சத்தம் போடாதே – 1 116

இந்த கதையில் வருவது அனைத்தும் கற்பனையே.

இது ஒரு சைக்கோலஜிக்கல் திரில்லர் வகையை சார்ந்த கதை. இந்த கதையை கொஞ்சம் வித்யாசமாக நிகழ்கால நடப்பையும், கடந்த கால நடப்பையும் மாற்றி மாற்றி பதிவிட்டு முறையில் கொடுக்க முயற்சி செய்கிறேன். இந்த கதையும் என்னுடைய முந்தைய கதைகளை போல காதல், காமம், திரில்லர் என அனைத்தும் கலந்தே இருக்கும்.

நிகழ்காலம்

“விட்டா ஓசூரே வந்துடும் போல” என்று எனது காதில் முணுமுணுத்தவளை கண்டுகொள்ளாமல் கும்மிருட்டாக இருந்த பெங்களூருவின் புறநகர் பகுதியில் பைக்கை விரட்டி கொண்டு இருந்தேன். நகர்புற பகுதியை போல் தொடர்ச்சியாக உயர்ந்த கட்டிடங்கள் இல்லாமல் ஆங்காங்கே இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்த சில தனி வீடுகளை தவிர வேறொன்றும் ஆள் நடமாட்டமே இல்லை.

“இன்னும் எவளோ நேரம் ஆகும்” மீண்டும் காதில் முணுமுணுத்தாள்.

“2 மினிட்ஸ்” வண்டியை ஒன்றரை நிமிடத்திற்குள் என்னுடைய வீட்டின் முன்பு நிறுத்தினேன்.

“எப்பா அட்ரஸ் தெரிஞ்சா கூட கண்டுபிடிச்சு வர 2 நாள் ஆகும் போல, நல்ல வேலை நீயா வந்து கூட்டிட்டு போன. இவளோ ரிமோட் ஏரியா எல்லாம் பெங்களுருவில் இருக்குனு எனக்கு தெரியாது” சொல்லிக்கொண்டே எனது பைக்கில் இருந்து இறங்கி தன்னுடைய ஸ்கர்ட்டை இழுத்துவவிட்டு சரி செய்து கொண்டாள். அவள் கீழே இழுத்துவிட்டும் கூட மேல் தொடையை விட்டு கூட இறங்கவில்லை.

“இங்கே எல்லாம் வாடகை வரும்னு எப்படி எவன் இவளோ செலவு பண்ணி வீடு கட்டினான்” கேட்டுக்கொண்டே நான் பைக்கை ஏற்ற அவளும் கேட் உள்ளே எனது பின்னே வந்தாள்.

“சத்தம் போடாம வா”

“அக்கம் பக்கத்துலே யாராச்சும் இருந்தாதானே கேக்குறதுக்கு” நக்கலாக சிரித்தாள்.

“ரொம்ப அலுத்துக்காதே” சொல்லிக்கொண்டே கதவை திறந்து அவள் உள்ளே நுழைந்தவுடன் கதவை சாதிக்கொண்டேன்.

1 Comment

  1. சு.கிருஷ்ணமூர்த்தி

    கதை அனுப்புபவர்களுக்கு சன்மாணம் அல்லது விளம்பர வருவாயில் பங்கு உண்டா?

Comments are closed.