வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் மூன்று 87

நான் எவ்ளோ பண்ண முடியும்? எந்த அடிப்படையில பண்ண முடியும்? என் அக்காவுக்கே உன் மேல கோபம் இருக்கும். நீ உன் புருஷனை டைவர்ஸ் பண்ணதுக்கப்புறம், ஹரீஸே ஏத்துக்குறாரோ என்னமோ. அப்புறம் என் அக்காவும் ஏத்துக்க மாட்டா. அப்புறம் நான் என்னன்னு ஹெல்ப் பண்ரது? பண விஷயத்திலோ, வேலை விஷயத்திலோ ஏதாவது சின்ன ஹெல்ப் பண்ணலாம். அதுவும் எத்தனை நாளைக்கு?

அவளும் யோசிக்கத் தொடங்கினாள். பின் கேட்டாள், அப்ப நான் என்னதான் செய்யுறது?

சொன்னா கேப்பியா? பழைய புத்தியை காமிக்க மாட்டியே?

இல்ல சொல்லு!

இனி உன் புருஷனா, உன்கிட்ட டைவர்ஸ் கேட்டாலும், நீ கொடுக்கக் கூடாது. வெளிய நீ பழைய மாதிரியே இரு! ஆனா, இங்க, உன்னை முட்டாளாக்கினவன்கிட்ட புத்திசாலின்னு ப்ரூவ் பண்ணு. நீ பழைய சீதா இல்ல, புது சீதான்னு மெதுவா காமி.

எப்பியும் போல, சொத்துக்களையும், பணத்தையும் உன் கண்ட்ரோல்ல வை. எல்லாத்துக்கும் மேல, எந்த விஷயத்துல உன் புருஷன் உனக்கு துரோகம் செஞ்சானோ, அதுல அவனுக்கு ஏமாற்றம் கிடைக்கனும். இத்தனை நாள் அவன் செஞ்சதை, அவன் முன்னாடியே நீ செய். அப்ப தெரியும், அவன் உண்மையாலுமே மியுச்சுவல் சுதந்திரம் கொடுத்தானா இல்லையான்னு!

அவளுக்கு ஓரளவு புரிந்திருந்தாலும், கொஞ்சம் குழப்பமும் இருந்தது! அந்தக் குழப்பத்தினூடே கேட்டாள். அவரு எனக்கு துரோகம் பண்ண விஷயத்துல நான் எப்படி ஏமாற்றத்தைக் கொடுக்குறது? நான் எப்டி அதைச் செய்யுறது?

நான் சொன்ன அர்த்தம் புரியலையா இல்ல நடிக்கிறியா?

எந்த இடத்திலும் அவள் மேல் நான் கருணையோ, பச்சாதாபமோ காட்டவில்லை. அது அவளைக் கூசச் செய்தது.

ந..நடிக்கலாம் இல்லை. ஆனா… கொஞ்சம் இடைவெளி விட்டவள் தொடர்ந்தாள். நீ சொன்னதோட அர்த்தம், நீ தெரிஞ்சுதான் சொல்றியா? இதெல்லாம் சாத்தியமா? இதுனால் எனக்கென்ன பலன்? நான் ஏன் இதையெல்லாம் செய்யனும்? இது ஒண்ணுதான் சொல்யூஷனா என்ன?

சாத்தியம், சாத்தியமில்லைங்கிறது வேற பிரச்சினை. இதுதான் சரியான திட்டம், இதுனால் என்ன பலன்னு வேணா சொல்றேன்.

முதல்ல, நீ மோகனை விட்டு பிரியறது நல்லதுக்கில்லை. உனக்கான எல்லா பாதுகாப்பும் இங்கதான். அதை விட்டு வெளிய போனா, யார் மூலம் வேணாம்னாலும் உனக்கு தொந்தரவு வரும். ஏன், மோகன் மூலமாவே அதிகம் தொந்தரவு வரும்.

