வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் மூன்று 87

யாரு நான் அவமானப்படுத்துறேனா? தொடர்ந்து உனக்கு ஹெல்ப் பண்ண வந்த என்னை நீதான் தேவையில்லாத கேள்வி கேட்டு, உனக்கான அசிங்கத்தை நீயே தேடிக்கிற. நான் என்ன பண்ணட்டும்?

ஏன் இப்டி பேசுற? இப்ப நான் சொன்னதுல என்ன அசிங்கம்? என் புருஷன் என்னை ஏமாத்துறது தெரிஞ்சதுதானே?

அது தெரிஞ்சதுதான். ஆனா, நீ என்கிட்ட பேசின விதம்? நல்லா யோசிச்சு பாருடி! கட்டின புருஷனே, நீயே வாலண்டியரா போயும், ஒண்ணைக் கண்டுக்கவே இல்லியாம். தொடவே இல்லியாம். இதுல நான் உன்னை நைட்டு ஹெல்ப் பண்ணக் கூப்பிட்டா, நீ தப்பா நினைப்ப இல்ல?

என்னுடைய சுரீர் கேள்வி அவளுக்கு இன்னும் அவமானப்படுத்தியது. கண்களில் கண்ணீர் கூட வந்தது.

ஆக்சுவலி நான் ஏன் உனக்கு ஹெல்ப் பண்றேன்னு எனக்கு தெரியவே இல்லை. உன் மேலயும், உன் புருஷன் மேலயும் கோவமாத்தான் இந்த வீட்டுக்கு வந்தேன். ஆனா பாரு, உனக்கே ஹெல்ப் பண்ணிட்டிருக்கேன்!

ஏன், எங்க மேல என்ன கோபம்?

என்ன கோபமா? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லு. உன் மேல கோபப்பட காரணமேயில்லை??

வந்து…

சரி நானே சொல்றேன். நீயும், உன் புருஷனும் என் அக்காகிட்ட நடந்துகிட்ட முறைக்கு வேற யாராவதா இருந்தா என்ன பண்ணியிருப்பான் உங்களை?

அவள் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி! உனக்குத் தெரியுமா?

என் அக்கா, என்கிட்ட எல்லாம் சொல்லிட்டா. நான், கொலை வெறிலத்தான் இந்த வீட்டுக்கே வந்தேன்.

நா…நான் காசு மட்டும்தானே கேட்டேன். அது அவ்ளோ பெரிய குத்தமா?

நான் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன். என் பார்வையின் வீச்சை அவளால் தாங்க முடியவில்லை. தலை குனிந்தாள்.

ஒன் புருஷன் யோக்கியதை வந்தவுடனே தெரிஞ்சிருச்சி. அதுனால, அந்த வக்கிரம் புடிச்சவன் நடந்துகிட்டதில் எனக்கு ஆச்சரியம் வர்லை. ஆனா, நீ பொம்பளைத்தானே? நீயே கேவலம் காசுக்காக எப்டியெல்லாம் நடந்துகிட்ட? அசிங்கமாயில்ல உனக்கு?

நீ பண்ண பாவம்தாண்டி, உன்னை வாட்டுது. எந்தப் பணத்துக்காக எல்லா அநியாயத்தையும் கண்டுக்காம இருந்தியோ, அதே பணத்தை வெச்சுதான் நீயும் ஏமாந்திருக்க. அதுவும் யாரோட தப்பை கண்டுக்காம இருந்தியோ, அவனே உன்னை ஏமாத்திருக்கான்.

ஆவேசத்தில் வந்த என்னுடைய வார்த்தைகளும், அது கொடுத்த வலியும், எனக்கு உண்மை தெரியும் என்பதும் அவளுக்கு மிகப்பெரிய மனச்சோர்வையும், அவமானத்தையும் கொடுத்தது. அவள் சிலை போல் இருந்தாள். சிறிது நேரம் கழித்து கேட்டாள்.

எல்லாம் உண்மையும் தெரிஞ்சும் ஏன் என்கிட்ட உண்மையைச் சொன்ன? என்னை வெச்சு ஏதாச்சும் ப்ளான் பன்றியா?

ஹா ஹா ஹா! ஏண்டி, என் ரேஞ்சு என்னான்னு நினைச்சிட்டிருக்க? உன் புருஷனை விட 100 மடங்கு பணத்துலியும், செல்வாக்குலியும் பெரிய ஆளு. உக்காந்த இடத்தில இருந்து ஒரு ஃபோன் பண்ணியிருந்தா, நீயும், உன் புருஷனும் அட்ரஸே இல்லாம போயிடுவீங்க. இதுல உன்னை வெச்சு ப்ளான் பண்ணனுமா? நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா? உனக்குன்னு ஏதாவது ஒர்த்து இருக்கா?

நான் வந்ததே உன்னையும், உன் புருஷனையும் எச்சரிச்சுட்டு போலாம்னுதான். ஆனா வந்து பாத்தா, உன் பொழைப்பு ரொம்பக் கேவலமா இருந்தது. அதுனாலத்தான் உனக்கு ஹெல்ப் பண்ணேன். இல்லாட்டி, இந்நேரம் சீனே வேற.

