நான் செய்த எல்லா தவறுக்கும் இதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும் End 27

இனி எந்த காரணத்தை சொல்லியும் என் மனைவியை வெளியூர் அனுப்ப முடியாது, செரி ஆழ்ந்த யோசனைக்கு பிறகு அவளை மீண்டும் என் பழைய ரூமிர்க்கே கொண்டு வந்து விட்டேன், அதான் ராஜாவுக்கும் அவளை யாரென்று சொல்லிவிட்டேனே, அதனால் இனி எந்த பிரச்னையும் இருக்காது என்று அவளை அங்கேயே விட்டேன். இனி இந்த ராஜா, அவனை பயமுறுத்தியே வைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்து வீட்டுக்கு கிளம்பினேன், நான் வரும்பொழுது என் மனைவி மேலே இருந்த ரூமை mop போட்டு கொண்டிருந்தாள், ஏங்க நீங்க ஏற்கனவே கிளீன் பண்ணி வெச்சிருந்திங்களா, அதை சொல்ல வேண்டியது தானே என்றாள், நல்ல வேளை நான் தப்பித்தேன் என்று நினைத்தேன்,

கொஞ்சம் ரிலாக்சாக இருந்தேன், அதற்க்குள் இந்த ராஜா வேறு கால் செய்து கொண்டே இருந்தான், நானும் cut பண்ணி விட்டேன், ஒருநாள் கூட ஆகவில்லை அதற்குள் அவ்வளவு அழும்பு, நல்லா பயந்து போயிருக்கான் போல, இரவு ஒரு 9 மணி இருக்கும் மனைவியிடம் வெளியே போயிட்டு வர்றேன் என்று சொல்லிவிட்டு, பவித்ராவுக்கு இரவு உணவு எடுத்து கொண்டு போனேன், கதவை திறந்து உள்ளே போனேன், பெட்டில் படுக்காமல் கீழே படுத்திருந்தாள்,

கோபம் போல, நான் பேசினேன் என்னை கண்டுகொள்ளவே இல்லை, கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, வேற ஐடியா யோசிக்கிறேன் என்று சொன்னேன், அவள் கோபமாக இருந்தாள் என் முகத்தை பார்க்கவே இல்லை, செரி சாப்பிடு time ஆச்சு என்று சொன்னேன், அதற்கும் பதில் சொல்லவே இல்லை, செரி என்று நான் உணவை வைத்து விட்டு நான் கிளம்பினேன், நிம்மதியாக பொழுது விடிந்தது, 9மணிக்கு சாப்பிட்டேன், ஒரு 20நிமிடத்தில் பவித்ராவுக்கும் சேர்த்து உணவு எடுத்துகொண்டு போனேன்,

கதவை திறந்தேன், அதே போல் கீழே படுத்து இருந்தாள், நான் இரவு கொடுத்த உணவயும் சாப்பிடவில்லை, எனக்கு ஏதோ தவறாக தெரிந்தது, அவளை பார்த்தால் கோபமாக இருப்பது போல தெரியவில்லை, ஆனால் என்மேல் கோபம் காட்டினாள், என்னாச்சு என்றேன் ஏதும் பேசவில்லை, அவள் பக்கம் அமர்ந்தேன், திடீரென்று என்னை கட்டிபிடித்து அழுக ஆரம்பித்துவிட்டாள், என்னாச்சு என்னாச்சு என்றேன், சொல்லாமல் கத்தி அழுதாள், வயிறை பிடுத்து கொண்டு அழுதாள், செரி தள்ளு நான் பார்க்கிறேன் என்றேன்,

பார்த்தால் அந்த இடம் ரத்தமாக இருந்தது, என்ன ஆச்சு சொல்லு என்றேன், நேத்து சாயங்காலம் அந்த ராஜபாண்டி வந்தான் என்று சொல்லி அழுதாள், எனக்கெல்லாம் புரிந்தது, அவளை தூக்கி பெட்டில் போட்டேன், மிகப்பெரிய கோபம் வந்தது அவன்மேல், அவளை குளிக்க வைத்து இன்ஜெக்ஷன் போட்டேன், இனிமேல் வலிக்காது என்று சொன்னேன், என்னை கண்ணை நேரில் பார்க்கவே தயங்கினாள், எனக்கும் ரொம்ப குற்ற உணர்ச்சியாக இருந்தது, மீண்டும் இன்னொரு பெண்னை பாதுகாக்க தவறி இருக்கிறேன்,

நேத்து அவன் கால் செய்தபோதே அட்டெண்ட் செய்து இருந்தால், இவளுக்கு இவ்வளவு பெரிய தீங்கு ஏற்பட்டு இருக்காது. ரொம்பவே கஷ்டமாக இருந்தது, என்னிடம் எதுவுமே பேசவில்லை அழுதபடியே இருந்தாள், இனியும் தாமதிக்க கூடாது, நான் செய்த எல்லா தவறையும் செரி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன், ஒரு முறைக்கு பத்து முறை யோசித்தேன், முதலில் ராஜாபாண்டியை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன், அதற்க்கு தேவையான எல்லாவற்றையும் செரியாக பிளான் செய்தேன், அவனை கொன்றால் மட்டும் எல்லாம் செரி ஆகாது, அவன் அடியாளான அவன் டிரைவரையும் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன்,

