ஒரு நிமிஷம் நெஞ்சு விம்மி துடிக்க … உண்மையில் எனக்கு கோவம் போயி சோகம்தான் வந்து குடி கொண்டது ஆனா அப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம்னு … வீணா கொஞ்சம் வா அம்மா பேசுறாங்க !
குடுங்க குடுங்கன்னு அங்கேயே உக்கார்ந்தபடி போன் கேக்க நானும் அதை அவளிடம் குடுத்துட்டு தான் யோசித்தேன் …
ஐயோ அம்மா இப்ப அது யாருன்னு கேட்டு என்னை மாட்டி விட்டுருவாங்களோ …
சொல்லுங்க அத்தை நல்லாருக்கீங்களா ?
….
ஆங் எல்லாரும் நல்லாருக்கோம் அத்தை… என்ன சொல்றார் உங்க மகன் ? விருந்துல எதுனா குறையா ?
…
அதெல்லாம் இல்லை அத்தை அப்பா தான் சமையல் …
….
ஓ ! அவர் எங்க வீட்ல ஒருத்தர் மாதிரி அவர் பேர் இம்ரான் …
….
ம்ம் ஆமாம் அத்தை அம்மா சொன்னாங்களா ?
…
ம்ம் ! அதுக்கு இவர் கோச்சிக்கிட்டாரா ?
…
இல்லை அத்தை அவர் கல்யாணத்துக்கு வர முடியல அப்புறம் விருந்து போடணும் தான ?
….
சரிங்கத்தை …. இல்லை இல்லை அதெல்லாம் ஒன்னுமில்லை …
….
தோ கொடுக்குறேன் அத்தை … என் மாமியார் வாங்கி பேசுனாங்க ..
வீணா என்னிடம் வந்து …
என்ன இம்ரான் பத்தி என்ன சொன்னீங்க ?
இல்லை ஒன்னும் சொல்லல அவரும் விருந்துக்கு வந்துருக்காருன்னு சொன்னேன் !!!
ஏன் அவரு விருந்துக்கு வரக்கூடாதா ?
அப்டிலாம் சொல்லல எனக்கு மட்டும் இல்லை அவருக்கும் சேர்த்து தான்னு சொன்னேன் !!
ம்ம் … உங்களுக்கு ஒன்னும் தெரியல அப்புறம் பேசலாம் வாங்க உள்ள …
நான் உள்ளே வர அங்க இம்ரான் என் அம்மாகிட்ட போன்ல பேசிட்டு இருந்தான் …
ஏனோ அவன் என் அம்மாவிடம் பேசுவதே ஒரு மாதிரியாக இருந்தது !!!
கண்டிப்பா பாப்போம் இங்க வரும்போதுனாலும் ஓகே அங்க வரதுனாலும் ஓகே தான் …
I like different story.daily two part update pls