நல்லா படிச்சு, தைரியமான, ஓரளவு பேக்கிரவுண்ட் இருக்கிற, என் அக்கா மாதிரி ஆட்கள்கிட்டயே தன் புத்தியைக் காமிக்கிற ஆளு உன் புருஷன். உன்னை சும்மா விட்டுடுவானா? அதுவும் அவன் ஏமாத்துன சொத்தை நீ எடுத்திட்டு போகும் போது? ஆக, என்னைப் பொறுத்த வரை, பிரியுறதுங்கிற முடிவு பிரச்சினைதான் உனக்கு. அதை ஒத்துக்குறியா?

அவள் மெல்ல தலையசைத்தாள்… ம்ம்ம். ஆமா!

ஆக பிரியக்கூடாது. சேந்துதான் இருக்கப் போறேங்கிறப்ப, ஒண்ணு அந்தாளு பண்ற எதையும் கண்டுக்காம அமைதியா இருக்கனும்? அப்படி உன்னால, அதே மாதிரி ஒரு முட்டளா, சொரணை இல்லாத ஒரு ஆளா இருக்கனும். அது உன்னால முடியுமா?

நான் வேண்டுமென்றேதான், அப்படிக் கேட்டேன். நான், முன்ன மாதிரி அமைதியாக இருக்கமுடியுமா என்று கேட்டிருந்தால், அவள் ஒரு வேளை யோசித்திருக்கக் கூடும். மாறாக, நான் இப்படிக் கேட்டியது அவளது தன்மானத்தை சீண்டியிருந்தது.

அவள் கோபத்துடன் சொன்னாள். இல்லை, அது இனிமே முடியாது.

ஓகே. அப்ப சேந்து இருந்தாலும், முன்ன மாதிரி இருக்க முடியாது. நீ புதுசா போயி, எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு சண்டை போட்டாலும் அவனால ஏத்துக்க முடியாது? உன் மேலத்தான் குத்தம் சொல்லுவான். அப்ப இதுக்கு என்னதான் வழி?

அவள் கேள்வியோடு என்னைப் பார்த்தாள்.

அவன் செஞ்சதை நீயும் செய்! அவன் கொடுக்காத சுகத்தை நீயே தேடிக் கண்டுபிடி. அதை ஏத்துக்குறதும் ஏத்துக்காததும் அவன் கையில இருக்கு? ஆனா அவனால உன்னைக் கேள்வி கேக்க முடியாது. இத்தனை நாளா உன்கிட்ட சுதந்திரம்னு பேசினவன், இன்னிக்கு தன்னால கொடுக்க முடியலைன்னு ஒத்துக்க முடியாது.

நீ எப்பியும் கொடுக்கத் தயாரா இருந்தாலும், அதுக்காக, வெளிய ஊர் மேய போனவனால, நீ கேட்டும் கொடுக்காதப்ப, நீ வெளிய தேடிக்கிட்டதுல என்ன தப்புன்னு கேட்டா பதில் சொல்ல முடியாது! அவனால, டைவர்ஸூக்கும் போக முடியாது. போனா நஷ்டம் அவனுக்குதான். என்னச் சொல்ற?

இதுனால, உனக்கும் சுகம் கிடைக்கும், நீ ஏமாறுறங்கிற ஃபீலும் தேவையில்லை. உனக்கும் பாதுகாப்பு. சொத்தும் உன்கிட்ட. என்னச் சொல்ற?

நான் சொல்லச் சொல்ல, அவளது கண்களில் விஷயம் முழுதும் புரிய ஆரம்பிப்பதற்கான மாற்றம் தெரிந்தது. ஆனாலும் ஒரு சின்னக் கேள்வி இருந்தது!

இந்த முறை நிமிர்ந்து, மிகத் தீர்க்கமாக என் கண்களைப் பார்த்தாள். பின் என் கண்களைப் பார்த்தே கேட்டாள்.

நீ என்னை வெச்சு, அவரை பழிவாங்கப் பாக்குறியா?

