வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் மூன்று 88

நான் இங்க வந்தது, ஹரீஸ்கிட்ட, உங்க வண்டவாளம் எல்லாம் தெரியறதுக்குள்ள, உங்களைக் காப்பாத்த! இப்பச் சொல்லுங்க, நான் வந்தது, உங்களுக்கு லாபமா, நட்டமா?

என்ன ஹரீஸ் சொல்லுற? அப்டி என்ன, நான் ஹரீசை ஏமாத்துறேன்?

இங்க பாருங்க திரும்பத், திரும்ப என்கிட்ட பொய் பேசுறதுன்னா, அது அவசியமே இல்லை. நீங்க என்னை முட்டாள்னு நினைச்சு பேசிட்டிருக்காதீங்க. எனக்கு அது பிடிக்காது! நீங்கப் போகலாம்!

இ… இல்ல மதன்!

நீங்கப் போகலாம். அப்டி ஒண்ணும், நீங்கப் பேச வேண்டிய அவசியமில்லை. சொல்லிவிட்டு, அவன் இருப்பதை கண்டு கொள்ளாமல் லாப்டாப்பில் பார்க்க ஆரம்பித்தேன். சில நொடிகளுக்குப் பின் அவன் சொன்னான்…

ஒத்துக்குறேன் மதன்!

என்ன ஒத்துக்குறீங்க?

ஹரீசுக்கு எதிரா சில விஷயங்களை செய்யுறேன்னு ஒத்துக்கறேன். ஆனா, இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்? ஹரீசுக்கு எப்படி தெரியப் போகுது?

நான் அவனையே பார்த்தேன். பின் ஏளனமாய் சொன்னேன், அப்பா மாதிரி நினைச்சிட்டிருக்கிற ஒரு ஆள்கிட்ட, ஏமாத்தி, அவன் சொத்தையே பிடுங்கிறதுக்கும், தேவைப்பட்டா அவனைக் கொல்லவும் ப்ளான் பண்ணிட்டு, என்னமோ, எதிரா சில விஷயங்கள்னு ரொம்ப சிம்பிளா சொல்லுறீங்க???

இப்போது அவன் முகத்தில் அதிர்ச்சி. இதெல்லாம் உனக்கு எப்டித் தெரியும் மதன்?

ம்ம்ம்… உங்க மருமக, அவங்க அப்பா அம்மா கிட்ட பேசுனதை கேட்டேன். இன்னும் கொஞ்ச நாள்ல, நீங்க இல்லாதப்ப, ஹரீஸ்கிட்ட ஒண்ணு சேந்து உங்களைப் பத்திச் சொல்லப் போறாங்க. உங்களுக்கு எதிரா, எவிடென்ஸ் கூட கலெக்ட் பண்ண ட்ரை பண்ணிட்டிருக்காங்க. கிடைச்ச உடனே, சொல்லிடுவாங்க.

அவனுக்கு வியர்க்க ஆரம்பித்து விட்டது. இருந்தாலும் சொன்னான், ஹரீஸ் அப்படி ஒண்ணும் நம்ப மாட்டான்.

அதுக்குதான் எவிடென்ஸ் பாத்துட்டிருக்காங்க. ஏதாவது ஒண்ணு கிடைச்சா போதும். டிடெக்டிவ் ஏஜன்சில்லாம் கூட அப்ரோச் பண்ணியிருக்காங்க. சின்ன எவிடென்சோட ஹரீஸ்கிட்ட சொல்லி, ஹரீஸ் துருவ ஆரம்பிச்சாலே, எல்லா வண்டவாளமும் வெளிய வந்துடுமே? இதுல இருந்து தப்பிக்க என்ன பண்ணப் போறீங்க?

அவன் பதட்டத்துடன் யோசித்துக் கொண்டிருந்தான்.

பின், மெதுவாகச் சொன்னேன். கவலைப் படாதீங்க, நீங்க என்கிட்ட ஒழுங்கா நடந்துகிட்டா, தப்பிக்குற வழியை நான் சொல்லுறேன்.

இப்போது அவனது முகத்தில் வெளிச்சம்.

என்ன வழி மதன்?

சொல்லுறேன்! அதுக்கு முதல்ல, நீங்க என்னை நம்பனும்? ஒழுங்கா நடந்துக்கனும்? காலையில மாதிரி திமிரா நடந்துக்கக் கூடாது. சரியா?

