கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 48 19

எப்பா.. வேண்டவே வேண்டாம்.. வேலாயுதம்கூட சகவாசம் வெச்சிக்கிட்டேன்னு மீனாவுக்கு தெரிஞ்சா… என்னை பீஸ் பீஸா கிழிச்சுடுவா… இப்பல்லாம் மீனாவோட அராஜாகம் அதிகமாயிட்டே போவுது.. காதலி வேணும்ன்னா கொஞ்ச நாளைக்கு நண்பனைத் தியாகம் பண்ணித்தான் ஆகணுமா?

வாலு போனாத்தான் கத்தி வருமா? ஒரு நஷ்டத்துலதான் ஒரு லாபத்தைப் பாக்கமுடியுமா? ஒண்ணைக் குடுத்தாத்தான் ஒண்ணு கிடைக்குமா? டேய்… சீனு… நீ ஒரு ஞானிடா… சட்டுன்னு வாழ்க்கையை புரிஞ்சுக்கிட்டியேடா? அவன் மனசு
“ஓ’ வென கூச்சலிட்டது.

வாசல் படியில் உட்கார்ந்திருந்த சீனு மெல்ல எழுந்து கைகளை தலைக்கு மேல் உயர்த்தி சோம்பல் முறித்தான். ஹாலுக்குள் நுழைந்தபோது அவன் செல் ஒலித்தது… ஸ்கீரீனில் மீனாவின் புகைப்படம் பளிச்சிட்டது.

வாவ்… வாடீச் செல்லம்… பழம் தானா நழுவி பால்லே அதுவா விழுதே… சீனு… நீ இனிமே இன்னைக்கு கனவு காண அவசியமில்லேடா… உன் மீனா டார்லிங் போன்ல வந்துட்டா.. ஏதாவது பிட்டைப் போட்டு, அவளைப் பிக்கப் பண்ணி உன் வீட்டுக்கு தள்ளிட்டு வந்துடு..

சாயந்திரம் நாலு மணி வரைக்கும் இன்னைக்கு உன் வீடு காலிதான்.. மூணு பெட் ரூம் இருக்கு… எதுலே இஷ்டமோ அதுல அனுபவி ராஜா அனுபவின்னு ஜாலியா இரு.. கோடையில் குற்றால அருவியில் குளிப்பது போலிருந்தது அவனுக்கு..

“சொல்லுடீ மீனா டார்லிங்… எப்படியிருக்கேடீ செல்லம் நீ… ஒரு வாரமாச்சும்மா உன் குரலைக்கேட்டு?” சீனு உற்சாகமான் குரலில் கொஞ்ச ஆரம்பித்தான்.

“டாய்… சீனு.. முண்டம்.. நான் உன் டார்லிங்கை பெத்தவடா… உன் ஒடம்பு எப்படி இருக்குது, ராத்திரி எங்கேயாவது பார்ட்டீ கீர்ட்டீனு போய் வந்தியா… குடிச்சுட்டு வந்த போதை இன்னும் தெளியலையா உனக்கு…

“அம்ம்ம்மமா.. சாரீம்ம்ம்மா…”

“நான் கேட்ட கேள்விக்கு பதிலைச்சொல்லுடா.. அதுக்கப்புறம் என் பொண்ணு மீனா… உனக்கு டார்லிங் ஆயிட்டாளா… கட்டை உனக்கு ரொம்பத்தான் துளுத்துப் போயிருக்குது… ? வீட்டுக்கு வருவேல்லா.. வா வாடா வா.. அவ எப்படியிருக்கான்னு உனக்கு நான் சொல்றேன்…”

மறுபுறத்திலிருந்து மல்லிகாவின் குரல் கணீரென வந்தது. பேசிக்கொண்டே மல்லிகா தான் பேசிக்கொண்டிருந்த செல்லின் ஸ்பீக்கரை ஆன் செய்தாள். அவளுடன் நடராஜனும், செல்வாவும் உட்கார்ந்து இருந்தார்கள். மீனா குளித்துக்கொண்டிருந்தாள்.

“அம்ம்மா… மீனா நம்பர்லேருந்து கால் வரவே.. அவளை கலாய்க்கலாம்ன்னு… காமெடி பண்ணிட்டேம்மா… சாரிம்ம்மா… தப்பா நெனைச்சுக்காதீங்கம்மா” சீனு உண்மையிலேயே உள்ளூரப் பயத்துடன் உடல் நடுங்க உளறினான்.

நானே என் வாயைக்குடுத்து காரியத்தைக் கெடுத்துட்டேனே… எல்லாம் என் தலையெழுத்து…
“சனி பகவான்’ இன்னைக்கு என்னைக் காலங்காத்தாலேயே புடிச்சிக்க ஆசைபடறானே? கொஞ்சம் கூட அவனுக்கு என் மேல இரக்கமே இல்லையே? சீனுவுக்கு நொடியில் தேகமெங்கும் வியர்த்தது.

