இதெல்லாம் ஜஸ்ட் ஒரு வார கேப்ல நடந்தது நானோ தினம் தினம் என் வேலை விஷயமாக அலைஞ்சி திரிஞ்சிட்டு வந்து படுத்து தூங்கவே நேரம் சரியா இருக்கும் !
வீணா பகலில் தூங்கிட்டு ராத்திரில என்ன இன்னைக்கும் டயரட்டான்னு வெறுப்பா கேட்டுட்டு டேப் எடுத்து கைல வச்சுக்கிட்டா ….
ஹனி மூன் போகும்போது பாத்துக்கலாம்னு சொல்லி சமாளிச்சிட்டு இருக்கேன் …
என்னாகப்போகுதோ ?
ஆனா புதுமணத்தம்பதிக்கு உள்ள அந்த சின்ன சின்ன ரொமான்ஸ் இல்லாம வாழ்கை இவளோ சீக்கிரம் இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை
இரவில் நல்லா ஆட்டம் ஆடினால் தான் பகலில் சின்ன சின்ன ரொமான்ஸ் நடத்த முடியும் அதை செய்யாம ரொமான்ஸ் மட்டும் பத்தி பேசி என்ன பயன் …
இதெல்லாத்துக்கும் சிகரம் வைத்தார் போல ஒரு சம்பவம் நடந்தது நடந்து கொண்டிருக்கிறது …
ஆமாங்க கார்த்தி இம்ரான் ரெண்டு பேரும் என் மனைவிக்கு போன்ல மணிக்கணக்கா பேசும் அளவுக்கு போயிட்டாங்க எங்கம்மா வேற பேசுறாங்க அதனால என்னால அதை தடுக்கவும் முடியாது கேட்கவும் முடியாது …
இவ எப்படி என் அம்மாவை மடக்கி போட்டா ?
பெரியம்மா சொன்ன மாதிரி எங்கப்பாவோட கண்டிஷனும் ஸ்ட்ரிக்ட்டும் தான் என் அம்மாவை இப்படி ஆக்கிடிச்சோ ?
இரவுகளில் மாத்திரை போட்டு போட்டு பண்ண ….
நெஞ்சு வலி தான் அதிகமானது …
பேசாம ஒரு டாக்டரை பார்ப்பதே நல்லது இதெல்லாம் நிரந்தரம் அல்லன்னு நானும் நண்பர்களிடம் விசாரித்து ஒரு முறையான டாக்டரிடம் போனேன் !!
அவரிடம் என் மனைவி பத்திலாம் சொல்லல … இந்த மாதிரி முதலிரவில் தடுமாறிட்டேன் அடுத்தடுத்த நாட்கள் ஒன்னும் நடக்கலைனு சொன்னதும் அவர் டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்துட்டு …
மிஸ்டர்.மோகன் உங்க உடம்புக்கு ஒன்னும் இல்லை ஒரு அப்பா ஆவதற்கு முழு தகுதியும் இருக்கு …
இந்த எரெக்ஷன் பிரச்சனைக்கு மாத்திரை தரேன் … கொஞ்ச நாள்ல அது தானா சரியாகிடும் !!
எல்லாத்துக்கும் மனசு தான் காரணம் மனசை போட்டு குழப்பாதீங்க யு ஆர் பர்பெக்ட்லி ஆல் ரைட் …
அதன்பிறகு எனக்குள் ஒரு தைரியம் வந்தது …
சரி நாம தான் தேவை இல்லாம மனச குழப்பிக்கிறோம் …
வீட்டில் மாத்திரைகளை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தேன் …
அன்று வீட்டில் என் மனைவியும் அம்மாவும் சேர்ந்து சமைச்சிக்கிட்டு இருந்தாங்க … நான் அப்படியே நின்று அவங்க என்ன பேசிக்கிறாங்கன்னு கவனிக்க … என்னால தாங்க முடியல இதை எப்படி சமாளிக்க போறேன்னு தெரியல …
ஆமாங்க அவங்க பேசிக்கொண்டது இம்ரானையும் கார்த்தியையும் பற்றி தான் … இது எங்க கொண்டு போய் விடுமோ ?!
எதோ அவங்க பேச்சை தடுப்பது போல … வேலைக்காரம்மா எங்கம்மா ?
இன்னைக்கு வரல நாளைக்கு வருவா
வேலைக்காரி மேல உங்களுக்கு என்ன அக்கறை ?
இல்லை வேலை செய்யிறீங்களேன்னு கேட்டேன் ..
அடேங்கப்பா எவளோ அக்கரைடா உனக்கு …
இத்தனை வருஷமா நான் வேலை செஞ்சேன் ஆனா பொண்டாட்டி வந்தோன வேலைக்காரி வச்சிட்ட…
அம்மா இத்தனை நாள் நீ கேக்கலையேம்மா …
இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான் நாம கேட்டா தான் செய்வாங்க அவங்களுக்கா தோணாது போல …
ஆகா என் பொண்டாட்டி எதோ டபுள் மீனிங்க்ல பேசுறா போல பேசாம நாம சைலன்ட் ஆகிடுவோம் …
I like different story.daily two part update pls