நான் வாய் பிளந்து, அமைதியாகப் போய் சாப்பிட்டேன். யார் சொல்லியும் கேட்காதவன், முதன் முறை லாவண்யா பேசி, சாப்பிட வந்ததைப் பார்த்து, என் அக்காவே வாய் பிளந்து நின்றாள்!
அடுத்த நாள் யதேச்சையாக அவளும், என் அக்காவும் பேசியதைக் கேட்டேன்.
என்னடி, என்கிட்ட கூட எரிஞ்சு விழுந்தான். நீ கூப்பிட்டவுடனே கம்முனு வந்துட்டான்.
ரொம்பத்தாண்டி அவனை தலைக்கு மேல தூக்கி வெச்சுகிட்டு ஆடுறிங்க! நீங்கல்லாம் அவனைக் கெஞ்சி கூப்புட்டீங்க. ஒர்க் ஆகலை. சரின்னு, நான் போய் திட்டிக் கூப்பிட்டேன். ஒர்க் ஆகிடுச்சி! அவ்ளோதான்.
நீ திட்டுனியா? என்னை விட நீ பயந்த சுபாவம். நானே, சில சமயம் அவன் கோவமா இருந்தா பேச மாட்டேன். நீ எப்பிடிடீ திட்டுன?
தெரில்ல… நான் அதிகம் பழகாதவங்கன்னாதான் அமைதியா இருப்பேன். மதன்கிட்ட எனக்கு அப்படித் தோணலை!
ஓ… டெய்லி ரெண்டு மணி நேரம் பேசிக்கறீங்களோ?
பேசிதான் புரிஞ்சிக்கனும்னு அவசியம் இல்லை. இப்ப நீ மட்டும் என்ன, அவன் கூட டெய்லி ரொம்ப பேசுறியா? ஆனா, அவனை நீ புரிஞ்சிகிட்டதில்லை? அதே மாதிரிதான். நான் வந்ததுல இருந்து பாக்குறேன். நீ சொல்லிக் கேட்டிருக்கேன். அதை வெச்சு, நான் அவனை புரிஞ்சிகிட்டேன். நீயும் கூட, கொஞ்சம் தைரியமா, தாத்தாக்காக வந்து சாப்டுன்னு அதட்டிக் கூப்ட்டிருந்தா, அவனே வந்திருப்பான்.
எனக்கென்னமோ, தாத்தா மதியானமே சாப்பிடலியேன்னு அவனே ஃபீல் பண்ணிட்டு இருந்துருப்பான்னு தோணுது. அதே சமயம் கொஞ்சம் ஈகோ. அவ்ளோதான். நல்லவந்தான். இல்லாட்டி, என் விஷயத்துல தலையிட்டா, வீட்டுக்கு வர விட மாட்டேன்னு சொன்னதுக்கு, உன் சொத்தில்லை, உன் தாத்தா சொத்துன்னு திருப்பி திமிரா நான் பேசியும், அமைதியா சாப்பிட வந்திருப்பானா?
என்னடி சொல்ற? இப்படியில்லாமா பேசுன? உனக்குள்ள ஒரு ஜான்சி ராணி ஒளிஞ்சிருக்கிறதை இப்பதாண்டி பாக்குறேன்! ஹா ஹா!
ஏய் போடி!
How to submit the story on this site? help me