என்ன இருந்தாலும் பெண் என்பதோடு மட்டுமல்லாமல், இயல்பிலேயே கருணை கொண்டவள் என்பதால், அக்காவும் மிக இளகி இருக்கிறாள், உள்ளுக்குள் இது நல்லது என்ற மனநிலையில் இருக்கிறாள் என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது.
அப்பொதுதான் லாவண்யா பேசத் தொடங்கினாள்!
இது உங்க குடும்ப விஷயம். நான் தலையிடக் கூடாது. இருந்தாலும், என் ஒபீனியனைச் சொல்லலாமா தாத்தா?
என்னமா இப்படி கேக்குற? நீயும் எனக்கு பேத்தி மாதிரிதாண்டா! அதுனாலதான் உன் முன்னாடி இந்த விஷயத்தை பேசுறேன்.
இல்ல, இவளுக்கும், மதனுக்கும் திரும்ப, அவிங்க அப்பா அம்மாவோட பாசம் கிடைக்குதுங்கிறது நல்ல விஷயம்தான். ஆனா, நான் விரும்புறதெல்லாம், அது உண்மையா இருக்கனும்னுதான், இன்னொரு பெரிய ஏமாற்றம் அவங்களுக்கு கிடைச்சிடக் கூடாதுன்னுதான் பயப்படுறேன்.
அக்கா அவளையே ஆழமாகப் பார்த்தாள். தாத்தாவோ குழப்பமாகப் பார்த்தார். நான் அமைதியாக வேடிக்கை பார்த்தேன், வழக்கம் போல!
நீ என்னம்மா சொல்ற? எனக்குப் புரியலை.
தாத்தா, என்னைத் தப்பா நினைச்சிக்காதீங்க. நான் இப்பவும் யாரையும் குற்றம் சாட்டலை. எனக்குள்ள சில சந்தேகங்கள். அதுனாலத்தான் இப்படிச் சொன்னேன்.
சரிம்மா, உனக்கு என்ன சந்தேகம்னு சொல்லு. எங்களுக்கும் புரியுமில்ல?!!
ஏன் தாத்தா, அவிங்க சொன்னது உங்களுக்கு கண்டிப்பா சந்தோஷமா இருந்திருக்கும். அவிங்க, இதை மட்டும்தான் சொன்னாங்களா? இல்ல வேறெதாவது சொன்னாங்களா?
வேற! என்று யோசித்தவர், மெயின் விஷயம் இதுதான்மா. அப்புறம், தன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும், இப்பருந்து பாக்க ஆரம்பிச்சா, காலேஜ் முடிச்சிட்டு பண்ணிடலாம். இதுவரை நீங்க எங்களுக்கு செஞ்சதுக்காக, நீங்களே உங்களுக்குப் பிடிச்ச மாதிரி மாப்பிள்ளை பாருங்க, என்ன வேலை செய்யனும்னு மட்டும் எங்களுக்குச் சொல்லுங்கன்னாங்க! அதுல எதுவும் தப்பு இருக்குறதா எனக்கு தெரியலையேம்மா…
வேற ஏதாச்சும்?
வேற….. என்று யோசித்தவர், ஆங்… நம்ம மதனை, அவன் ஆசைப்பட்ட படி, IIM ல MBA படிக்க வைக்கனும். ஹைதராபாத்ல, IIM க்கு பெஸ்ட் ட்ரெய்னிங் இன்ஸ்டியூட் இருக்கு. அங்க இருக்குற IIT ல சேத்துட்டு, அப்படியே அந்த ட்ரெயினிங் இன்ஸ்டியூட்ல சேக்கலாம், அங்க வேலை செய்யுறவரை எனக்கு நல்லா தெரியும். நான் அவர்கிட்ட உடனே பேசுறேன்ன்னு சூப்பர் ஐடியா சொன்னாரும்மா? இது ரெண்டுதான் சொன்னாரு!
How to submit the story on this site? help me