கண்ணாமூச்சி 4 57

“அக்காஆஆ..!!”

தாமிரா தொடர்ந்து பரிதாபமாக அழைத்துக் கொண்டிருந்தாள்..!! ஆதிராவோ அந்த உருவத்தைக் கண்ட மிரட்சியில் இருந்தாள்.. ஒருகையை உயர்த்தி, விரல்களை விரித்து அசைத்தவாறே, அவர்களை நோக்கி மெல்ல நகர்ந்தாள்..!! அந்த உருவத்தின் முகம் தெளிவாக தெரியவில்லை.. ஆதிரா மிகவும் பிரயத்தனப்பட்டு அந்த உருவத்தின் முகத்தை காண எத்தனித்தாள்.. இமைகளை கசக்கி கசக்கி விழித்து விழித்து பார்த்தாள்.. பிரயோஜனம் இல்லை.. முகமெல்லாம் கரியப்பிக்கொண்ட மாதிரி மசமசப்பாக காட்சியளித்ததே ஒழிய, தெளிவு பிறக்கவில்லை..!!

அவஸ்தையுடன் தலையை இப்படியும் அப்படியுமாய் அசைத்த ஆதிரா.. படக்கென பதறியடித்துக் கொண்டு எழுந்தாள்..!! அவளது இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது.. அவளுடைய மார்புகள் குபுக் குபுக்கென மேலும் கீழும் ஏறி இறங்கின.. தஸ்புஸ்சென்று மூச்சிரைத்தது..!! ஒருகணம் அவளுக்கு எதுவும் புரியவில்லை.. படுக்கையில் அமர்ந்து மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள்..!! அப்புறம்.. எல்லாமே கனவு என்று உணர்ந்ததும்தான் அவளிடம் ஒரு நிம்மதி பெருமூச்சு வெளிப்பட்டது..!!

பக்கவாட்டில் திரும்பி பார்த்தாள்.. சிபி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.. அவனுடைய ஒருகை இவளுடைய இடுப்பில் தவழ்ந்திருந்தது..!! தலையை திருப்பி கடிகாரத்தை பார்த்தாள்.. நள்ளிரவு தாண்டி இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது..!! தொண்டை வறண்டுபோனது மாதிரி ஒரு உணர்வு அவளுக்கு.. தாகமெடுத்தது..!! தனது இடுப்பை வளைத்திருந்த சிபியின் கரத்தை மெல்ல விலக்கினாள்.. மெத்தையில் இருந்து இறங்கினாள்..!! நடந்து சென்று டேபிள் மீதிருந்த ஜாடியை எடுக்க.. அதன் எடை குறைவாக இருந்தது.. அதனுள் தண்ணீர் இல்லை என்பது அந்த ஜாடியை எடுத்ததுமே அவளுக்கு புரிந்து போனது..!!

“ப்ச்..!!” என்று சலிப்பை வெளிப்படுத்தினாள்.

கதவு திறந்து அறையைவிட்டு வெளியே வந்தாள்.. மாடிப்படி இறங்கி ஹாலுக்குள் பிரவேசித்தாள்..!! எதற்காக இப்படி ஒரு கனவு என்று யோசித்தவாறே நடந்தாள்.. சிங்கமலையில் வனக்கொடி சொன்னது, திரவியம் திருவிழா பற்றி குறிப்பிட்டது, அப்புறம் அந்த முயல்.. எல்லாமுமாக சேர்ந்துதான் இப்படி ஒரு கனவு உருவாகி இருக்கவேண்டும் என்று தோன்றியது..!! கிச்சனுக்குள் நுழைந்த தாமிரா.. ஒரு சொம்பு நிறைய நீர் அள்ளி தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டாள்.. தாகம் தீர்ந்து தொண்டையின் வறட்சி நின்றது..!!

கிச்சன் விளைக்கை அணைத்துவிட்டு வெளியே வந்தபோதுதான்..

“தட்.. தட்.. தட்.. தட்..!!!”

என்று இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்த அந்த சப்தத்தை கவனித்தாள்.. எங்கிருந்து சப்தம் வருகிறதென திரும்பி பார்த்தாள்..!!

