யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 6 167

குழம்பி சிந்தித்து கொண்டிருந்தான். . இரவு பத்து மணிக்கு மேல் ஆனதால். . ஆள் நடமாட்டம் குறைய தொடங்கியது. ரவி பாண்டிச்சேரி பேருந்து நிலையத்திலேயே அமர்ந்தான்.. வயிறும் பசியெடுக்க ஆரம்பித்தது சோர்வுடன் கன்னத்திலேயே கை வைத்து தூங்கினான்.. பத்து நிமிடம் கூட இருந்திருக்காது.. ஒரு குரல் அவனை அதட்டி எழுப்பியது ” ஹோய் தம்பி…. ஹோய்… எழுந்துரு . .. ”

ரவி மெதுவாக கண்விழித்து பார்த்தான்.. காக்கி உடையில் ஒருவன் நின்றிருந்தான்.. கண்ணை நன்கு விரித்து பார்த்தான்… அது பாண்டிச்சேரி போலிஸ்.. சிறிது பயத்தில் எழுந்து நின்று. . அவரின் தொப்பியை பார்த்ததும் அவ்வளவு பசியிலும், சோர்விலிலும், குழப்பத்திலும் , பயத்திலும் ரவிக்கு உதட்டோரத்தில் சிரிப்பு வந்து மறைந்தது.. என்ன பாண்டிச்சேரி ல போலிஸ் தொப்பி இப்படி காமெடியா இருக்கு என சிந்தித்தான்.. மீண்டும் அந்த போலிஸின் குரல் ” ஏய். .. யாரு நீ.. ”

ரவி ” சார்.. நானு காஞ்சிபுரத்தில இருந்து வரேன் சார்.. ப்ரெண்டு வரேனு சொன்னான் அதான் வெயிட் பன்றேன் சார்” என பொய் கூறினான்

போலிஸ் ” அப்படியா .. உன்ன பாத்தா சந்தேகமா இருக்கு . . சரி. . உன்கூட நானும் வைட் பன்றேன்.. உன் ப்ரெண்டு வரலனு…வை.. அப்பரம் இருக்கு உனக்கு ” என கூறி அருகில் அமந்தார்

ரவி மனதில் ” போச்சி டா … இன்னைக்கு நான்.. காலி… ” என நினைத்து அடுத்து என்ன செய்து தப்பிக்கலாம் என்று சிந்தித்தான். அவன் மூளை குமார் கொடுத்த எண்ணிற்க்கு அழைக்க கூறியது. உடனே போலிஸிடம் ” சார்.. ”

போலிஸ் ” என்னடா. .”

ரவி “சார் என் ப்ரெண்டுக்கு ஒரு கால் பன்னனும்.. உங்க மொபைல் வேனும்”

போலிஸ் ” இந்தா. .. சீக்கிரம் ஃபோன் போட்டு அவன இங்க வரசொல்லு” என ரவியிடம் கைபேசியை கொடுத்தார்

ரவி அந்த எண்ணுக்கு அழைத்தான்.. அந்த பக்கம் தூக்க கலக்கத்தில் ஒரு பெண்ணின் குரல் ” ஹலோ. … யாரு..”

ரவி ” நான்…. நானு. …… நான்..” என என்ன கூறுவது தெரியாமல் முழித்தான்

அந்த பெண் ” ஹலோ. .. யாருங்க… நைட் நேரத்துல. ..”

ரவி ” நான்.. ரவி பேசுறேன்…”

“எந்த ரவி”

“என் ப்ரெண்டு குமார், செல்வம் உங்க நம்பர் கொடுத்தாங்க”

“ஓஓஓ. … அந்த காஞ்சிபுரம் பார்ட்டியா நீங்க மூனு பேர்… கரைட்?”

” ஆமாங்க… ஆனா. .. குமாரும் செல்வமும் வரல… நான் மட்டும் தான் பாண்டிச்சேரி க்கு வந்துருக்கேன்”

” நீங்க மட்டும்தானா… குட்… நான் சொல்லுற அட்ரஸ்க்கு வந்துடுங்க…”

3 Comments

  1. Next epo

Comments are closed.