கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 48 19

“முருகா.. சந்தோஷமா இருங்க…” நடராஜனின் குரல் தழுதழுத்தது. மல்லிகா அவர்கள் இருவரையும் ஒரு சேர தன்னுடன் சேர்த்துக்கொண்டாள்.

“சீனு உங்க வீட்டுல நீங்க ரெண்டு பேரும் லவ்வற விஷயத்தை சொல்லிட்டியா..? மல்லிகா மெல்ல கனைத்துக்கொண்டு பேசத் தொடங்கினாள்.

“ம்ம்ம்…. சொல்லிட்டேம்மா… மீனாவையும் போனவாரம் எங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய் எல்லாருக்கும் இன்ட்ரொட்யூஸ் பண்ணிட்டேன்… மீனாவுக்கு பரிட்சை முடிஞ்சதும் உங்ககிட்ட பேசறேன்னு சொல்லியிருக்காரு… அத்தையும், அம்மாவும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்கப்பா..”

“இவ்வளவு தூரம் எல்லாத்தையும் பண்ணிட்டு எங்கக்கிட்ட எதையும் சொல்லாமா இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்திருக்கேடீ நீ…” மல்லிகா தன் பெண்ணை முறைத்தாள்.

“அப்பா ரொம்பத் தேங்க்ஸ்ப்பா… மீனா தன் தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவர் கன்னத்தில் முத்தமிட்டாள். அடுத்த நொடி… கோச்சிக்காதேம்மா… நீ என்ன சொல்லுவியோன்னு பயந்தேம்மா.. அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டாள். செல்வாவின் கையைப் எடுத்து அவன் புறங்கையில் முத்தமிட்டாள்.

“எல்லாருக்கும் குடுத்துட்டே… எனக்கு குடுக்க மாட்டியா?” சீனு மீனாவை நோக்கி தன் கன்னத்தைக் காண்பித்து கண்ணடித்தான்.

“சனியனே… என் மானத்தை வாங்காதே… உனக்கு ஒதைதான் குடுப்பேன்…” மீனா அவன் முதுகில் செல்லமாக அடித்தாள்.

“பாருங்கப்பா… இப்பவே என்னை இப்படி அடிக்கறாளே… போவப் போவ இவகிட்ட நான் என்னப் பாடு படணுமோ?” சீனுவின் முகத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

“சீனு… நானும் இவரை அப்பாங்கறேன்.. என்னை கட்டிக்கப்போற நீயும் அப்பாங்கறே… லாஜிக் கொஞ்சம் இடிக்கலே…” மீனாவின் முகம் மாலை வானமாக சிவந்திருந்தது. அவள் கண்ணும், வாயும், உதடும், ஏன் அவளுடைய முழு முகமும் தங்கமாக மின்னிக்கொண்டிருந்தன.

“மீனாட்சீ.. சீனுவை நீ இந்த வீட்டு மாப்பிள்ளையாக்கிட்டே… இருந்தாலும், அவனை நாங்க என்னைக்கும் எங்க பிள்ளையாத்தான் கொண்டாடுவோம்…” நடராஜன், சீனுவை இழுத்து அணைத்துக்கொண்டார். செல்வா சீனுவின் கையைப்பிடித்து குலுக்கியபடியே, அவனைத் தன் தோளோடு நெருக்கிக்கொண்டான். மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்தது அந்த வீடு.
“மல்லிகா சீக்கிரமா டிஃபனை எடுத்து வைம்மா… ஒரு வாய் சாப்பிட்டுட்டு கிளம்பணும்… நேரமாவுதுல்லே”

“என்னம்மா.. அவசரமா வான்னு என்னைக் கூப்ட்டீங்க..?” சீனு வடையை மென்று தின்றுக்கொண்டிருந்தான்.

1 Comment

  1. கதையில‌, கதை அதிகமாகவும் காமம் கம்மியாவும் இருக்கு but நல்லாதான் போய்க் கிட்டுருக்கு.
    இடையில் ஒரு நாலு நாள் கேப் விட்டுட்டீங்க.continue a எழுதுங்க.
    வாழ்த்துக்கள்.

Comments are closed.