”நீ யாரு.. என்னன்னு விசாரிச்சான்..”
” நீ என்ன சொன்னே…?”
”சொன்னேன். என் தாய் மாமன்னு. அதுக்குள்ள இன்னொரு பொம்பளை வந்ததால அந்த ஆளு பாலை எடுத்து குடுத்துட்டான். இல்லேன்னா.. நாம ரெண்டு பேரும் என்ன செஞ்சோம்னுவரை கேட்றுப்பான்.. !!”
” ஊருன்னா அப்படித்தான் விடு.! ஊர் வாயை மூட முடியாது.. !!”
இருவரும் காபி குடித்து விட்டு பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
” நான் கிளம்பட்டுமா ?” காபிக்குப் பின் கேட்டான் ராசு.
” ஏய்.. ஏன்டா.. ?” திகைத்துப் போய்க் கேட்டாள் பாக்யா.
” நீ வேலைக்கு போய்ருவ இல்ல..? அப்பறம் நான் இங்க இருந்து என்ன பண்றது.. ?”
” நான் போகல. நீ இரு.. ? நான் லீவ் போட்டுக்கறேன்.. !!”
” எனக்காகவா.. ?”
” ஏன அதுல என்ன தப்பு.. ?”
” கெழவன் கெழவிக்கே நம்ம மேல டவுட் வரும்.. ”
” நான் சொல்லிக்கறேன. விடு.. ”
” என்னன்னு.. ?”
” நீ என்னை கல்யாணம் பண்ணிக்க போறேனு. ”
” ஒடனேவா. ?”
” ஒடனே இல்ல. மெதுவா பண்ணிக்கறோம்னுதான். அப்பத்தான் அவங்க மனசு சமாதானம் ஆகும். ! நீ சொல்லாத நானே அவங்ககிட்ட பக்குவமா சொல்லிக்கறேன்.. !!” என்று அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு சொன்னாள்.
அவளைத் தழுவி அவள் நெற்றியில் முத்தமிட்டான். அவளும் அவன் நெஞ்சில் முத்தம் கொடுத்தாள்.
அப்பறம் அவன் போனை வாங்கி சாந்திக்கு கால் செய்தாள். அவன் மடியில் உட்கார்ந்து கொண்டு சாந்தியுடன் பேசினாள். அவன் கைகள் அவள் உடம்பில்.. விரசம் காட்டாமல் விளையாடின.. !!
” இன்னிக்கு நான் வேலைக்கு வரலப்பா. லீவ் சொல்லிரு..” என்றாள்.
”ஏய்.. ஏன்டி ?”
” ராசு வந்துருக்கான். ஸோ.. ”
” அடிப் பாவி..! அப்ப இன்னிக்கு செம ஆட்டம்தான். !”
”இப்பவே ஆடியாச்சு. ரெண்டு தடவை. மறுபடி நைட்னு ஒண்ணு இருக்கில்ல..”
” ஏய்.. என் வயித்தெறிச்சலை கெளப்பாதடி ” என்றாள் சாந்தி.
” ஏய்.. உனக்குத்தான் உன் லவ்வர் இருக்காரில்ல. ? நீயும் என்ஜாய் பண்ணு.. ?”
” ஆமா. அவ்வளவுதான். நீ இங்க இருந்தாலாவது சினிமா போற சாக்குல ஏதாவது பண்ணலாம். இப்ப அதுக்கும் வழி இல்ல. கல்யாணம் பண்றவரை அடக்கித்தான் வாசிக்கணும்.. ”
மேலும் கொஞ்ச நேரம் பேசி விட்டு போனை ராசுவிடம் கொடுத்தாள்..அவனும் பேசினான். நீண்ட நேரம் பேசி முடித்து காலை கட் பண்ணிய பிறகு.. பாக்யாவைக் கேட்டான் ராசு.!
” நாம கல்யாணம் பண்ணிக்க போறோம்னு அவகிட்ட சொல்லவே இல்ல போலருக்கு..?”
” இப்ப வேண்டாம். மெதுவா சொல்லிக்கலாம்..”
” ஏன்டி.. ?”
” இப்ப சொன்னா.. கேவலமா இருக்கும் ” என்று சிரித்தாள்.