“தட்.. தட்.. தட்.. தட்..!!!”

வெளியில் வீசிய காற்றின் வேகத்தில்.. ஜன்னல் கதவுதான் அந்த மாதிரி அடித்துக் கொண்டு கிடந்தது.. அதனுடன் வெண்ணிற ஜன்னல் திரைச்சீலை வேறு உயரே எழும்பி பறந்து கொண்டிருந்தது.. ‘ஷ்ஷ்ஷ்ஷ்’ என்று காற்றின் சீற்றமான சப்தம்..!! ஒருகணம் யோசித்த ஆதிரா.. பிறகு அந்த ஜன்னலை நோக்கி நடந்தாள்..!! ஜன்னல் கதவைப்பற்றி, மூடுவதற்காக நகர்த்தியபோதுதான்.. தூரத்தில் அந்தக்காட்சி எதேச்சையாக அவளுடைய பார்வையில் விழுந்தது..!!

இருள் சூழ்ந்திருந்த காட்டுப்பகுதி.. மெல்லிய வெளிச்சத்துடன் புகைமாதிரி பனிமூட்டம்.. அகலமான மரத்தின் அடிப்பரப்பில் பாறை.. அந்த பாறையில் சிவப்பு அங்கி போர்த்திக்கொண்டு அமர்ந்திருந்த அந்த உருவம்.. அந்த உருவத்தை சுற்றி அமர்ந்திருந்த பறவைகள், காட்டு விலங்குகள்.. அந்த உருவம் ஏதோ உரையாற்றுவது போலவும், பறவைகளும் விலங்குகளும் அதை கவனமாக கேட்டுக் கொள்வது போலவும்.. பார்த்தாலே சில்லிட்டுப் போகிற மாதிரியான ஒரு காட்சி..!!

அதைக்கண்டதுமே ஆதிரா பக்கென அதிர்ந்து போனாள்.. அவளுடய நாடி நரம்பெல்லாம் குப்பென்று ஒரு பய சிலிர்ப்பு..!!

“ஆஆஆஆஆஆ..!!”

அவளுடைய கட்டுப்பாடின்றி, அந்த வீடே அதிரும் அளவிற்கு கத்திவிட்டாள்.. பதறுகிற இருதயத்துடன் படிக்கட்டை நோக்கி திடுதிடுவென ஓடினாள்..!! ஆதிராவின் சப்தத்தில், மேலே சிபி பதறிப்போய் எழுந்தான்.. எழுந்த வேகத்தில் கதவு திறந்து வெளியே ஓடினான்..!!

“ஆதிராஆஆ..!!” என்று கத்திக்கொண்டே படிக்கட்டில் தடதடவென இறங்கினான்.

“அத்தான்..!!” அலறியடித்து ஓடிவந்த ஆதிரா சிபியை இறுக்கி கட்டிக்கொண்டாள்.

“ஆ..ஆதிரா.. ஆதிரா.. எ..என்னாச்சுமா..??”

“அ..அத்தான்.. அத்தான்..!!” ஆதிரா வார்த்தை வராமல் திணறினாள்.

“சொல்லுடா.. என்னாச்சு..??”

“அ..அங்க.. அங்க..”

“எ..என்ன அங்க..??”

“அ..அங்க.. அந்த உருவம்.. கு..குறிஞ்சி..!!”

“குறிஞ்சியா..?? எங்க..??”

“அ..அங்க.. ஜ..ஜன்னல்.. ஜன்னல்ல..!!”

இப்போது சிபியின் முகத்தில் ஒருவித இறுக்கமும், தீவிரமும்..!! ஆதிராவை அணைத்தவாறே அழைத்துக்கொண்டு அந்த ஜன்னலை நெருங்கினான்..!! ஆதிரா பயந்து நடுநடுங்கிப்போய் இன்னும் அவனது மார்புக்குள்ளேயே முகம் புதைத்திருந்தாள்.. சிபி மட்டும் ஜன்னல் கதவை தள்ளி வெளியே பார்வையை வீசினான்..!!

3 Comments

  1. Sema story

  2. Complete the story fast it is boring

  3. Complete the story fast it is too much boring

Comments are closed.