நான் செய்த எல்லா தவறுக்கும் இதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும் End 27

நான் நெனச்சா மட்டும் தான் அவனை காப்பாத்த முடியும் என்றேன், உடனே என் பக்கம் திரும்பினான், இங்கே இருந்து பெரிய ஹாஸ்பிடல் 7 km அங்கே போறதுக்குள்ள அவன் செத்திருவான்டா என்றேன், என்னை என் கிளினிக்குக்கு கூட்டிட்டு போ, நான் காப்பாத்ரேன் என்றேன், அவனும் என் கையை கட்டிய படியே என்னை மரத்தில் இருந்து விடுவித்து என்னையும் அவனையும் காரில் ஏற்றினான், நான் பின்னால் ஏறி கொண்டேன், கொஞ்சம் காட்டு வழி போகும் போது, அவனை பின்னால் இருந்து தள்ளி உதைக்க, அவன் நிலை தடுமாறி மரத்தில் மோதினான்,

கார் முன்பாக நன்றாக அடி பட்டது, எனக்கு இடித்ததில் கையில் நல்ல அடி, எனக்கு ரத்தம் வழிகுறது ஆனால் எங்கே என்றுதான் தெரியவில்லை, steeringல் தலை அடிபட்டு ரத்தம் அவனுக்கு, நான் முன்னே போய் மீண்டும் அவன் தலையை steering இல் இரண்டு முறை இடித்து மோதினேன், இன்னும் அழுத்தமாக மோத அவன் மூஞ்சி ரத்த களரி ஆனது, நான் அவனை தள்ளி, என் கட்டை அவிழ்த்து வண்டியை என் பழைய கிளினிக்கிற்கு விட்டேன். வண்டியில் இருந்து புகை தள்ளியது, இருந்தும் வண்டியை அழுத்தி பிடித்து என் கிளினிக் வாசலை சென்றடைந்தேன்,

ரத்தம் நெறய போக எனக்கு மயக்கம் வருவது போல ஆனது, நான் உள்ளே போக பவித்ரா என்னை பார்த்து பயந்து அலறினாள், என்னாச்சு என்னாச்சு என்றாள், நான் accident என்று சொன்னேன், இருவரையும் உள்ளே இழுத்து வந்து போட்டேன், அவள் பயத்தில் நடுங்க ஆரம்பித்தாள், என்னாச்சு யாரு இவுங்க என்றாள், என் வண்டில அடி பட்டுடாங்க என்றேன், செரி ஹாஸ்பிடல் போக வேண்டியது தான என்றாள், இல்லை அதில சிக்கல் இருக்கு கொஞ்சம் அமைதியா இரு என்றேன், அவள் விடாமல் பேசிக்கொண்டே இருந்தாள், அவள் பேசுவதால் என்னால் யோசிக்க முடியவில்லை, chloroform கொஞ்சம் எடுத்து என் kerchiefல் நனைத்து அதை வலுக்கட்டாயமாக அவளுக்கு கொடுக்க அவள் மயங்கினாள்…

பின்பு எனக்கு முதலுதவி செய்து கொண்டேன், ஒரு 20 நிமிடம் கழித்து , இவனுகளை என்ன செய்வது என்று எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது, முத்துக்கு முதலுதவி செய்தேன், இன்னொருவனுக்கு அவ்வளவு அடி இல்லை, கண்டிப்பாக இவனுகளால் எனக்கு ஆபத்து தான், கொன்றாலும் பிரச்சனை, உயிரோடு விட்டாலும் ஆபத்து தான், செரி என்று இறுதியில் பல யோசனைக்கு பிறகு இன்னொரு experimental ஆப்பேரஷன் இவர்களை வைத்து செய்யலாம் என்று முடிவு செய்தேன், பவித்ரா இங்கே இருந்தால் என்னால் ஏதும் செய்யமுடியாது, செரி என்று ஒரு பிளான் செய்தேன், ஒரு 2 வாரத்திற்கு என் மனைவி மற்றும் குழந்தையை, எங்கள் சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு அனுப்பி வெக்கலாம் என்று முடிவெடுத்தேன்,

வீட்டிற்கு போனேன் என்னை பார்த்து பயந்துவிட்டாள் என் மனைவி, சாதாரண அடிதான் பதராதே என்று சமாதானம் செய்தேன், நான் கோயம்புத்தூர் பேச்சை ஆரம்பிக்க அதற்க்கு ஏத்தது போல் அவளும் இங்கே நமக்கு நேரம் செரி இல்லைங்க பேசாம நாம கோயம்புத்தூரில் செட்டில் ஆயிடலாம் என்று சொன்னால், உடனே நான் அவளை convince செய்து 2 வாரம் அங்கே இருங்க நான் சீக்கிரமாக எல்லா ஏற்பாடும் செய்து அங்கே வந்துவிடுகிறேன் என்றேன், எல்லாம் ஒரே நாளில் என்னால் முடிந்தது, அவர்கள் போனதும் வீடு வெறிச்சோடி இருந்தது, ஒரு தவறு செய்தால் அதை ஒட்டி அதை மறைக்க எத்தனை தவறுகள் செய்யவேண்டும் என்பதை புரிந்து கொண்டேன், பவித்ராவை இங்கே கொண்டு வந்து விடலாம் என்று முடிவெடுத்தேன்.

