“சரிடா … சரிடா …”
“ஒரு விசியம் க்ளீன்னா தெரிஞ்சுக்கோ? ஃப்ரெண்ஸ்ங்களுக்குள்ள குழப்பம் இருக்கக்கூடாது.”
“என்ன எழவுடா அது குழப்பம் … சீக்கிரம் சொல்லுடா”
“வெல்லாயுதம் உன்னை பார்ட்டிக்கு கூப்ப்புறேன்னான்; நான் தான் வேணாம் வுற்றான்ன்னேன்; செல்வா நம்ம ஜிகிரி தோஸ்த்து …அவனுக்கு நான் சொல்லிக்க்க்க்கிறேன்… ஒண்ணும் பிரச்சனை பண்ணமாட்டான்னேன்..”
“டேய் சீனு … என்னை கொஞ்சம் பேச வுடுடா…”
“மன்சுல எத்தையும் வெச்சுக்காதே ப்ரொ … இத்தைப் பத்தி நேரா பாக்கும்போது பேசிக்கலாம்…”
“மாப்ளே … சீனு .. உன்னை நான் உடனே பாத்தாவணும்டா..”
“டேய் செல்வா … இப்பத்தாண்டா லேசா சுதி ஏறுது!”
“டேய் நாயே … உன் சுதி, ராகம் எல்லாத்தையும் நிறுத்திபுட்டு இப்பவே கிளம்பி என் வீட்டுக்கு வா..”
“மச்சான் என்னடா ஆச்சு … எதுக்குடா என்னை நாயேங்கறே?”
“சீனு … மாப்ளே .. நான் ரொம்ப நொந்து போயிருக்கேண்டா”
“என்ன மச்சான் … சுகன்யாக்கிட்ட எதாவது லொந்தாயிப்போச்சா…?”
“சீனு என்னை வெறுப்பேத்தாதே! உன் நாத்தவாயை மூடிக்கிட்டு இன்னும் பத்து நிமிஷத்துல நீ இங்க வரலே … நடக்கறதே வேற பாத்துக்கோ …” செல்வா உறுமினான்..
“என்ன மச்சான் … ரொம்பவே சூடாவறே?
“குடிகாரனுங்க நடுவுல என் ஆள் பேரை நீ ஏண்டா எடுக்கறே?”
“சாரி … சாரி … பிரதர் … மன்னிச்சுக்கப்பா”
“சரி சரி … எப்ப வர்றே? ..
“செல்வா … ஒரு ஆட்டோ புட்ச்சித்தான் வர்ரணும் … பைக் வீட்டுல கிடக்குடா … ஒரு அரை மணி நேரத்துல வர்றேனே”
“சீனு கோச்சிக்காதேடா … என்னமோ வெறுப்புல உன்னை நாயேன்னுட்டேன்.”
“ம்ம்ம் … ஒ.கே மச்சான்..”
“சாரிடா சீனு! உன்னை விட்டா எனக்கு வேற ஃப்ரெண்டு யாருடா இருக்கான்…?”
“சரிடா … சும்மா பொலம்பாதேடா .. நான் வரேண்டா .”
“எப்படியாவது வந்து தொலைடா … ஒரு முக்கியமான மேட்டர் டிஸ்கஸ் பண்ணணும்…”
“அம்மா முழிச்சிட்டு இருக்காங்களா?”
“இப்ப எந்த அம்மாவை கேக்கறடா?”
“டேய் செல்ல்வா எனக்கு ரெண்டு அம்மா; ஒண்ணு என் அம்மா; என்னைப் பெத்து வளத்த அம்மா; இன்னொன்னு உன் அம்மா… என்னை பெக்காத அம்மா; ஆனா ஆசையா எப்ப வந்தாலும் உக்கார வெச்சு சோறு போடற அம்மா; உன் அம்மா என் அம்மா … எப்படி..? ரைமிங்கா பேசறேன்ல்ல்லா..”
“டேய் சீனு அடங்குடா … பொத்திக்கிட்டு சீக்கிரம் வந்து சேருடா….”