இருவரையும் எப்படி கொலை செய்ய போகிறோம் என்பதையும் நன்றாக தீர்மானித்துவிட்டேன், எதுவுமே தவறாக போகாதபடி பிளான் செய்து கொண்டேன், பவித்ராவிடம் இதைப்பற்றி ஏதும் நான் பேசிக்கொள்ளவில்லை, அவளுக்கே இது அதரிச்சியாக தான் இருக்கும், ஆனால் பழையநிலைக்கு அவளை என்னால் கொண்டு வரமுடியும் என்று நம்பினேன்,

இரவு 7 மணி இருக்கும் அவனுக்கு போன் செய்தேன், ரிசல்ட் நாளை காலை தெரிந்து விடும் நேராக என் பழைய கிளினிக்க்கு வந்து விடுங்கள் என்றேன், அவனும் செரி டாக்டர் என்று ஆர்வமாக சொன்னான், இன்று தான் உனக்கு கடைசி இரவு, நன்றாக நிம்மதியாக உறங்கிக்கொள் என்று எனக்குள் சொல்லி கொண்டேன், இவளும் நாழு வேளையாக ஏதும் சாப்பிடவில்லை, செரி இவளை தனியே விட்டு செல்ல வேண்டாம் என்று முடிவு செய்து, என் மனைவியிடம் வேலை இருக்கிறது நான் கோயம்புத்தூர் போகிறேன் நாளை தான் வருவேன் என்று phoneஇல் சொல்லிவிட்டேன்,

அவளை பார்க்கவே ரொம்ப பாவமாக இருந்தது, நான் அவளுக்கு மீண்டும் ஒரு இன்ஜெக்ஷன் போட்டுவிட்டு அங்கேயே படுத்துக்கொண்டேன், காலை பொழுது விடிந்தது, அவள் என் பக்கமாக வயிற்றை பிடித்தபடி படுத்து இருந்தாள், மணி 5 இன்னும் 2 மணி நேரம் தான், எல்லாமே ரெடி ஆக இருந்தது, அவனை கொலை செய்ய காத்துக்கொண்டிருந்தேன்….

மணி 7ஐ தாண்டியது, இன்னும் வரவில்லையே என்று கால் செய்தேன்,
இன்னும் 10 நிமிடத்தில் வந்துவிடுவேன் என்றால் , உங்கள் டிரைவரையும் கூட்டி கொண்டு வந்துருங்க, அவருக்கும் டெஸ்ட் எடுத்துடலாம் என்றேன், அவனும் என்கூட தான் வர்றான் என்றான், நான் செய்த arrangements எல்லாம் என்ன என்று தெரியாமல் உட்கார்ந்து இருந்தாள் பவித்ரா, சொன்னதுபோலவே 10 நிமிடத்தில் என் பழைய கிளினிக் வந்தான்,

உள்ளே வரும்போதே பவித்ராவை பார்த்து கண் அடித்தான், அவள் முகத்தை திருப்பி கொண்டாள், என்னை பார்த்ததும் ஏதும் தெரியாதது போல இருந்து கொண்டான், எனக்கு கடுங்கோபமாக இருந்தது, முதலில் அவன் டிரைவரை கூப்பிட்டேன், வா தம்பி உனக்கும் டெஸ்ட் எடுத்து பாத்துடலாம் என்றேன், அவன் வேண்டாம் என்றான், பிறகு கம்பெல் செய்ய வந்தான், மயக்க மருந்து 10mg குடுத்தேன், கண்ணை மூடிக்கொள்ள சொன்னேன், இன்னும் 2 நிமிடத்தில் அவன் மயங்கி விடுவான்,

அவன் தான் கொஞ்சம் பலசாலி அவனை உட்காரவைத்து விட்டால் இவனை சுலபமாக சமாளித்து விடலாம் என்று முடிவு செய்தேன், ராஜா ஆர்வமாக டாக்டர் ரிசல்ட் என்றான், வாங்க ராஜா இங்கே உட்காருங்க அப்போ எடுத்ததுல அவளோ துல்லியமாக இல்லை, என்ன டாக்டர் இப்டி சொல்றிங்க என்றான், இப்போ இங்கேயே நான் machine எடுத்துட்டு வண்ட்டேன், வாங்க இப்போவே செக் பண்ணி சொல்லிடறேன் என்றேன்,

3 Comments

  1. Admin mannichidunga raam story 12 cont..

  2. மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் நெக்ஸ்ட் பார்ட் எப்போ அட்மின்

  3. Crime and father stroy not sex story

Comments are closed.