அசுரன் Part 37**Stopped** 29

அமானுஷ்யமாக ஏதோ அவளுக்கு பட்டது.உடனே பயந்து பிரியங்கா எழ முயற்சிக்க அவளால எழுந்திரிக்க முடியவில்லை.காந்தம் போல புல் அவளை பிடித்து இழுத்தது..

அடுத்து நடந்த நிகழ்வு அவளை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.புற்கள் நீண்டு வளர்ந்து அவள் இரு கைகளின் இருபுறமும் ஆடைக்குள் நுழைந்தது..அடுத்து கீழ் இருந்து அவள் பாதங்கள் வழியே புற்கள் உள்ளே நுழைந்தது.கடைசியாக தலை வழியாக அவள் இதழ்களை தீண்டி,அழகான சங்கு கழுத்தின் வழியே அவள் மார்புக்குள் நுழைந்தது.
நான்கு புறமும் அவளின் ஆடைக்குள் படை எடுத்த புற்கள் உள்ளே சென்று அவள் மேனியின் அந்தரங்க பாகங்களை தொட்டு தீண்டி விளையாட பிரியங்கா காமம் தலைக்கு ஏற சிக்கி துடித்தாள்..அவளின் வாளிப்பான தொடைகளை தழுவி கொண்டு,உள்ளே ஜட்டிக்குள் நுழைந்து அவளின் மன்மத கோவிலை தொட்டு தீண்டி புற்கள் விளையாடியது..மோகம் தலைக்கு ஏற பிரியங்கா உதடு வழியே சென்ற புல்லை வாயில் கடித்து உள்ளே இழுத்தாள்..அவள் மார்பின் காம்புகளை பாம்பு போல் புல் சுற்றி கொண்டு விளையாடி அவளின் காமத்தீயை அதிகம் ஆக்கியது..பிரியங்காவின் மார்பு காம்புகளை தொட்டு விளையாடி கொண்டே புற்கள் நீண்டு அவளின் மிருதுவான இடுப்பின் பாகத்தை பாம்பு போல் ,ஊர்ந்து நெளிய உணர்ச்சிகள் பொங்கி பெருகியது. பிரியங்கா வில் போல உடம்பை வளைத்தாள்..

சகோச்சிக்கு ஒன்றுமே புரியவில்லை..

“பிரியங்கா காமத்தின் பிடியில் எப்படி சிக்கினாலள் என்றே சகோச்சிக்கு புரியவில்லை..காத்தவராயனாக இருந்தால் இந்நேரம் என் கண்ணுக்கு தெரிந்து இருப்பானே..!ஆனால் காத்தவராயன் இங்கு இருக்கிறான் என்று மட்டும் என்னால் உணர முடியுது..ஆனால் காத்தவராயன் எந்த வடிவில் இருக்கிறான் என்றே என்னால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை..”என்று குழம்பியது

பிரியங்காவின் ஒவ்வொரு அங்கத்தையும் சுவைத்து முடித்த புற்கள் தன் பிடியை விட,பிரியங்காவின் உணர்ச்சி கட்டுக்குள் வந்தது.

மெதுவாக புற்கள் அவள் ஆடைக்குள் இருந்து வெளியே வந்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

பிரியங்கா எழுந்தாள்.கசங்கி இருந்த தன் ஆடையை பார்த்தாள்.அவளுக்கும் ஒன்றும் புரியவில்லை.. தட்டு தடுமாறி எழுந்து வெஸ்பாவை இயக்கி கொண்டு செல்ல, சகோச்சி அவளை பின் தொடர்ந்து சென்றது..

புற்களில் இருந்து காத்தவராயன் வெளியே வந்தான்.

“படைத்தவனின் திறமை எல்லாம் முழுமை பெற்ற அழகியின் அழகை சுவைக்க ஆரம்பித்து இருக்கிறேன் சகோச்சி.ஒவ்வொருவருக்கும் பலம் மற்றும் பலவீனம் உள்ளது..உன்னோட பலவீனம் தந்திரமாக செயல்படும் என்னை கண்டுபிடிக்க முடியாதது..!
ஒரு ஆவி ஓரறிவு முதல் ஐந்தறிவு உள்ள ஜீவனுக்குள் உள்ளே புகுந்தால் யட்சி கண்களுக்கு தெரியாது..காரணம் நீ ஆறறிவு பெற்ற மானிட வடிவத்தில் உள்ள ஆவியாக இருக்கிறாய்.நான் ஆறறிவு உள்ள மனித உடலில் புகுந்தால் மட்டுமே என்னை நீ இப்போ காண இயலும்..
நீயும் என்னை போன்று நான் ஓரறிவு உள்ள உயிரினத்தின் உள்ளே போக போகிறேன் என்று தெரிந்து நீயும் அதே ஓரறிவு உள்ள உயிரினத்தின் உடலில் புகுந்தால் மட்டுமே என்னை காண இயலும். இப்பொழுது ஓரறிவு உள்ள புற்களின் வழியே ஆசை தீர என் நிலவை ருசித்தேன்..அடுத்து நான் இன்னொரு உயிரின் மேனிக்குள் புகுந்து என் கனவுக்கன்னியை ருசிக்க போகிறேன்.அப்போ நீ வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்..பிரியங்காவை நான் அடைவதை உன்னால் தடுக்க முடியாது” என்று காத்தவராயன் என்று “ஹாஹாஹா…”சிரித்தான்.