நானே கொஞ்சம் அதிசியப்பட்டேன். இவளும் புத்திசாலிதான்!

பின் நான் சொன்னேன். ஆமா, ஆனா இல்லை!

அப்பிடின்னா?

உன் புருஷனுக்கு, ஒரு தண்டனை கொடுக்கனும்ங்கிரது என் எண்ணம். அதுக்கு ஆமா! ஆனா, அதுக்கு, இது மட்டும்தான் வழி இல்லை. அதுக்கு இல்லை.

இன்னும் புரியலை.

நான் சிரித்தவாறே சொன்னேன், நான் இங்க வந்ததே, உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது தண்டனை கொடுக்கனும்னு. பழி வாங்கனும்னுதான். ஆனா, உன் நிலையைப் பாத்ததுக்கப்புறம் எனக்கு உன மேல பரிதாபம் வந்துச்சு. அதுனால், உன்னை லிஸ்ட்ல இருந்து எடுத்துட்டேன். இப்ப உன் பிரச்சினைக்கான சொல்யூஷன் பாத்தா, அது எனக்கும் தோதா வருது! அவ்வளவுதான்.

இன்னொன்னும் சொல்றேன், நீ ஒரு வேளை இப்ப நான் சொன்ன திட்டத்துக்கு ஒத்துக்காம டைவர்ஸே பண்ணிடறேன்னு சொன்னாலும், நான் உன் புருஷனுக்கு ஒரு தண்டனை கொடுக்காம இருக்கப் போறதில்லை. அது, ஒருவேளை டைவர்சுக்கப்புறம் உன் புருஷன் மூலமா எந்தப் பிரச்சினையும் வராமக் கூடக் காப்பாத்தலாம். அது ஒரு விதத்துல நான் உனக்கு செய்யுற ஹெல்ப்பு. ஆனா, மத்தவிங்க மூலமா உனக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வந்தா?

அதனாலத்தான் ஆமா, ஆனா இல்லைன்னு சொன்னேன். திரும்பச் சொல்றேன். உன் பிரச்சினைக்கு ஹெல்ப் பண்றதுனாலியோ, இங்க வந்து இத்தனை நாள் தங்கியிருக்கிறதுனாலியோ, என்னைச் சாதரணமா நினைச்சிட வேணாம். என் பவர் வேற! ஆனா, இந்த விஷயத்துல என் பவரை உபயோகிக்க விரும்பலை. அதுக்குல்லாம் ஒர்த்தும் இல்லை நீங்க!

என் பதிலை நான் சொல்லிட்டேன். இனி, உன் பதிலை, நீ நல்லா யோசிச்சு, ரெண்டு நாள் கழிச்சு கூடச் சொல்லு. ஆனா, ஒரு முடிவெடுத்தா, அதுல தெளிவா இருக்கனும். எதுவா இருந்தாலும், ஏதாச்சும் ஹெல்ப், என்னால முடிஞ்சதை செய்யுறேன்!

ஓகே?!

அடுத்த நாள் இரவு! யாரோ என் கதவைத் தட்டினார்கள்.

வெளியே சீதா! கதவைத் திறந்த என்னை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவள், கதவைத் தாளிட்டாள்.

நான் கேள்வியுடன் அவளைப் பார்த்தேன்.

அவள் கொஞ்சம் தெளிவாய் இருந்தாள். பின் சொன்னாள்.

நல்லா யோசிச்சுப் பாத்துட்டேன். நீ சொல்றதுதான் சரி. உன் திட்டத்துக்கு ஒத்துக்குறேன்.

5 Comments

  1. Raji enaku mail pannu

    1. Raji waiting un msg ku

  2. ஒரு காம கதை போல் அல்லாமல், ஒரு நாவல் போல் மிகவும் interesting ah படித்துக் கொண்டிருக்கிறேன். கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

    1. Apdithan irukum honey rose virupam irutha peslam vanga

    2. Yen mail ku valavanmadhan yen mail

Comments are closed.