அடுத்த நாள் காலை என் மனைவி, மகள், கிளம்பினார்கள், அவர்கள் போன பின்பு நான் என் கிளினிக் சென்று, பவித்ராவை என் ஜீப்பில் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்து, எங்கள் வீட்டின் bedroomஇல் விட்டு, கதவை பூட்டிவிட்டேன். மீண்டும் அங்கே சென்று பார்க்கையில், முத்து பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தான், பிறகு தான் அவன் இறந்துவிட்டான் என்று தெரிந்தது, ரொம்ப பயமாக இருந்தது, அந்த நால்வரை பழி வாங்கியது கூட என்னை பெரிதாக பாதிக்கவில்லை, முதல் கொலை என்பதால் என்ன செய்வதென்றே தெரியவில்லை, ச்ச நான் என்ன தவறு செஞ்சுருப்பேன், எல்லாருக்கும் நல்லவனா தான இருந்தேன், எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று தோன்றியது, என்னை அறியாமல் கண்ணீர் ஊற்றியது, ரொம்ப படப்படப்பாக இருந்தது.

இந்த ஒரு மாதம் என் வாழ்நாளிலேயே மோசமான மாதம், ஒருநாள் கூட என்னால் நிம்மதியாய் இருக்க முடியவில்லை, ஆழ்ந்த யோசனைக்கு பிறகு அவன் உடலை அங்கேயே புதைத்து விடலாம் என்று முடிவெடுத்தேன், அவன் மச்சானையும் கொன்று விடலாம் என்று முடிவு செய்து, ஊசி செலுத்த கொஞ்ச நேரத்தில் அவனும் இறந்து போனான், என் மூளை மழுங்கி விட்டது போல தோன்றியது, உடல் முழுவதும் தாங்க முடியாத அளவு வலி, இருந்தும் மூச்சை இழுத்து பிடித்து அழுது கொண்டே இரவு விடிய விடிய என் கிளினிக் பக்கமே பெரிய குழியை தோண்டினேன்,

தோண்டி முடித்த பின்பு ஒரு யோசனை, ஒருவேளை மண் சரிவு ஏற்ப்பட்டால் மாட்டிக்கொள்வேனே, அடக்கொடுமையே இது தோண்டும் போதே தோன்றி இருக்க கூடாதா, அந்த குழியை ஒரு பெரிய தார்பாயினால் மூடிவைத்தேன், பயம் ஒரு புறம், உடல் வலி ஒரு புறம், இனியும் இங்கே இருந்தால் பைத்தியம் பிடித்து விடும் என்று தோன்றியது,செரி அப்பறம் யோசித்து கொள்ளலாம் என்று முடிவு செய்து, மீண்டும் அவர்களை இழுத்து உள்ளே போட்டேன், polythene கவரால் நன்கு சுற்றி வைத்தேன், பசிக்கிறது ஆனால் சாப்பிட கூட யோசனை இல்லை, பவித்ரா ஞாபகம் வர அவளுக்கு மட்டும் உணவு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றேன், என்ன செய்வது என்று யோசித்தபடியே இருந்தேன்,

வீட்டுக்குள் போய் கதவை திறக்க, தலையில் கைவைத்தபடி உட்கார்ந்து இருந்தாள், நான் அங்கே இருந்தே சாப்பாட்டை நகர்த்தி, சாப்பிடி என்றேன், என் ட்ரெஸ் லாம் அங்கே இருக்கு, எனக்கு குளிக்கனும் என்றாள், செரி என் மகள் அறை சென்று அவள் உடைகள் சிலது எடுத்து அவளுக்கு கொடுத்தேன், பிறகு நானும் போய் என் அறையில் heaterஇல் வெந்நீர் போட்டு அமைதியாக அப்படியே உட்கார்ந்து கொண்டேன், என் காயங்களுக்கு மருந்து போட்டுகொண்டு கொஞ்ச நேரம் கழித்து பவித்ரா அறைக்கு சென்றேன்,

ஒடம்பு எப்படி இருக்கு என்றாள், பேசாத என்று கோபமாக கத்தினேன், உனக்கு accident ஆனா நான் என்ன பண்றது என்று அவளும் சத்தமாக பதில் தந்தாள், ஆமாம் இப்போலாம் என்னை நீ வா போ என்றும், சிலசமயம் வார்த்தையாலும் திட்டுகிறாள், எல்லாமே உன்னால தான் என்றேன், சத்தமாக சிரித்தாள், வேணா செம கோபத்துல இருக்கேன், அப்புறம் அன்னைக்கு மாதிரி தான் என்று மெரட்டினேன், முறைத்து பார்த்து அமைதியானாள், ஆமா அந்த அடிபட்ட ரென்டு பேரும் எங்க என்றாள், அவனுக செத்துட்டானுக என்றேன், அவள் அதிர்ச்சியானால், செரி bodyய என்ன பண்ண என்று கேட்டாள், அதான் யோசுச்சுட்டு இருக்கேன் என்றேன்.

3 Comments

  1. Admin mannichidunga raam story 12 cont..

  2. மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் நெக்ஸ்ட் பார்ட் எப்போ அட்மின்

  3. Crime and father stroy not sex story

Comments are closed.