என் நேரம் பாத்தியா, ஹெல்ப் பண்ண வந்த என்னை, நீ கொஸ்டின் பண்ணிட்டிருக்க. பழிவாங்க வேண்டிய உன்கிட்ட, நானும் பதில் சொல்லிட்டிருக்கேன். காமெடியா இல்ல? வேற யாராவதா இருந்த, இந்நேரம் என் கால்ல உழுந்து என்கிட்ட நன்றி சொல்லியிருந்திருப்பாங்க. ஆனா நீ கொஸ்டின் பண்ணிட்டிருக்க…

என் பேச்சு சரியாக அவளைத் தாக்கியிருந்தது. கையறுநிலையின் உச்சத்தில் அவள். காப்பாற்ற வேண்டிய கணவன், அவளை ஏமாற்றுகின்றான். உறவுகளை, அவள் ஏமாற்றியிருக்கிறாள். பழிவாங்க வந்தவன் பாவம் பார்க்கிறான். எவ்வளவு பெரிய அவமானம்?

அவள் கண்களில் தொடர் கண்ணீர்…

ஏன் அழுற? எத்தனையோ பொண்ணுங்களை, உன் புருஷன் அழ வெச்சப்ப வராத கண்ணீர் உனக்குன்னா வருதோ?

அவள் ஏறக்குறைய செத்த பாம்பினைப் போலிருந்தாள். என்னுடைய தொடர் கேள்விகளுக்கும், அடிகளுக்கும் அவள் பழகியிருந்தாள்.

ஆக்சுவலா, எனக்கு உன்னைப் பாத்தா பாவமா இருக்குது. உன் புருஷன், ஒரு வேளை என் அக்காவை பலாத்காரம் பண்ணியிருந்தாக் கூட, ஹரீஸ் மாதிரி ஒரு கணவன், கண்டிப்பா என் அக்காவை ஏத்துக்குவான். சொல்லப்போனா, அதை முழுக்க, தன்னோட தப்புன்னுதான் ஃபீல் பண்ணுவான். ஆனா, உன் நிலை என்னன்னு யோசிச்சியாடி?

இந்தளவு கேடு கெட்ட உன் புருஷனைப் பழி வாங்க, உன்னை மாதிரி முட்டாளை வெச்சு நான் பழிவாங்கனுமா? ஆனாலும், உனக்கு ரொம்பதான் நெனப்புடி!

அவமானத்தின் உச்சியில், கண்களில் கண்ணீருடன், உதட்டைக் கடித்துக் கொண்டு அவள் நின்றாள்.

சரி. போ, போயி, தூங்கி நல்லா ரெஸ்ட் எடு முதல்ல. இனியும் என் ஹெல்ப் வேணும்னா, நாளைக்கு நைட்டு இதே மாதிரி வா. அப்புறம் பேசிக்கலாம்.

ஆனா ஒண்ணூ, நீ நினைக்கிற அளவுக்கெல்லாம், நீ ஒர்த்தே இல்லை. அந்த நெனைப்பை மனசுல இருந்து தூக்கிட்டு, அப்புறமா என் ரூமுக்கு வா!

அவள் அமைதியாக எழுந்து சென்றாள். என் வார்த்தைகள் அவளுக்கு பெரிய அடியை கொடுத்திருப்பது நிச்சயம்.

அடுத்த நாள் இரவு.

இந்த முறை அவளாக என்னைத் தேடி வந்தாள். அவளே கதவை தாழிட்டாள். நேராக விஷயத்துக்கு வந்தாள்.

நான் பேசாம அவரை டைவர்ஸ் பண்ணிடலாம்னு இருக்கேன்.

பண்ணிட்டு?

அவள் அமைதியாக இருந்தாள்.

சினிமா, சீரியல் நிறைய பாப்பியா?

நீயும் என்னை அசிங்கப்படுத்துறல்ல?

பின்ன, நீ எதாவது யோசிச்சு பேசுனா பரவாயில்லை. டைவர்ஸ் பண்ணிட்டு என்னடி பண்ணுவ?

என் புருஷன் கையில எந்தப் பணமும் இல்லை. எல்லாம் என் கண்ட்ரோல்ல, என் பேருலதான் இருக்கு. ஹரீசோட சொத்துல எமாத்துனது கூட என் பேருலதான் சொத்தா மாறியிருக்கு. எல்லாம் ஊருல இருக்கு.

பணம் இருக்கு ஓகே. அது எத்தனை நாளுக்கு? உன் ஸ்டேட்டஸ் என்ன ஆகும்? அதே க்ரூப் கூட நீ பழக முடியுமா? டைவர்ஸ் ஆகிட்டு நீ எங்க போவ? என்ன பாதுகாப்பு, உனக்கும், உன் சொத்துக்கும்? நீ ஏறக்குறைய புதுசா ஒரு வாழ்க்கையைத் தொடங்கனும். அது முடியுமா? உன்னால ஏதாவது வேலைக்கு போக முடியுமா? எல்லாத்துக்கும் மேல என்ன காரணம் சொல்லுவ? இது தெரிஞ்சதுதானே, இப்ப என்ன புதுசான்னுதான் எல்லாரும் கேப்பாங்க? எல்லாத்துக்கும் மேல உன் பையனை எப்பிடி வளர்ப்ப? அவன்கிட்ட என்னான்னு சொல்லி விளக்குவ?

அவளுக்கு அந்தக் கேள்விகள் சரியென்று பட்டாலும், கேள்வி கேட்டாள்.

ஏன் நீ ஹெல்ப் பண்ண மாட்டியா?

5 Comments

  1. Raji enaku mail pannu

    1. Raji waiting un msg ku

  2. ஒரு காம கதை போல் அல்லாமல், ஒரு நாவல் போல் மிகவும் interesting ah படித்துக் கொண்டிருக்கிறேன். கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

    1. Apdithan irukum honey rose virupam irutha peslam vanga

    2. Yen mail ku valavanmadhan yen mail

Comments are closed.