நீ திருந்தவே மாட்டியாடா என்றான் மணி .எதுக்கு திருந்தனும் ஏன் திருந்தனும் என்று பொய்யாக சிரித்து விட்டு ஒரு நிமிஷம் அந்த பிளவர்ஸ் வச்சு இனி எந்த யூஸ்ம் இல்ல அதுனால அத குப்ப தொட்டில போட்டுட்டு வரேன் .
அப்படியே மழை காலமா ஒன்னுக்கு ரொம்ப அர்ஜெண்டா இருக்கு டாய்லெட் போயிட்டு வரேன் என்று சொல்லி கொண்டு அந்த பிளவர்ஸ் எடுத்து கொண்டு போயி ஒரு குப்பை தொட்டி முன் நின்றான் .
கடைசியாக அதை ஒரு ஏக்கத்தோடு பார்த்து விட்டு மெல்ல அதை குப்பை தொட்டியில் போட்டான் .பின் டாய்லெட் போயி உக்காந்து குழாயை திறந்து விட்டு சிறிது நேரம் அழுதான் .ஏண்டா உனக்கு மட்டும் இப்படி ஒரு நிலைமை வருது இப்ப பிரண்டா இல்ல லவ்வரா நான் என்ன பண்ணுவேன் என்று அழுதான்
விக்கி பாத் ரூமில் உக்காந்து அழுதுவிட்டு பின் வெளியே வந்து காரில் ஏறி ஆபிஸ் போனான் .ஆபிசில் சுவாதியையும் டேவிட்டையும் நினைத்து கொண்டே இருந்தான் .
பின் ஆபிசில் முக்கியாமான மீட்டிங் ஒன்று நடந்தது /அப்போதும் விக்கி அவர்களை நினைத்து பார்த்து ஒழுங்காக மீட்டிங்கில் பேசமால் சொதப்பி விட்டு சாரி எனக்கு உடம்பு சரி இல்லை என்று சொல்லி விட்டு மீண்டும் வருத்ததோடு அவன் சேரில் உக்காந்தான் .
பின் மீட்டிங் எல்லாம் முடிந்த பின் மணி வந்தான் அவன் ரூமுக்கு .சரி வா டேவிட கூப்பிட அவன் ஆஸ்பத்திரி போவோம் என்றான் ,இந்த வந்துட்டேன்டா என்று போனான் .பின் மணி காரை தான் ஒட்டுவாதாக சொன்னான் .சரி என்று சொல்லி விட்டு விக்கியும் அருகே உக்காந்து தலையில் கை வைத்தாவரு உக்காந்து கண்ணை மூடி வந்தான் .பின் மணி ஒரு இடத்தில காரை நிப்பாட்டினான் .
விக்கி முழித்து என்னடா அதுக்குள்ளே ஆஸ்பத்திரி வந்துருச்சா என்றான் .இல்ல சும்மா உன் கிட்ட பேசுறதுக்கு தான் நிப்பாட்டினேன் என்றான் மணி .
ஒ மீட்டிங்க்ல சொதப்புனத பத்தி கேக்க போறியா நானே சொல்லனும்னு நினைச்சேன் .அது வந்து மச்சான் நைட் நம்ம டேவிட் பயலுக்கு அப்படி ஆனத நினைச்சு நைட் புல்லா தூங்கல அதான் அப்படி சொதப்பின்னேன் அதுனால் தான் இப்ப கூட தூங்கி கிட்டு இருக்கேன் என்றான் .
மச்சி எதுக்குடா நடிக்கிற முந்தி எல்லாம் ஞாயிற்று கிழமைல விடிய விடிய ஆட்டம் போட்டுட்டு அடுத்த நாள் அசால்ட்டா ஆபிஸ் வந்து மீட்டிங்ல சூப்பரா பேசி அசத்துவ இப்ப என்னமோ ஆஸ்பத்திரில தூங்கல அதுனால தான் சொதப்புனேன்னு கத விடாத மச்சி என்றான் .டேய் அதாண்டா நிஜம் என்றான் .ம்ம் நம்பிட்டேன் மச்சான் உனக்கு என்ன தாண்டா ஆச்சு இந்த ஆறு மாசமா நீ சரியாவே இல்ல .
யாரையும் ஆபிஸ்ல பேசன்னு இல்ல நீ நிமிர்ந்து கூட பாக்க மாட்டிங்குற ஏன் நானே நானா உன் கேபினுக்கு வந்தாதான் பேசுற இல்லாட்டி பேச மாட்டிங்குற .
வருண் கிட்ட விசாரிச்சேன் அவன் கிட்டயும் பேசுறது இல்லையாம் அப்புறம் அவன் பார்ட்டிக்கு கூப்பிட்டா கூட போக மாட்டிங்கிரியாம் என்ன தான் ஆச்சு உனக்கு என்றான் .விக்கி ஒன்றும் சொல்லமால் அமைதியாக இருந்தான் .மச்சான் நீ நான் ஓட்ட வாய் ரகசியம் காக்க மாட்டேன்னு தான் சொல்ல மாட்டிங்குற என்றான் மணி .
அப்படி எல்லாம் இல்லடா என்றான் விக்கி .டேய் நான் ஓட்ட வாய் தான் ஆனா காக்க வேண்டிய ரகசியத்த காப்பேன் என்றான் மணி .விக்கி சின்னதாய் சிரித்தான் .
Konjam fast ah next story podunga plz
Story samaiya erukku iam waiting for part 7
Wonderful story… Please continue and post next one soon
Update next part soon
Kindly upload daily without any break
We waiting daily for urs story
Oru story potta next part seekirama podanum dude. 7 epo varum