காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 7 69

மாலையும் சாப்பாடு வேண்டாம் என்று நான் முரண்டு பண்ணி அறையிலேயே இருந்தேன். வந்து கூப்பிட்ட அக்காவிடமும் கோபமாக கத்தினேன். அப்பொழுதுதான் லாவண்யா என் ரூமுக்கு தனியாக வந்து சாப்பிடக் கூப்பிட்டாள். அவளிடமும் கோபமாக, உன் வேலையைப் பாரு என்று கத்தினேன். ஆனால், என் கோபத்தை, அவள் சட்டையே செய்யவில்லை.

அவள் ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான். என் அக்கா கூட, என் கோபத்துக்கு சில சமயம் பயப்படுவாள். ஆனால், இவளோ ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள மாட்டாள்.

கத்தி பேசுனா நீ சொல்றது சரின்னு ஆகிடாது. உனக்கு அட்வைஸ்லாம் நான் பண்ண விரும்பலை. உனக்காக இல்லாட்டியும், உன் தாத்தாக்காக வந்து சாப்டு!

என் வீட்டுக்கே வந்து, என் தாத்தாக்காக நீ சப்போர்ட் பேசுறியா? உன் வேலை என்னமோ அதை மட்டும் பாரு! இனி என் விஷயத்துல தலையிட்ட, இந்த வீட்டுக்கே வர விடாம பண்ணிடுவேன்.

உன் வீடா, இது உன் தாத்தா வீடு! அவரு சொல்லட்டும், வர்றதா வேணாமான்னு. இவ்ளோ பேசுறியே, அந்த தாத்தா, பூஜைக்காக காலையில இருந்து சாப்பிடலை. மதியம் உன்னால சாப்பிடலை. இப்ப நைட்டும், நீ சாப்பிடாம, சாப்பிட மாட்டேன்னு இருக்காரு. உங்க அம்மா, கடமையைச் செய்யலைன்னு சத்தம் போட்டியே. உனக்காக வாழ்ந்துட்டிருக்கிற, உன் தாத்தாக்கு, நீ உன் கடமையைச் செஞ்சுட்டியா?

அவளுடைய கேள்வியில் இருந்த நியாயம் என்னை யோசிக்க வைத்தது. இருந்தாலும், முதன் முறை என்னுடன் பேசுபவள், என் வீட்டுக்கே வந்து என்னிடம் அதிகாரம் பண்ணுபவளிடம், தணிந்து போக ஈகோ இடம் கொடுக்க வில்லை.

என்ன இருந்தாலும், அவருக்கு, அவரு பொண்ணு மேலதானே பாசம் அதிகம். அவரு பொண்ணைப் பத்தி சொன்னவுடனே சாப்பிடாமக் கூட எந்திரிச்சு போயிட்டாருல்ல… என் வாதம் எனக்கே மொக்கையாக இருந்தது. அதனாலேயே, நான் கொஞ்சம் மெல்லிய குரலிலேயே சொன்னேன்.

என்னையே லாவண்யா பார்த்தாள்.

நீ எப்பவுமே லூசா? இல்ல, கோபம் வந்தா மட்டும் லூசுத்தனமா பேசுவியா? உன் தாத்தா, தன் பொண்ணுக்காக சாப்பிடாம எந்திரிச்சு போகலை. தன் பொண்ணு, தன் பேரனுக்கு செய்ய வேண்டியதை செய்யலியேங்கிற வருத்தத்துலியும், அதை விட முக்கியம், இந்தச் சின்ன வயசுல, அது உனக்கு ஏற்படுத்தியிருக்கிற பாதிப்பையும் நினைச்சு ஃபீல் பண்ணிதான் சாப்பிடாம போனாரு.

நான் வீட்டுக்கு வரக்கூடாதுன்னு உன் தாத்தாகிட்ட பேசுனப்ப, எந்த பொண்ணு, உறவு மேலியும் நம்பிக்கை வர்லைன்னு சொன்னியே, அந்த கஷ்டத்தை நீ அனுபவிக்கிறியேன்னு ஃபீல் பண்ணி, அதுக்காக எந்திரிச்சு போறாரு!

உன் தாத்தா என்னான்னா, உன்னை ரொம்பதான் பொத்தி பொத்தி பாக்குறாரு. தப்பு செஞ்சா கூட திட்ட மாட்டேங்குறாரு. அதான் நீயும் ஓவரா ஆடுற! வா… வந்து சாப்டு. உன் தாத்தாவுக்கான கடமையைச் செய்யு முதல்ல. அப்புறம் சொல்லு, என்னை வீட்டுக்கு வர வேண்டாம்னு. என்று சொல்லிவிட்டு சென்றாள்.

1 Comment

  1. How to submit the story on this site? help me

Comments are closed.