்றேன்னு புரியல என்றான்
உனக்கு புரியற மாதிரியே சொல்றேன் நீ நினைக்கிற ஏங்க அப்பா அம்மா உயிரோட இல்லன்னு உண்மைலே அப்படி இல்லாம இருந்தா கூட நான் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன் .
ஆனா அவங்க உயிரோட இருந்தும் இல்லாத மாதிரி தான் எனக்கு என்றாள் .எங்க அப்பா பெரிய தொழில் அதிபர் எங்க அம்மா சப் கலெக்டர் ரெண்டு பேருக்கும் அறேஞ் மேரேஜ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டாங்க ஆரம்பத்துல ரெண்டு பேரும் எல்லார் மாதிரியும் நல்லாத்தான் இருந்தாங்க என் நான் பொறந்து எனக்கு அஞ்சு வயசு வரைக்கும் கூட நல்லா ஒற்றுமையா இருந்ததா எனக்கு ஞாபகம் இருக்கு .
ஆனா ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் ரெண்டு பேரும் எதுக்கு எடுத்தாலும் சண்ட போட்டாங்க அதுக்கு அவங்க ரெண்டு பேர் பாத்த வேலையும் ஒரு காரணமா இருந்துச்சு சில நேரம் எங்க அம்மா லேட்டா வந்தா
எங்க அப்பாவுக்கு பிடிக்காது சில நேரம் எங்க அப்பா பிசினஸ் சம்பந்தமா பல நாள் வராம இருப்பாரு அது அம்மாவுக்கு பிடிக்காது அவங்க ரெண்டு பேருக்கும் சுத்தமா ஒத்து வரல இவங்க ரெண்டு பேர் சண்டைலே பொண்ணுன்னு நான் ஒருத்தி இருக்கிறதையே அவங்க மறந்துட்டாங்க .
அவங்கள பொறுத்த வரைக்கும் ரெண்டு பேருக்கும் அவங்க வேலைதான் முக்கியம் அப்படின்னு இருந்தாங்க எனக்கு ஒரு வேலைகாரிய போட்டாங்க அப்பா அம்மா கிட்ட கிடைக்காத பாசம் நேசம் எல்லாம் என்ன வேலைக்காரி கிட்டயா கிடைக்க போகுது அவ கிட்ட எனக்கு சாப்பாடு மட்டும் தான் கிடைச்சது .
யாருமே அப்ப என் மேல பாசம் காட்டவோ இல்ல ஒரு ஆறுதலா என் கூட பேசவோ இல்ல .ஒரு சின்ன பொண்ணுக்கு கிடைக்க வேண்டிய எல்லாம் கிடைச்சது .
டிரஸ் பொம்ம நல்ல சாப்பாடு சாக்கலேட் கேக் அப்படின்னு எல்லாம் கிடைச்சுச்சு ஆனா பாசம் மட்டும் கிடைக்கவே இல்ல ஸ்கூல இருக்க பிள்ளைகள எல்லாம் அவங்க அப்பா அம்மா பாக்க வரும் போது எங்க அப்பா அம்மா என்னையே பாக்க வராதது எவளவு மனசு அளவுல கஷ்டப்பட்டேன்னு எனக்கு அப்ப சொல்ல தெரியல .
அதுக்கு அப்புறம் எங்க அப்பாவும் அம்மாவும் ஒரு வழியா விவாகரத்து வாங்கி பிரிஞ்சு ட்டாங்க
அப்பயும் எனக்கு ஒரு நல்ல வழி கிடைக்கல .எல்லா பெறேன்ட்சும் விவகாரத்து வாங்குன்ன குழந்தையா நான்தான் வச்சுகிரூவென்னு தான் சண்ட போடுவாங்க ஆனா என் அப்பா அம்மா என்னைய கூட வச்சுக்க மாட்டேன்னு சொல்லி தான் சண்ட போட்டாங்க அப்பா அவருக்கு பிசினஸ் இருக்காதல என்னையே பாத்துக்க முடியாதுன்னு சொன்னாரு .
அம்மாவும் அடுத்து கலெக்டர் ஆக போறேன் அதுக்கு படிக்கும்னு சொல்லி என்னாலயும் பாக்க முடியாது அப்படின்னு சொல்லி ரெண்டு பேரும் என்னையே வேணாம்னு சொன்னங்க
அப்புறம் எங்க அப்பாவ பெத்த பாட்டி கூட போயி இருந்தேன் .அவங்களோட இருந்த வரைக்கும் வசதி இல்லாட்டியும் எங்க பாட்டி கிட்ட இருந்து பாசம் கிடைச்சுச்சு நான் நிம்மதியா இருந்தேன் .
என் பாட்டியும் என்னைய செல்லமா பாத்துகிட்டாங்க எப்பயாச்சும் எங்க அப்பா வந்து பாப்பாரு .கிட்ட தட்ட எல்லாமே நல்ல போயிகிருந்துசு அதுக்கு அப்புறம் நான் சிக்ஸ்த் படிச்சுகிட்டு இருந்தப்ப எங்க பாட்டி இறந்தட்டங்க அதுக்கு அப்புறம் என்னையே ஹாஸ்டல் சேத்து விட்டுட்டாங்க .மறுபடியும் என் மேல பாசம் காட்ட யாரும் இல்ல .

5 Comments

  1. Konjam fast ah next story podunga plz
    Story samaiya erukku iam waiting for part 7

  2. Wonderful story… Please continue and post next one soon

  3. Update next part soon

  4. Kindly upload daily without any break
    We waiting daily for urs story

  5. Oru story potta next part seekirama podanum dude. 7 epo varum

Comments are closed.