மதன மோக ரூப சுந்தரி – 2 23

“ப்பே…..!!!!!!!!!!!!!!!!!” அவளுக்கு பின்பக்கமாக வந்த சிபி, அவளது காதுக்கருகே பெரிதாக கத்தினான்..!!

“ஆஆஆஆஆஆ..!!” பக்கென அதிர்ந்த ஆதிரா பயத்தில் அலறினாள்.

“ஹாஹாஹாஹா..!!” சிபியோ எளிறுகள் தெரிய சிரித்தான்.

“போங்கத்தான்.. நான் பயந்தே போயிட்டேன்..!!” ஆதிரா செல்லமாக சிணுங்கினாள்.

“ச்சும்மாடா.. வெளையாட்டுக்கு..!! ரொம்ப பயந்துட்டியா..??”

“ஆமாம்..!!”

“ஸாரி ஸாரி ஸாரி..!!”

“ம்ம்.. பரவால.. விடுங்க..!! என்னாச்சு.. ரொம்ப நேரமா கால்..??”

“அதுவா..?? ஊட்டில இந்த வாரம் ஹார்ஸ் ரேஸ் ஆரம்பிக்குதாம்.. அதைப்பத்தி எங்க மேகஸின்ல ஒரு ஆர்ட்டிக்கில் வரப்போகுதாம்..!! மைசூர்ல இருந்து நாளான்னிக்கு ஒரு டீம் ஊட்டிக்கு வர்றாங்க.. ‘நீ அங்கதான இருக்குற.. அப்படியே போய் ஜாய்ன் பண்ணிக்கிறியா..’ன்னு கேட்டாங்க.. ஒரேநாள் வேலைதான்..!!”

“ஓ.. நீங்க என்ன சொன்னிங்க..??”

“முடியாதுன்னு சொன்னேன்.. ட்ரை பண்ணுன்னு சொன்னாங்க.. சரி ட்ரை பண்றேன்னு சொல்லிருக்கேன்..!!”

“போகணுமா..??” ஆதிரா கவலையாக கேட்டாள்.

“வேணாமா..??”

“ப்ளீஸ்த்தான் போகாதிங்க.. இங்கயே இருங்க..!!”

15

“ஓ..!! இங்கயே இருந்தா என்ன கெடைக்குமாம்..??” சிபியிடம் பட்டென ஒரு குறும்பு.

“என்ன வேணும்..??” புரிந்தும் புரியாத மாதிரி கேட்டாள் ஆதிரா.

“அது..!!”

“எது..??”

“அப்போ நீ சொன்னதுதான்..!!”

“நான் என்ன சொன்னேன்..??” ஆதிராவும் விடுவதாய் இல்லை.

“ம்ம்..?? நைட்டு.. நைட்டு.. நைட்டு..!!!” மதியம் ஆதிரா சொன்ன அதே பாவனையுடன் சிபி சொல்லிவிட்டு குறும்பாக கண்சிமிட்ட,

“ச்சீய்ய்ய்..!!!” ஆதிரா அழகாக வெட்கப்பட்டாள்.

நாணத்தில் தலைகுனிந்தவளை அப்படியே கைகளில் அள்ளிக்கொண்டான் சிபி.. ஆதிராவும் அவனது செயலுக்கு மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.. அவனுடைய முகத்தை பார்க்க கூசியவள், தலையை மட்டும் தாழ்த்திக் கொண்டாள்..!! ஒரு பூங்கொத்தைப் போல அவளை மென்மையாக மெத்தையில் கிடத்தினான் சிபி.. ஆசையாக அவள் மீது கவிழ்ந்து, அவளது கழுத்துப்பகுதியில் முகம் புதைத்தான்.. உஷ்ணமாக ஒரு மூச்சுவிட்டான்..!!

“ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்..!!!”

கூச்சத்தில் நெளிந்த ஆதிரா உடலை முறுக்கி துள்ளினாள்.. சிபி சமநிலை இழக்க, அவனுடன் சேர்ந்து மெத்தையில் புரண்டாள்..!! இப்போது அவன் மல்லாந்திருக்க.. இவள் அவன் மார்பில் மாலையாய் தவழ்ந்திருந்தாள்..!! எழ முயன்றவள் நகரமுடியாதபடி சிபி அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்..!! விரகத்தை மனதில் வைத்துக்கொண்டு விலக முயன்றால் என்னவாகும்..?? தனது முயற்சியில் தோற்றுப்போய் அவனுடைய நெஞ்சிலேயே முகம் புதைத்துக் கொண்டாள் ஆதிரா..!! சிபியின் கரமொன்று நீண்டு.. இரவு விளக்கு தவிர மற்ற விளக்குகளை அணைத்தது..!!

ஆடை களைந்தார்கள்.. அங்கம் கலந்தார்கள்.. ஆனந்தக்கடலில் மூழ்கி திளைத்தார்கள்.. அதன் ஆழம் வரை சென்று திரும்பியதும் அப்படியே அயர்ந்து போனார்கள்..!! எது யாருடைய உடல் என்று பிரித்தறிய முடியாதமாதிரி.. ஒருவரை ஒருவர் பிண்ணிப் பிணைந்துகொண்டு.. எப்போது உறங்கினோம் என்பதை அறியாமலே ஆழ்தூக்கத்தில் ஆழ்ந்து போனார்கள்..!!

அடித்துப் போட்டமாதிரி அவர்கள் இருவரும் மாடியில் அவ்வாறு தூங்கிக்கொண்டிருக்க.. கீழ்த்தளத்தில் இருந்த இரட்டை ஊஞ்சல்களில் ஒன்று மட்டும்.. இப்படியும் அப்படியுமாய் தனியாக ஆடிக்கொண்டு கிடந்தது..!!

“க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!”