மன்னர் காலம்..

லிகிதா மற்றும் அனுவின் ஆன்மா வெட்டவெளியான எங்கும் வெண்மை பிரகாசம் நிறைந்த இடத்தில் பிரவேசித்தனர்..

லிகிதா அதை பார்த்து மயங்கி”இது என்னடி உலகம்..புதுசா இருக்கு..சினிமாவில் காண்பிக்கும் இந்திரலோகத்தை விட அழகா இருக்கு..”

அனுவும் அதை பார்த்து அதிசயிக்க,”என்ன உலகம் என்று எனக்கும் புரியல..”

சில இடங்களில் தலைக்கு பின்னே ஒளிவட்டம் பொருந்திய முனிவர்கள் கடந்து போனார்கள்..இவர்களை பார்த்து அவர்கள் புன்முறுவல் பூத்தார்களே ஒழிய பேசவில்லை..

அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் திருதிருவென விழித்தார்கள்.குரு அவர்களுக்கு சொல்லி அனுப்பியதை மறந்து இங்கு இருக்கும் அழகை பார்த்து மெய்மறந்து சொக்கி நின்றுவிட்டார்கள்..

ஒரு இடத்தில் ஒரு முனிவரை சுற்றி கழுத்து வரை புற்று கூடி வளர்ந்து இருந்தது.அந்த முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.அவரிடம் சென்று பேசலாமா என்று நெருங்கினார்கள்..

அப்போது அங்கே ஒரு முனிவர் எதிர் தோன்றி அவர்களை நிறுத்தினார்..

“வேண்டாம் பெண்களே..!அவரை நெருங்க வேண்டாம்”என்று எச்சரித்தார்.

“இருவருக்கும் மீண்டும் ஒரு அதிசயம்..இவர் வாய் திறந்து பேசவே இல்ல.ஆனால் அவர் பேசுவது புரிகிறதே..!”என உள்ளுக்குள் வியந்தார்கள்..

“ஐயா !இவர் யார்..?ஏன் நாங்கள் இவரிடம் பேசுவதை தடுக்கிறீர்கள்..”என்று இவர்களும் நயன பாஷையில் பேசினர்.

நயன பாஷை என்பது ஆன்மாக்களின் மொழி..கண்கள் மட்டுமே பேசும்..வாய் பேசாது.உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டுமென்றால் ரமண மஹரிஷியும்,ரஷ்ய விஞ்ஞானி பால் ப்ரண்டன் பேசினார்களே அந்த மொழி..ரமண மஹரிஷிக்கு ஆங்கிலம் தெரியாது.பால் ப்ரண்டனுக்கு தமிழ் தெரியாது.ஆனால் பால் பிரண்டன் தன் மனதில் உள்ள சந்தேகங்களை கேட்க ரமண மஹரிஷியிடம் சென்றார்.ஆனால் ரமண மஹரிஷியிடம் பால் ப்ரண்டன் எந்த கேள்வியும் கேட்கவில்லை.ரமண மகரிஷி கண்களை மட்டுமே பார்த்தார்.ரமண மஹரிஷியும் இவர் கண்களை மட்டுமே பார்த்து நயன பாஷையில் வாயை திறந்து பேசாமல் கண்களாலேயே அவர் மனதில் உள்ள சந்தேகங்களை தீர்த்து வைத்தார்.சுருக்கமா சொல்ல வேண்டுமெனில் கண்கள் மட்டுமே பேசும்.வாய் பேசாது.இந்த பாஷையில் தான் அனுவும், லிகிதாவும் அந்த முனிவரிடம் உரையாடி கொண்டு இருந்தனர்.

5 Comments

  1. டேய், எப்போ டா முடிப்பிங்க

  2. Y stopped??

  3. Yo muditu ஸ்ருதி kathaiya mudiya paathila iruku

  4. kowsalya jayakumar

    கதை பாதில நிறுத்திட்டிங்க

  5. கதை பாதில நிறுத்திட்டிங்க

Comments are closed.