கடைசீல… எதிர்வீட்டு ராமசாமி அய்யரு… நாங்க கிஸ்ஸடிச்ச மேட்டரை அம்மாக்கிட்ட போட்டுக்குடுத்துட்டாரா? மீனாவோட அம்மாவுக்கு நாங்க லவ்வற விஷயம் தெரிஞ்சிப் போச்சா? அம்மாவுக்கு தெரிஞ்சிருந்தா.. அவ அப்பாவுக்கும் தெரிஞ்சிருக்குமே?

“என்னடா… சத்தத்தையே காணோம்…” மல்லிகா குரலை உயர்த்திப் பேசினாள்.

“அம்மா… எல்லாரும் கோவிலுக்கு ஸ்ரீபெரும்புதூர் வரைக்கும் போயிருக்காங்க… நான் மட்டும்தான் வீட்டுல இருக்கேன்…?”

“நான் அதைக் கேக்கலடா… உன் வாய்ல என்ன கொழுக்கட்டையா… அதைப் பத்திக் கேட்டேன்…”

“சாரீம்ம்மா… பிளீஸ்…”

“உன்னைப் பெத்தவங்க நல்லவங்க… கோயிலுக்குப் போயிருக்காங்க… நீ என்னடான்னா.. கோவில் மாடு மாதிரி சுத்திக்கிட்டு… ஃப்ரெண்டு தங்கச்சியை டார்லிங்ன்னு சொல்லிகிட்டு, அவன் அம்மாகிட்டவே அவ நல்லாயிருக்காளான்னு கேள்வி வேறே கேக்கறே..

“பிளீஸ்ம்ம்மா.. தப்புத்தம்ம்மா…
“ .

“டேய்… நீ உடனே புறப்பட்டு இங்க வாடா… உனக்கு கச்சேரியை நான் நேர்ல வெச்சுக்கறேன்?”

மல்லிகாவின் உதடுகளில் மெல்லிய புன்முறுவல் எட்டிப்பார்த்தது. முகத்தில் அலாதியான ஒரு சந்தோஷம் நிரம்பியிருந்தது. பக்கத்திலிருந்த நடராஜன், அவளை நிமிர்ந்து பார்த்து ஓசையில்லாமல் சிரித்தார்.

“அம்மா… என்ன சொல்றீங்கம்மா..?” சீனுவுக்கு என்ன பேசுவதென்று புரியாமல் விழித்தான்.

“நீ பண்ணியிருக்கற வேலைக்கு…”

“அம்மா… நான் பண்ணது தப்புதான்னு ஒத்துக்கறேம்மா.. பிளீஸ்… கோச்சிக்காதீங்கம்மா..”

சீனு கெஞ்ச ஆரம்பித்தான். மல்லிகா அவனுக்கு எதற்காக போன் செய்தாள் என்பதை கேட்காமல் தன் மனதில் இருக்கும் குற்ற உணர்ச்சியில் சீனு தொடர்ந்து உளற ஆரம்பித்தான்.

“நீ பண்ணது தப்புன்னு உனக்கேத் தெரியுதுல்ல.. அதுக்கு நான் உன்னை கோச்சிக்கக்கூடாதா? உன்னை கட்டி வெச்சி ஒதைக்கணும்டா..?!”

“அம்மா.. நீங்க என்னை கோச்சிக்கலாம்.. தாராளமா என்னை அடிக்கறதுக்கே உங்களுக்கு உரிமையிருக்கும்மா… உங்க வீட்டுல உங்க கையால சாப்பிட்டு வளந்தவன்ம்மா நான்..”

“அப்புறம்… ரொம்ப ஓட்டாதேடா நீ.. உன்ன நான் இன்னைக்கு நேத்தாப் பாக்கிறேன்..”

“அம்மா… என்னை ஆசைப்படறேன்னு மீனாதான் மொதல்ல சொன்னாம்மா… அதுக்கப்புறம்தான் நான் சரின்னேம்மா?” இன்னைக்கு என் தலை தப்பிக்கனும்ன்னா இதுதான் சரியான வழியென நினைத்து மீனாவை போட்டுக்குடுத்தான் சீனு..

1 Comment

  1. கதையில‌, கதை அதிகமாகவும் காமம் கம்மியாவும் இருக்கு but நல்லாதான் போய்க் கிட்டுருக்கு.
    இடையில் ஒரு நாலு நாள் கேப் விட்டுட்டீங்க.continue a எழுதுங்க.
    வாழ்த்துக்கள்.

Comments are closed.