பழிக்குப்பழி End 150

அன்றைய இரவு அப்படியே கழிந்தது, பவித்ரா இங்கே இருக்க வேணாம் வா போலாம் என்று அவளை கூட்டிக்கொண்டு என் வீட்டின் மேல் தங்கவைத்தேன், அவர்கள் இருவருக்கும் சீக்கிரம் காயம் குணமாக மருந்து மாத்திரைகள் கொடுத்தேன், எப்போதும் கல கல வென்று பேசிக்கொண்டே இருக்கும் பெண் இப்படி அமைதியாக இருக்கிறாளே என்று அவளை பார்க்கும் போது கஷ்டமாக இருந்தது, இத்தனை நாள் அவள் மேல் எனக்கு இருந்த வெறுப்பு கோபம் எல்லாம் காணாமல் போனது, இவளும் என் மகளை போல, தாங்கமுடியாத துயரத்தை அனுபவித்து இருக்கிறாள் என்று அவள் மேல் பரிதாபம் தான் தோன்றியது, என் பழிவாங்கும் எண்ணமும் கரைந்து போனது.

3நாட்கள் கழிந்தது, காயம் நன்றாக குணமானது, என்ன அவன் கை கால்கள் இல்லாததால் அவனை குளிப்பாட்டி, சோறூட்டி, கை கால்கள் கழுவி விட்டு சேவை செய்வது தான் கடுப்பாக இருந்தது. அந்த இரவே அவர்கள் இருவரையும் அவன் மில் முன்பு போட்டுவிட்டு வந்துவிட்டேன்,

அவர்களால் பேசமுடியாது, பார்க்க முடியாது, என்னை காட்டி கொடுக்கவும் முடியாது. என் கையை நன்றாக சுத்தம் செய்தேன், அந்த வாரம் முழுவதும் ஊரே அவர்களை பற்றி தான் பேச்சு, எதிரிகள் அதிகமாக இருப்பதால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஒரு வாரம் ஆனது, பவித்ரா ஓரளவு குணமானாள், என்னிடம் ஓரிரு வார்த்தைகள் பேச ஆரம்பித்தாள்,

எனக்கு நன்றி சொன்னாள், அவள் எனக்கு கடமை பட்டு இருப்பதாக சொன்னாள், சீக்கிரமே நார்மல் ஆனாள். என் பழிவாங்கும் எண்ணம் தான் போய்விட்டதே இனியும் இவளை இங்கே அடைத்து வைத்திருப்பது செரியல்ல என்று அவளை விடுவித்துவிடலாம் என்று முடிவு செய்தேன்..

எனக்கு நன்றி சொன்னாள், அவள் எனக்கு கடமை பட்டு இருப்பதாக சொன்னாள், சீக்கிரமே நார்மல் ஆனாள். என் பழிவாங்கும் எண்ணம் தான் போய்விட்டதே இனியும் இவளை இங்கே அடைத்து வைத்திருப்பது செரியல்ல என்று அவளை விடுவித்துவிடலாம் என்று முடிவு செய்தேன்….

1 Comment

  1. Super super super super super super super super super super super super super

Comments are closed.