காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 7 71

ஏய்… அறைஞ்சுருவேன், இனிமே இப்படி பேசுனா! நாந்தான் லூசு மாதிரி பேசுனேன்னா, நீயும் அப்படியே பேசுவியா? இனி இப்டி பேசுன… படபடப்புடன் வந்த வார்த்தைகளில் தெறிந்த அன்பு அங்கு இருந்த அனைவருக்கும் நிறைவைத் தந்தது.

பதிலுக்கு புன்னகைத்தவள், உன் கூட கொஞ்ச நேரம் பேசனும். நான் பேசுனதுக்கப்புறம், நீ என்ன சொன்னாலும் நான் கேக்குறேன். சரியா? ப்ளீஸ் வா என்று அந்த நபர் கையைப் பிடித்த படி, தன் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

அவர்களிடையே, தனிமையான உரையாடல் அவசியம் என்பதை உணர்ந்த மதனும், ஹரீசும், பெருமூச்சு விட்ட படி அமர்ந்தனர். இனி, தன் மனைவி பார்த்துக் கொள்ளுவாள் என்ற நம்பிக்கை ஹரீசுக்கு வந்திருந்தது.

அந்த புதிய நபரிடம், ஹரீசுக்கு அதிகம் பழக்கம் இல்லாவிட்டாலும், ஏற்கனவே தன் மனைவியின் மூலம் முழுக்க கேள்விப் பட்டிருந்ததும், ஆரம்பத்தில் தான் போய் கூப்பிட்ட சமயத்தில் கூட நாசுக்காக வர மறுத்தாலும், தன் மனைவி மிகவும் மன வருத்தத்தில் இருப்பதாகச் சொன்ன அடுத்த நொடி கிளம்பிய நபர், இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து வெளிப்படுத்திய அன்பு, அவனுக்கும் பெருத்த ஆச்சரியத்தைத் தந்திருந்தது. அவர்களுக்கிடையே இருக்கும் அந்த ஆத்மார்த்தமான அன்பு அவனுக்கும் நிறைவைத் தந்திருந்தது. இந்தப் புரிதல் மிகச் சாதாரணமானதல்ல!

மதன் இதை ஓரளவு எதிர்பார்த்திருந்தாலும், வந்த நபர் உள்ளே வந்ததில் இருந்து, தன்னைப் பார்க்கவோ, தன்னிடம் பேசவோ எந்த முயற்சியும் செய்யாததில், கொஞ்சம் வருத்தமாய் இருந்தாலும், உள்ளுக்குள், அவனும் நிறைவாய்தான் உணர்ந்தான்.

அந்த நபர் இன்னமும் அப்படியேதான் இருக்கிறார்.

அதே அள்ளிக் கொட்டும் அன்பு, முகத்தைப் போலவே, மாசு மருவற்ற மனம், நல்லதையே நினைக்கும் குணம், தனக்கு நெருக்கமானர்வகளிடம் மட்டும் செலுத்தும் அதிகாரம், அதே பட பட பேச்சு என்று அப்பொழுது போலே இப்பொழுதும் என்பதால் அவனுக்கும் மகிழ்ச்சியே!

பழைய மதனாக இருந்திருந்தால், கொஞ்சம் சலனம், ஒன்று கூட முடியுமா என்ற சந்தேகம், இதெல்லாம் வந்திருக்குமோ என்னவோ! ஆனால், இந்த புதிய மதன், மிகத் தெளிவாகவும், எதையும் சந்திக்கும் தைரியத்துடனும் இருந்தான்! ஆகையால் அவன் அமைதியாகவே இருந்தான்.

ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்கும் மேல் கழித்து, கையைக் கோர்த்தவாறு வெளி வந்த அந்த இருவரது முகத்தில் பழைய கோபம், வருத்தம், கண்ணீர் எதுவும் இல்லை. அவர்கள் சமாதானமாகிக் கொண்டார்கள், புரிந்து கோண்டார்கள் என்பது தெளிவாக இருந்தாலும், இருவர் முகத்திலும் ஏதோ ஒரு யோசனை இருந்தது.

வெளியே வந்த நபர், சரி நான் கிளம்புறேன். நான் எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டு வந்துட்டேன். நான் போகனும் என்றார்.

ஏய்.. சாப்ட்டு போலாம் இரு! நான் உன் கூட நிறைய பேசனும்னு நினைச்சேன்.

பேசலாம், நாளைக்கு நான் வரேன். நானும் நிறைய பேசனும். ஆனா, இப்ப கிளம்புறேன்.

ம்ம்ம்.. ஓகே! மதன், போயி விட்டுட்டு வந்திடு!

1 Comment

  1. How to submit the story on this site? help me

Comments are closed.