அவன் தயங்கித் தயங்கி ஒத்துக் கொண்டான். நம்புறேன், ஆனா, உன்னை எப்படி நம்புறது? என்ன இருந்தாலும், அவ உன் அக்கா? அக்கா கணவர் ஹரீஸ்! அவிங்களுக்கு எதிரா நீ எதுக்கு இருக்கனும்???

ஹா ஹா! நல்ல கேள்விதான். சொல்றேன்.

இங்க பாருங்க, எனக்கு அக்கான்னு யாரும் கிடையாது. ஏன், எனக்கு அப்பா, அம்மா கூட கிடையாது. எங்க அம்மாவை ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டவர் எங்க அப்பா. அதுக்கு என் சித்தியும் உடந்தை. அதுனால அவிங்களை பழிவாங்குறதுக்கான சான்சை பாத்திட்டு இருந்தேன். எப்படி எங்க அம்மா வாழ்க்கையை கெடுத்தாங்களோ, அதே மாதிரி அவங்க கண்ணு முன்னாடி அவங்க பொண்ணு வாழ்க்கையை சிதைக்கப் போறேன். அதுதான் அவங்களுக்கான என் தண்டனை. அதுனாலத்தான் இந்த விஷயத்துல உங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்தேன். இல்லாட்டி, உங்களைப் பத்தி நான் ஏன் கவலைப் படணும்?

யதேச்சையா, அவங்க மூணு பேரும் உங்களைப் பத்தி பேசிட்டிருந்ததை கேட்டேன். எப்படியாவது ஹரீஸ்கிட்ட சொல்லி, உங்களோட வண்டவாளத்தை எல்லாம் புரிய வெச்சதுக்கப்புறம், உங்களை தொரத்திட்டு, அவிங்களும் இங்க வர்ற மாதிரி ப்ளான் பண்ணியிருக்காங்க!

இப்பச் சொல்லுங்க, என்னை நம்புறீங்களா?

நான் சொல்லுவதில் பல விஷயம் அவன் ஏற்கனவே அறிந்திருந்ததுதான். தவிர, கல்யாணத்திற்குப் பின், நான், என் அப்பா அம்மாவை பிசினசில் இருந்து ஒதுக்கியதும் தெரியும். இவை எல்லாம் சேர்ந்து, அவனுக்கு என் மேல் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

இது ஒருவகையான டெக்னிக். எதிரியையும், துரோகியையும் வெல்ல, அவனை முதலில் நம்ப வைக்க வேண்டும். அவன் புத்திசாலி, தனக்கு அதிகம் லாபம் என்று எண்ணிக் கொள்ளும் தோற்றத்தைத் தர வேண்டும்! அதற்கு வெறும் பொய்கள் சொல்லக் கூடாது. உண்மையும், பொய்யையும் கலந்து சொல்ல வேண்டும். கொஞ்சம் குழப்பத்திலும், பதட்டத்திலும் வைத்திருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாட்டிற்குள் வந்த பின், திருப்பி அடிக்க வேண்டும்! அப்படித்தான், மோகனும் என் கட்டுப்பாட்டிற்குள் வர ஆரம்பித்தான்.

ஒரு விதத்தில் இந்த சூழ்நிலையை நான் விரும்பினேன். எவ்வளவு திறமையானவனாக, சக்சஸ்ஃபுல் பிசினஸ்மேனாக நான் இருந்தாலும், பெற்ற தாய், தந்தை என முக்கிய உறவுகள் என்னை ஏமாற்றியதும், ஒரு பெண்ணாக இருந்தும் என் தாயை ஏமாற்ற என் சித்தி திட்டம் போட்டதும் என எல்லாம் சேர்ந்து எனக்கு உறவு சார்ந்த விஷயத்தில் ஒரு சில உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தியிருந்தது. ஒரு வேளை நான் எல்லாவற்றையும் மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல், கொஞ்சம் யாரிடமாவது ஷேர் பண்ணியிருந்தால், எனக்குள் இந்த உளவியல் சிக்கல் வராமல் இருந்திருக்குமோ என்னமோ?!

ஆனால் நான் எல்லாவற்றையும் என்னுள்ளேயே வைத்துக் கொண்டதால், வெளியே திறமையானவனாக, தைரியமானவனாக இருந்தாலும், உள்ளுக்குள் முக்கிய உறவுகளிடத்தில் ஒரு தயக்கத்தை கொடுத்திருந்தது. அதுதான், என் அக்காவையே நான் நம்புவதற்கு அதிக காலத்தை எடுத்துக் கொண்டது! எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தத் தயக்கம்தான், அந்தத் தோல்வி பயம் தான், மிக முக்கியமான ஒரு விஷயத்தில் என்னைத் தோற்கடித்தது.

