நேருக்கு நேர் – கிளைமாக்ஸ் 144

ஏன் மாப்ளை, இவ்ளோ ஃபீல் பண்றதுக்கு, என் பொண்ணை, ரெண்டு அறை விட்டுனாச்சும் திருத்தலாம்ல?

இத்தனை நாளா, அவ தப்பு பண்ணப்ப, நீங்க ஏன் மாமா, அவளை அடிக்கவே இல்லை?

——

சரி அவளை விடுங்க, அவளை திருந்த விடாம இருக்குற அத்தையை, ஏன் கண்டிக்கலை?

——

நம்பி வந்த பொண்ணை, கை நீட்டி அடிக்கிறவன், என்னைப் பொறுத்தவரை ஆம்பிளையே இல்லை மாமா! அவ கெட்டவ இல்லை மாமா! அவ வளர்ப்பே இப்படித்தான்! அவளுக்கே, அவளோட தப்பு புரிஞ்சு, திருந்த நினைச்சாலும், அத்தை விடுறதில்லை! நான் என்ன பண்ண? சரி விடுங்க மாமா… என் தலையெழுத்து அப்படி! நீங்க, ஏன் நல்ல நாளும் அதுவுமா, ஃபீல் பண்றீங்க! ஒரே ஒரு உதவி பண்ணுங்க மாமா.

சொ… சொல்லுங்க மாப்ளை…

ஒரு வேளை, என் அப்பா, அம்மா, பேரக் குழந்தையை பாக்கனும்னு வீட்டுக்கு வந்தா, கொஞ்சம் பாத்துக்கோங்க மாமா! நான் இருக்குறப்பவே, ஜாடை மாடையா பேசுற அத்தை, நானும் இல்லாட்டி, எப்படி பேசுவாங்கன்னு சொல்ல முடியாது!

எ.. என்ன மாப்ளை சொல்றீங்க? இது வேற நடந்துதா? ஏன் மாப்ளை என்கிட்டச் சொல்லலை?

சொல்லி என்ன பிரயோஜனம் மாமா? போன தடவை, அப்படி பேசுனப்ப, ஏன் அத்தை இப்படி பேசுறீங்கன்னு கோபப்பட்டதுக்கு, உங்கப் பொண்ணுகிட்ட, ஏதோ மாத்திச் சொல்லி, அவளை வெச்சே, என்கிட்ட சண்டை போட வைக்குறாங்க! எல்லாப் பொண்ணுங்களுக்கும், தன்னோட அப்பா, அம்மான்னா ஸ்பெஷல்தான்! அதுக்காக, ஒரு குழந்தை பொறந்த பின்னாடி கூட, புருஷன் மேல நம்பிக்கை வரலைன்னா, எதுக்கு கல்யாணம் பண்ணனும்? அஞ்சலிக்கு என் மேல இன்னும் நம்பிக்கையே வரலை, அப்புறம் எங்க, என் மேல அன்பு வரப் போகுது? ப்ப்ச்…

மன்னிச்சிடுங்க மாப்ளை! என் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கனும்னு, உங்க வாழ்க்கையை கெடுத்துட்டேன்! மன்னிச்சிடுங்க!

ஐயோ, என்ன மாமா, என்கிட்ட போயி மன்னிப்பு அது இதுன்னுகிட்டு! என் தலையெழுத்து! விடுங்க! நீங்க, அங்க நடக்கிறதைப் பாருங்க!

விஜய் என்னிடம் சொன்னதை விட, அவனது மாமனாரின் பேச்சில் இருந்து அவனது வலி எத்தகையது என்று புரிந்தது.

என்னடா விஜய்… எனக்குதான் எதுவும் சரியா அமையலைன்னு பாத்தா, உனக்குமா? ப்ப்ச்…

இருவரது வருத்தங்களும், அவர்களை ஒன்றாய் இணைத்தது! புண்பட்டிருந்த அவர்களின் மனதிற்கு, அவர்களுடைய நட்பு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது!

இதனிடையே, அஞ்சலியின் அப்பா, விஜய்யின் அப்பா, அம்மா வந்து அஞ்சலியையும், பேரக் குழந்தையையும் பார்த்துச் சென்ற பின், மனசு தாங்காமல் அஞ்சலியைத், திட்ட, இடையில் வந்த அவளது அம்மாவிற்கும் திட்டு விழுந்தது!

இதென்ன பழக்கம், மாமனார், மாமியார் வீட்டுக்கு போகாம, இங்க வர்றது? அதுவும் புருஷன் இல்லாம?

1 Comment

  1. Loving wife so much that he can’t even scold her but he will ask a stranger to force his wife…Shhh. Habba… Mudiyala, no logic or whatever it is…

    Also, in the first part, that guy is enjoying forcing his friend’s wife and even ejaculated inside… Oh dear, couldn’t stop laughing…

Comments are closed.