நான் செய்த எல்லா தவறுக்கும் இதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும் End 27

அழுகையை அடக்கி கொண்டாள், கண்ணெல்லாம் அப்படி சிவந்து போயிருந்தது, நான் என்ன பண்ணா என்மேல உனக்கு கோபம் போகும் என்றாள், நீ என்ன பண்ணாலும் நடந்தத மாத்த முடியாதுல, அதுபோல தான் என் கோபத்தையும் என்றேன், கண்ணில் நீர் வந்தது அவளுக்கு, என் மனசை ஒடச்சுட்டல்ல, இதுக்கு நீ என்னை பேசாம கொன்னு இருக்கலாம், தினமும் உன் முகம் பாக்காம உன்கூட பேசாம என்னால எப்படி இருக்க போறேன் சொல்லு, எனக்கு வாழ்க்கையிலே யார்ட்டையுமே அன்பு கிடைச்சது இல்ல, என்கிட்ட அன்பா இருந்தியோ இல்லையோன்னு தெரில, ஆனா என்ன ரொம்ப நல்லா பாத்துகிட்ட,

dont worry இந்த கோபத்தைலாம் உன் பொண்ணு மேல காட்ட மாட்டேன் என்றாள், நான் சிரித்தேன், இனிமே அவல அவ அம்மாவை விட நான் நல்லா பாத்துக்வேன், அவளுக்காகலாம் இல்ல, நான் உன்மேல வெச்சிருக்க loveகாக என்றாள். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, ஒரே ஒரு ஆசை எனக்கு நிறவேத்துவியா என்றாள், ஹ்ம்ம் என்றேன், ஒரே ஒருமுறை கட்டி பிடுச்சுக்கிட்டா என்றாள், நான் யோசித்தேன், அதற்குள் பக்கம் வந்து என்னை இறுக்கமாக கட்டிப்பிடித்து நெஞ்சில் சாய்ந்து கொண்டாள், என் சட்டை அவள் கண்ணீரால் ஈரம் ஆனது. என் கையை பிடித்து அவளை கட்டி பிடிக்க சொன்னாள் நான் ஏதும் செய்யவில்லை.

ஒரு 1 நிமிடம் இருக்கும், என்னைவிட்டு விலகி கண்ணை துடைத்துக்கொண்டு திரும்பி பார்க்காமல் சென்றாள். நான் வீட்டுக்கு போகாமல் என் பழைய கிளினிக் சென்றேன், இன்னும் அவள் இங்கேயே இருப்பது போல தோன்றியது, செரி என்று பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்தேன், எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாது போல தோன்றியது, அட எனக்கு என்ன ஆச்சு என்று என்னை பார்க்க எனக்கே பிடிக்கவில்லை, கண்ணாடியில் முகம் பார்க்க, தாடி , அதை பார்த்ததும் அவள் ஞாபகம், உடனே shave செய்தேன், என் மனைவியிடம் பேசக்கூட எனக்கு தோன்றவில்லை.

மனசு வலித்தது, இந்நேரம் பவித்ரா என்ன செய்து கொண்டிருப்பாள், சாப்பிட்டு இருப்பாளா என்று மனசு அடித்துக்கொண்டது, பேசாமல் பாட்டியை பார்ப்பது போல அவளை பார்த்துவிட்டு வந்துவிடலாமா என்றெல்லாம் தோன்றியது, பல்லை கடித்து கொண்டு இரண்டு நாள் ஓட்டினேன், என்னை அறியாமலே பழய கிளினிக் போகிறேன், போய் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறேன், ச்ச ஒருமுறையாவது அவளை கட்டி தழுவி இருந்தாள் என் ஏக்கம் போயிருக்குமே என்று இருந்தது, நான் இப்படி நினைப்பது தவறு, இது என் மனைவிக்கு செய்யும் துரோகம் என்று புத்திக்கு தெரிந்தாலும் மனசுக்கு தெரியவில்லை. என் பவித்ராவை பத்தி சொல்ல வேண்டும் என்றாள், பார்க்க நல்லா பெரிய பொண்ணு போல இருப்பாள், எனக்கே காதுக்கு இருப்பாள், நல்ல அழகு, இதெல்லாமே நான் இப்பொழுது தான் நோட் செய்தேன், எப்போதுமே சிரிக்கின்ற முகம் ஆனால் நக்கல் கொழுப்பு ஜாஸ்தி.