இந்த உளவியல் பிரச்சினையைத் தீர்க்க எனக்கு ஒரு அவுட்லெட் வேண்டும். அதற்கு என் மனதுள் குடைந்து கொண்டிருக்கும், என்னை, என் தந்தையும், சித்தியும் ஏமாற்றி விட்டார்களே என்கிற கோபம் தணிய வேண்டும்! என்னுடைய கோபத்தையும், அது கொடுத்துக் கொண்டிருக்கும் வன்மத்தையும் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நான் தேர்ந்தெடுத்திருக்கும் டார்கெட்டுகள்தான் ஹரீசின் சித்தப்பாவும், சித்தியும். இது ஒரு வகையில் என் அக்காவுக்கான சொல்யூஷன் மட்டுமல்ல. எனக்கான ட்ரீட்மெண்ட்டும் கூட.

ஆரம்பத்திலிருந்தே, ஹரீசின் சித்தப்பாவும் சித்தியும் ஏனோ, என் அப்பாவையும், சித்தியையும் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அதுவும் முழுக் கதையையும் கேட்ட பின், அந்தத் துரோகமும், பெண்களை ஏமாற்றும் பேக்கிரவுண்டும், அதற்கு அமைதியாக ஒத்துழைக்கும் எனது சித்தியைப் போன்ற, ஹரீசின் சித்தியும், எல்லாம் சேர்ந்து முழுக்க அவர்களாகவே தோன்ற ஆரம்பித்துவிட்டனர்.

ஆகவே, இவர்களைப் பழிவாங்குவது ஒரு வகையில், எனக்கு மட்டுமே தெரிந்த, எனது உளவியல் சிக்கலுக்கான தீர்வாக இருக்கும் என்று தீர்மானமாக நம்பினேன். அதனால்தான், அவர்களுடைய பாதையிலேயே சென்று அவர்களை வேட்டையாட விரும்பினேன்.

என்னுடைய யோசனைகளை மோகனது குரல் இடைமறித்தது.

இப்ப கண்டிப்பா நம்புறேன் மதன். நீயும் நம்ம க்ரூப்புன்னு தெரிஞ்ச பின்னாடி எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? இப்பதான் எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு!

சந்தோஷத்தில் பேசிய அவனது குரல் சொல்லியது, அவன் முழுதாக என்னை நம்ப ஆரம்பித்து விட்டதை!

அதை அதிகப்படுத்த, எனது தூண்டிலைப் போட்டேன்.

அதுக்குள்ள சந்தோஷப்படாதீங்க! சீக்கிரம் ஹரீஸ்கிட்ட விஷயத்தை சொல்ல டைம் பாக்குற அவங்ககிட்ட இருந்து எப்டி எஸ்கேப் ஆகப் போறீங்க? ம்ம்ம்?

எனது கேள்வியில் இருந்த உண்மை அவனுக்குப் புரிந்தது. ஆனால், அவனிடம் எந்த தீர்வும் இல்லாததால், குழம்புவது முகத்திலேயே தெரிந்தது. பின் நிமிர்ந்து என்னைப் பார்த்தான்.

நான் அவனைப் பார்த்து சிரித்தேன். அதன் அர்த்தம், தூண்டிலில், மீன் சிக்க ஆரம்பித்து விட்டது!

எ… என்ன பண்றது மதன்?

நான் சொல்றதை கேட்குறீங்களா?

ம்ம்.. கண்டிப்பா!

முதல்ல, ஏதாவது காரணத்தைச் சொல்லி உங்க மருமகளை ரெண்டு மூணு மாசத்துக்கு, அவங்க பொறந்த வீட்டுல இருக்க வைங்க. ஹரீஸ் இங்க இருந்து, மனைவி வேற இடத்துல தொடர்ந்து இருந்தா, சந்தேகம் வரும். அதுனால, ஹரீஸ் தொடர்ந்து ஒரு ரெண்டு மாசத்துக்கு, பிசினஸ் ட்ரிப்புல இருக்குறா மாதிரி ப்ளான் பண்ணுங்க.

5 Comments

  1. Raji enaku mail pannu

    1. Raji waiting un msg ku

  2. ஒரு காம கதை போல் அல்லாமல், ஒரு நாவல் போல் மிகவும் interesting ah படித்துக் கொண்டிருக்கிறேன். கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

    1. Apdithan irukum honey rose virupam irutha peslam vanga

    2. Yen mail ku valavanmadhan yen mail

Comments are closed.