பழிக்குப்பழி End 150

இரவு 7 மணி இருக்கும் அவனுக்கு போன் செய்தேன், ரிசல்ட் நாளை காலை தெரிந்து விடும் நேராக என் பழைய கிளினிக்க்கு வந்து விடுங்கள் என்றேன், அவனும் செரி டாக்டர் என்று ஆர்வமாக சொன்னான், இன்று தான் உனக்கு கடைசி இரவு, நன்றாக நிம்மதியாக உறங்கிக்கொள் என்று எனக்குள் சொல்லி கொண்டேன், இவளும் நாழு வேளையாக ஏதும் சாப்பிடவில்லை, செரி இவளை தனியே விட்டு செல்ல வேண்டாம் என்று முடிவு செய்து, என் மனைவியிடம் வேலை இருக்கிறது நான் கோயம்புத்தூர் போகிறேன் நாளை தான் வருவேன் என்று phoneஇல் சொல்லிவிட்டேன்,

அவளை பார்க்கவே ரொம்ப பாவமாக இருந்தது, நான் அவளுக்கு மீண்டும் ஒரு இன்ஜெக்ஷன் போட்டுவிட்டு அங்கேயே படுத்துக்கொண்டேன், காலை பொழுது விடிந்தது, அவள் என் பக்கமாக வயிற்றை பிடித்தபடி படுத்து இருந்தாள், மணி 5 இன்னும் 2 மணி நேரம் தான், எல்லாமே ரெடி ஆக இருந்தது, அவனை கொலை செய்ய காத்துக்கொண்டிருந்தேன்….

அவளை பார்க்கவே ரொம்ப பாவமாக இருந்தது, நான் அவளுக்கு மீண்டும் ஒரு இன்ஜெக்ஷன் போட்டுவிட்டு அங்கேயே படுத்துக்கொண்டேன், காலை பொழுது விடிந்தது, அவள் என் பக்கமாக வயிற்றை பிடித்தபடி படுத்து இருந்தாள், மணி 5 இன்னும் 2 மணி நேரம் தான், எல்லாமே ரெடி ஆக இருந்தது, அவனை கொலை செய்ய காத்துக்கொண்டிருந்தேன்….

மணி 7ஐ தாண்டியது, இன்னும் வரவில்லையே என்று கால் செய்தேன்,
இன்னும் 10 நிமிடத்தில் வந்துவிடுவேன் என்றால் , உங்கள் டிரைவரையும் கூட்டி கொண்டு வந்துருங்க, அவருக்கும் டெஸ்ட் எடுத்துடலாம் என்றேன், அவனும் என்கூட தான் வர்றான் என்றான், நான் செய்த arrangements எல்லாம் என்ன என்று தெரியாமல் உட்கார்ந்து இருந்தாள் பவித்ரா, சொன்னதுபோலவே 10 நிமிடத்தில் என் பழைய கிளினிக் வந்தான்,

உள்ளே வரும்போதே பவித்ராவை பார்த்து கண் அடித்தான், அவள் முகத்தை திருப்பி கொண்டாள், என்னை பார்த்ததும் ஏதும் தெரியாதது போல இருந்து கொண்டான், எனக்கு கடுங்கோபமாக இருந்தது, முதலில் அவன் டிரைவரை கூப்பிட்டேன், வா தம்பி உனக்கும் டெஸ்ட் எடுத்து பாத்துடலாம் என்றேன், அவன் வேண்டாம் என்றான், பிறகு கம்பெல் செய்ய வந்தான், மயக்க மருந்து 10mg குடுத்தேன், கண்ணை மூடிக்கொள்ள சொன்னேன், இன்னும் 2 நிமிடத்தில் அவன் மயங்கி விடுவான்,

1 Comment

  1. Super super super super super super super super super super super super super

Comments are closed.