இவ்வளவு நாள் இங்கே இருந்தும் ஒருமுறை கூட என்னை காயப்படுத்தும் எண்ணம் இல்லை அன்று அவ்வளவு அடித்த போது கூட, அமைதியாக அடி வாங்கினாள், அதெல்லாம் நினைக்க நினைக்க கஷ்டமாக இருந்தது,
என்னுடைய marriage arranged marriage, so அதில் பெரிதாக காதல் பகுதி என்று எதுவும் இல்லை, என் வேலையை நான் அதிகமாக காதல் செய்ததால் என் மனைவியை காதலிக்க நேரமில்லை,

ஒருவேளை என் மனைவியை பிரிந்து இருந்தால் நான் உணர்ந்திருப்பேனோ என்னமோ, என் கூடவே தான் இருப்பாள், அவள் மீது அன்பு ஜாஸ்தி, அவள் இல்லை என்றாள் நான் உயிர் வாழ்வது கடினம், இறந்தே போய்விடுவேன், இப்போது அதே நிலை தான் இருக்கிறது, பவித்ராவை நான் விட்டு பிரிந்து இருக்கும் இந்த தருணம், அப்போ இது காதல் தான் என்று புரிந்தது. கேக்க கொஞ்சம் நாராசமாக இருந்தாலும் அதான் உண்மை. இந்த வயதில் அதும் என் பெண்ணை இவ்ளோ தீங்கு செய்த ஒரு பெண்ணின் மீது.

இரவெல்லாம் செரியாக தூக்கம் இல்லை, அவளை பார்க்க மனம் ஏங்கியது, குளித்து முடித்து வந்து ஹாலில் உட்கார்ந்து இருந்தேன், என் பவித்ரா மீண்டும் ஒரு முறை என் முன்னால் நின்றாள், அதிர்ச்சி ஒரு புறம், அவளை பார்த்ததும் மனதுக்குள் பேரானந்தம், ஹே ஏன் இங்கே வந்த என்றேன், என்னால உன்னை பாக்காம இருக்க முடில என்றாள், எனக்கும் தான் என்று மனதில் நினைத்து கொண்டேன், செரி வெளில இரு வர்றேன் என்று சொன்னேன், மனைவியிடம் சொல்லிவிட்டு என் ஜீப்பில் அவளை ஏற்றிக்கொண்டு பழைய கிளினிக் சென்றேன், அங்கே போனவுடன் என்னை இறுக்கமாக கட்டிக்கொண்டாள்,

எனக்கும் அவளை கட்டிபிடிக்க ஆசை தான் ஆனால் ஏதோ தடுக்க என்னால் முடியவில்லை, நான் மரம் போல நின்றேன், இப்டிலாம் வராத என்றேன், ஓங்கி கன்னத்தில் அறைந்தாள், நான் ஷாக் ஆகி நிற்க, எவ்ளோ கஷ்டப்பட்டு உன்னை பாக்க வந்திருக்கேன், போ போங்கிற, மூடிட்டு நில்லு என்று, மீண்டும் கட்டிக்கொண்டாள், எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது, சந்தோசத்தில் கண்ணீர் வரும் போல இருந்தது, இவள் முன் கண்ணீர் வந்தாள் பிறகு போகமாட்டாள் என்று தோன்ற, அடக்கி கொண்டேன், மிஸ் யூ என்றாள். மீ too என்று மனதில் சொல்லி கொண்டேன்.

அவள் bagஇல் சாப்பாடு இருந்தது, கீழே உட்கார்ந்து கொண்டோம், நானே செஞ்சது என்றாள், ம்ம்ம் என்றேன், கோபமா என்றாள் இல்லை என்றேன், sorry என்றாள், என் கன்னத்தை தடவி மீண்டும் sorry கேட்டாள், நான் கையை கீழே தள்ளிவிட்டு கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தேன், சாப்பாடு எடுத்து பிசைந்து எனக்கு ஊட்ட வந்தாள் நான் வேண்டாம் என்று சொல்ல, பிறகு compel செய்ய, வாங்கி கொண்டேன், என் நினைவு தெரிந்து நான் யாரிடமும் share பண்ணி சாப்பிட்டது இல்லை, யாராவது என்னை compel செய்தால் கூட எனக்கு பிடிக்காது என்று நழுவி விடுவேன், ஆனால் இன்று அவள் ஊட்ட ஊட்ட இன்னும் பாத்திரத்தில் தீர்ந்து விட கூடாது என்று வேண்டிக்கொண்டேன்.

வந்து அரை மணி நேரத்திற்கு மேல் ஆனது, நான் கிளம்ப சொன்னேன், போகவே மனசு வரல என்றாள், நானும் போகாதே என்று மனதில் சொன்னேன், அவளை அனுப்பிவிட்டு நடை பிணமாக வீட்டுக்கு போனேன், இரவு முழுக்க தூக்கம் இல்லை, என்னை அறியாமல் கண்ணீர், நான் ஹ்ம்ம் என்று ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிவிடும், இது எனக்கு கிடைத்த தண்டனை என்று நினைத்து கொண்டு இருந்தேன்,

ஒரு வாரம் தாக்கு பிடித்தேன், இனிமேல் அவள் இல்லாமல் முடியாது, காதல் நோயினால் செத்து விடுவேன் என்பது போல தோன்றியது, விடியலுக்காக காத்திருந்தேன், ஆழ்ந்த யோசனைக்கு பிறகு காலையில் நேராக பவித்ரா பாட்டி வீடு சென்றேன், அவள் அங்கே அழுதபடி படுத்து இருந்தாள், என்னை பார்த்ததும் சந்தோசப்பட்டாள், பாட்டி எங்கே என்றேன், வெளில போயிருக்காங்க என்றாள், உன் ட்ரேஸ் எல்லாம் எடுத்து வெச்சுக்கோ என்றேன், அவளும் நான் சொன்னபடியே எடுத்து வைத்தாள்,

