நேருக்கு நேர் – கிளைமாக்ஸ் 144

இப்பக் கூட, தீபாவளி சமயத்துலனாச்சும் எங்க ஊருக்கு, ஒரு நாள் போயிட்டு, உன் ஊருக்கு போகலாமேன்னு சொன்னதுக்கு, அந்தப் பட்டிக்காட்டுக்கு என்னால வர முடியாதுன்னு சொல்லிட்டா! நான் கோபப்பட்டு திட்டுனதுக்குதான், பையனைக் கூப்ட்டுகிட்டு அவளே போயிட்டா! வேற எவனாவது இருந்தா, இந்நேரம் பிச்சுகிட்டு போயிருப்பான். இப்பக் குழந்தையும் வந்துருச்சுன்னு பொறுமையா இருக்கேன்!

அவிங்கப்பாகிட்ட பேசிப் பாத்தியா?

அவருக்கும் புரியுது! ஆனா, அம்மாவும், பொண்ணும் ஒத்துக்கனுமே? பொண்ணு கண்ணுல தண்ணியைப் பாத்தா, அவருக்கு மனசு கேக்க மாட்டேங்குது! அதுவும், அஞ்சலிக்கு முன்னாடி பொறந்த ஆண் குழந்தை, இறந்தே பொறந்துதாம்! அதுனால, அவ மேல ஓவர் பாசம்! என்கிட்டயே மன்னிச்சிடுங்க மாப்பிள்ளைன்னு சொல்றாரு! என் குழந்தைக்காகவும், அந்த மனுஷனுக்காகவும்தான் பாக்க வேண்டியிருக்கு!

விஜய் பேசும் போதே, அவன் மாமனாரிடம் இருந்து ஃபோன் வந்தது! ஸ்பீக்கரிலேயே போட்டான் விஜய்!

மா… மாப்பிள்ளை!

சொல்லுங்க மாமா! அஞ்சலியும், குட்டியும் வந்துட்டாங்களா?

வந்துட்டாங்க மாப்பிள்ளை! நீங்க வர்லீங்களா?

ப்ப்ச்.. இல்லை மாமா!

புரியுது மாப்ளை… ஆனா…

இல்லீங்க மாமா! அவ்ளோ தூரம் வந்துட்டு, என் ஊருக்கு போகாம இருக்க முடியாது! என் ஊருக்கு, உங்க பொண்ணு மாதிரி, பணக்கார பொண்ணுங்கல்லாம் வர மாட்டாங்க! அப்படியே அவ வர நினைச்சாலும், அத்தை விட மாட்டாங்க! எதுக்கு பிரச்சினை? ஆஃபிஸ்ல வேலைன்னு, வீட்ல சொல்லிட்டேன்! அவங்க புரிஞ்சுப்பாங்க!

இல்லை மாப்ளை, அங்க தனியா இருக்கனுமே… அதான்…

அஞ்சலி அங்க வந்துட்டதால, தனியா இருக்குறேன்னு சொல்றீங்களா? அவ இங்க இருந்தாலும், நான் தனியாதானே மாமா இருக்கேன்!

மாப்ளை…. என்ன மாப்ளை இப்டி பேசுறீங்க!

மனசு வெறுத்துருச்சு மாமா! எதுக்காக வாழுறேன்னு, இப்பல்லாம் அடிக்கடி தோணுது! நல்ல வேளை, கல்யாணத்துக்கு முன்னாடியே, என் குடும்பத்துக்கு வேண்டியதுல்லாம் ஓரளவு செஞ்சுட்டேன்! இல்லாட்டி…?

எங்கியாவது கண் காணாத இடத்துக்கு போயிடலாமான்னு தோணுது! ஆனா, என் குழந்தைக்காகத்தான் அமைதியா இருக்கேன்! அஞ்சலிக்கு, எல்லாப் பேச்சையும், என்கிட்டதான் பேசத் தெரியும்! மத்தபடி தனியா அவளுக்கு எதுவும் செய்யத் தெரியாது!

ஒத்தைப் பொண்ணுன்னு நீங்களே, பாத்து பாத்து செஞ்சு கொடுத்து, அவளை எதையுமே கத்துக்க விடலை! அவ, தனியா எப்படி குழந்தையை பாத்துக்குவா? என்னைப் பெத்த பாவத்துக்கு, என் அப்பா, அம்மாதான் கஷ்டப் படனும்ன்னா, எனக்குப் பொறந்த பாவத்துக்கு, அந்த குட்டிக் குழந்தை ஏன் தண்டனை அனுபவிக்கனும்? அதுனாலத்தான் பல்லைக் கடிச்சிகிட்டு சும்மா இருக்கேன்! ஆனா, வாழ்க்கைல, பிடிப்பு விட்டுப் போயிடுச்சு மாமா!

1 Comment

  1. Loving wife so much that he can’t even scold her but he will ask a stranger to force his wife…Shhh. Habba… Mudiyala, no logic or whatever it is…

    Also, in the first part, that guy is enjoying forcing his friend’s wife and even ejaculated inside… Oh dear, couldn’t stop laughing…

Comments are closed.