சிறிது நேரம் கழித்து அக்கா மட்டும் என் அறைக்குள் வந்தாள். நான் அவளையேப் பார்த்தேன்.
ஹரீசை அனுப்பியிருக்கேன்.
நான் தலையசைத்தேன்.
அவளும் என்னருகில் அமர்ந்தாள்.
இருவரும் தனித்தனியே அமர்ந்திருந்தாலும், இருவர் மனமும் வருத்தத்தில் இருந்தாலும், நாங்கள் இருவரும் ஒரே விஷயத்தைப் பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தோம்.
மெல்ல மெல்ல எங்கள் நினைவுகள் பின் நோக்கி நகர ஆரம்பித்தது!
நண்பர்களே, இவிங்க ரெண்டு பேரும் ஃப்ளாஸ்பேக்குக்கு போயிட்டாங்க. ஹரீஸூம் முக்கிய வேலையா வெளிய போயிருக்கார். அதுக்குள்ள வேணா, ஹரீஸ் அப்டி என்ன செஞ்சு பழிவாங்குனான்னு பாத்துட்டு வந்துடுவோமா???
***********************************************************************************
மூன்று மாதங்களுக்கு முன்…
கம்பெனியில், அக்காவிடம், ‘பகைவனை உறவாடிக் கெடு’ என்று சொன்ன பின், நீ முதல்ல, அங்க போ. நான் இன்னும் ரெண்டு மூணு நாள்ல அங்க வருவேன். நீ சர்ப்ரைஸ் மாதிரி காட்டிக்கோ என்று சொல்லியிருந்தேன்.
அது மட்டுமில்லை, நான் கொஞ்ச நாள் அங்க தங்குற மாதிரியும் இருக்கும். நீ, அவிங்க முன்னாடி, என்கிட்ட ரொம்ப நெருக்கமாவும் காட்டிக்காத, அதே சமயம், வெறுப்பாவும் காட்டிக்காத. வேறெதாவதுன்னா, நானே சொல்றேன்.
சரிங்க சார், வேற ஏதாச்சும் இருக்கா என்று அவள் கிண்டல் செய்தாள்.
எனக்கும் அது சந்தோஷமாகத்தான் இருந்தது. ரெண்டு நாட்களுக்கு முன், அந்த வீட்டுக்குச் செல்ல பயப்பட்டவள், இப்போது கிண்டலடிக்கிறாள் என்றால், அவள் பழைய தன்னம்பிக்கையை பெற்றுவிட்டாள்! அது போதும்!
சொன்ன படியே அவள் அடுத்த நாள் கிளம்பினாள். (ஹாரீஸ் இருப்பது பெங்களூரில், நான் இருப்பது சென்னையில்)
இரண்டு நாட்கள் கழித்து. ஒரு மாலை நேரம்!
காலிங்பெல் அடித்தது! கதவைத் திறந்தது என் அக்காவின் மாமனார்! அவர் பெயர் மோகன்.
ஹாய் மதன்! வெல்கம். ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்குதான் வந்திருக்கீங்க. வெல்கம். வெல்கம்!
உள்ளிருந்து என் அக்காவும், ஹரீஸும் வந்தார்கள்.
ஹாய் மதன், வெல்கம்! இது ஹரீஸ்!
தாங்க்ஸ்! எல்லாரும் எப்படி இருக்கீங்க?
நல்லா இருக்கோம், நீதான் கல்யாணத்துக்கு அப்புறம் இப்பதான் வந்திருக்க! வெல்கம். எப்டியிருக்க?
வா மதன்! எப்டியிருக்கே? வரேன்னு ஃபோன் எதுவும் பண்ணவே இல்லை? இது அக்கா!
திடீர் ப்ளான்தான். இங்க முக்கியமான மீட்டிங்ஸ். எதிர்பார்த்ததை விட கொஞ்சம் ஏர்லியாவே முடிஞ்சிடுச்சி. அதான் அப்படியே பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.
ஓ, ஓகே!
அப்போது உள்ளிருந்து ஹரீஸின் சித்தி வந்தாள்.
ஹாய் மதன். வாங்க? எப்டியிருக்கீங்க?
நல்லாயிருக்கேன், நீங்க எல்லாரும் எப்டி இருக்கீங்க?
நாங்க எல்லாரும் நல்லாயிருக்கோம். உனக்கு பிசினஸ் எப்டி போகுது? அதைக் கேட்கவே வேண்டாம், இண்டஸ்ட்ரி நியூஸ் எல்லாம் செம பாசிடிவ். ஷேர் வேல்யூ கூட அதிகமாயிட்டே போகுதுன்னு கேள்விப்பட்டேன். கேட்க சந்தோஷமா இருக்கு!
மெல்ல பேச்சு பிசினஸை ஒட்டியே சென்றது. நான், ஹரீஸ், மோகன் மூவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அக்கா சும்மாவே உட்கார்ந்திருந்தாள்.
ஒன்றைக் கவனித்திருந்தேன். ஹரீஸ், என் பணத்திற்காக போலி மரியாதையெல்லாம் காட்டவேயில்லை. மனைவியின் தம்பி என்ற அக்கறை கலந்த பாசமும், தனிப்பட்ட முறையில் என் சிறுவயது முதலான வாழ்க்கையைத் தெரிந்ததால், என் மீது ஒரு மரியாதையும் இருந்தாலும், வா போ என்றுதான் பேசினார். அதே சமயம், வார்த்தைகளில் மரியாதையும், பாராட்டும் இருந்தது. அதுவே அவரது நல்ல குணத்தைக் காட்டியது.
ஆனால், அவர் சித்தப்பா, சித்தியோ போலி மரியாதையைக் காட்டினர். என்னால், அவர்களின் செயல்களில் இருந்த போலித்தன்மையை மிக எளிதில் கண்டு பிடிக்க முடிந்தது. இதை எப்படி ஹரீஸ் கண்டுபிடிக்காமல் இருந்தார்?
Rahi unaku than wait yen mail valavanmadhan gmail vantha pesu
Entha kathai irukku Bor Vera kathai poodinga sex vendim
Rahi commmnds paaru enta stroy iruku neriya
Raji ma
Raji unaku tha commmads reply pannu mail ku valavanmadhan at gmail y mail stroy anupuran
Raji
Raji ma