வா போலாம் என்று அவள் கையை கோர்த்துகொண்டேன், காருக்குள் சென்றதும் அவளை இறுக்கமாக கட்டி கொண்டேன், முத்தமிட்டேன், கண்ணீர் வழிந்தது, துடைத்து விட்டாள், ரொம்ப சந்தோசபட்டாள், நான் காண்றது கனவா நிஜமா என்றாள், நிஜம் தான் என்றேன். என் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள், இனிமேல் உன்னை ஒரு கணம் பிரியமாட்டேன் என்று சொன்னேன், ரொம்ப சந்தோசபட்டாள், நேராக என் பழைய கிளினிக் வந்தோம், இனி ஏதும் அவளிடம் மறைக்கமாட்டேன் என்று என் காதலை சொன்னேன்,

என் காதலை ஏற்றுக்கொண்டாள், அவளை அன்று அடித்ததற்கு sorry கேட்டேன், ஏன் என்னை திருப்பி கூட அடிக்கல என்றேன், எனக்கு குற்ற உணர்ச்சியா இருந்துச்சு, நான் செஞ்ச தப்புக்கு நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கணும்னு முடிவு பண்ணேன் என்றாள், எனக்கு இப்டி ஆனனால அந்த அனுதாபத்துல தான் லவ் வந்துச்சா என்றாள், இல்லை அதுக்கு முன்னாடியே என்றேன், ரொம்ப சந்தோசபட்டு அழுதாள், அழுகாத இனிமே ஒரு சொட்டு கண்ணீர் கூட உன்னை சிந்த விடமாட்டேன் என்றேன். அன்றைய இரவை அவளுடன் கழித்தேன், இருவருமே வாழ்வில் இதுபோல சந்தோசமாக இருந்ததில்லை என்பதுபோல் இருந்தோம்.

என்னை இறுக்கி அணைத்தபடி நல்லா அசந்து தூங்கி இருந்தாள், நான் அவளை விட்டு மெதுவாக விலகி அவளுக்கு வலிக்காமல் மயக்க ஊசி செலுத்தினேன், கொஞ்ச நேரம் கழித்து விஷ ஊசி செலுத்தினேன், தூக்கத்திலேயே வலியில்லாமல் இறந்து போனாள். கதறி அழுதேன், என்னால் அவள் இல்லாமல் இருக்க முடியாது, அவளும் அப்படித்தான், அவளை மறைத்து வைத்து அவளுடன் வாழ்ந்து என் மனைவிக்கு துரோகம் செய்யவும் எனக்கு மனது வரவில்லை, அதான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன்,

என் பவித்ராவின் ட்ரெஸ், அவளுடைய பொருட்கள் கடைசியில் அவளையும் எடுத்து அந்த ஆசிட் தொட்டியில் போட்டு கரைத்தேன், வீட்டுக்கு வந்தேன், என் மனைவி தூங்கிக்கொண்டு இருந்தாள், அவளுடன் கொஞ்ச நேரம் படுத்துக்கொண்டேன். பக்கத்து ரூமில் இருக்கும் என் மகளை நெற்றியில் முத்தமிட்டு மீண்டும் என் மனைவியிடம் வந்து கட்டி பிடுத்து படுத்துக்கொண்டேன், காலை பொழுது விடிந்தது, எப்படியும் பவித்ராவின் உடல் முழுவதும் கரைந்து இருக்கும் என்று தோன்ற அங்கே போனேன், அதே போல இருந்தது, கண்ணீர் ஊத்தியது, என்னால் நிறுத்தவே முடியவில்லை,

அதை குழியில் கொட்டி, எந்த ஆதாரமும் இருக்க கூடாது என்று ரூமை கிளீன் ஆக சுத்தம் செய்தேன், ரூமை பூட்டி விட்டேன், ஜீப்பை எடுத்து கொண்டு உச்சி மலைக்கு சென்றேன், அப்படியே காரை வேகமாக செலுத்தி மலை மேல் இருந்து காரோடு விழுந்தேன், இன்னும் சற்று நொடியில் நானும் இறந்து விடுவேன். என் மனதில் இருக்கும் எல்லா ஏக்கமும், துக்கமும் என்னோடு செத்துவிடும். நான் accidentஇல் இறந்ததாக தான் நினைப்பார்கள், ஏனென்றால் brake wireஐ லூஸ் செய்து விட்டேன், என் மனைவி மன வலிமையுடைய பெண், கண்டிப்பாக என் மனைவி மகள் வாழ்வார்கள்.

நான் செய்த எல்லா தவறுக்கும் இதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும். நான் அவளை கொன்றதுக்காக என்னை நானே பழி வாங்கி கொண்டேன்.

***THE END***

3 Comments

  1. Admin mannichidunga raam story 12 cont..

  2. மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் நெக்ஸ்ட் பார்ட் எப்போ அட்மின்

  3. Crime and father stroy not sex story

Comments are closed.