கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 48 19

“ஆமாம் உனக்கும்… உன் அம்மாவுக்கும் மட்டும்தான் எல்லாம் புரியுது… வேற யாருக்கு இங்கே ஒண்ணும் புரியலை…”

“என் கோவத்தை கிளறாதடீ நீ”

“உனக்கு மட்டும்தான் கோபம் வருமா?”

“வாயை மூடுடீ…”

அடிக்குரலில் கூவிய செல்வா, தன் மார்பின் மேல் படுத்திருந்த சுகன்யாவின் தோள்களை இறுகப்பற்றினான். தன் மார்பில் படுத்திருந்த அவளை விருட்டென உதறித் தள்ளினான். இந்த வேகமான, மூர்க்கமான, முரட்டுத்தனமான செல்வாவின் செயலை எதிர்பார்க்காத சுகன்யா கட்டிலின் குறுக்கில் போய் விழுந்தாள். கட்டிலில் விழுந்தவளின் பின்னந்தலை சுவரில்
“டங்’ என்ற ஓசையுடன் மோதிகொண்டது.

சுகன்யா இதுவரை எப்போதும், ஓரளவிற்கு அமைதியாக, பொறுமையாக இருக்கும் செல்வாவைத்தான் அவள் பார்த்திருக்கிறாள். அவன் முரட்டுத்தனமாக பேசியோ, யாரிடமாவது சண்டையிட்டோ அவள் பார்த்ததேயில்லை. இன்று முதன் முறையாக அவனுள் ஒளிந்திருக்கும் மிருகத்தை பார்த்த சுகன்யா திடுக்கிட்டுப்போனாள்.

சுகன்யாவுக்குத் தன்னைச் சுதாரித்துக்கொண்டு எழ பத்துவினாடிகள் பிடித்தது. கண்கள் கலங்க ஆரம்பித்தன. சுவரில் மோதிக்கொண்டதால், தன் உடலில் உண்டான வலியில், வாயில் பேச்சு வராது மவுனமாக தன் தலையைத் தடவிக்கொண்டாள் சுகன்யா.

தன் உதறலின் வேகத்தில் சுகன்யாவின் தலை சுவரில் மோதிக்கொண்டதை கண்ட செல்வாவின் தொடைகளின் நடுவில் எழுந்திருந்த புடைப்பு சட்டெனக் காணமால் போய்விட்டிருந்தது.

“வலிக்குதாம்மா.. சுகு…” செல்வா அவளை நெருங்கினான்.

“பிளீஸ்… நீ கிட்டவராதே.. வேணாம்.. கிட்ட வராதே.. கடைசீல நீ ஒரு சராசரி ஆண்தான்னு காமிச்சிட்டேல்லா” சுகன்யா பொறுமினாள்.

ஒரு பொட்டைச்சிக்கு இவ்வளவு திமிரா… செல்வாவின் மனதுக்குள்ளும் சட்டென வன்மம் எழுந்தது. அவன் வேகமாக தன் சட்டையை பேண்ட்டுக்குள் திணித்துக்கொண்டவன், பாத்ரூமுக்குள் விருட்டென நுழைந்தான். பக்கெட்டில் நிறைந்திருந்த குளிர்ந்த நீரை தன் முகத்தில் வாரி வாரி அடித்துக்கொண்டான்.

அவன் தலைக்கேறியிருந்த கோபம் மெல்ல குறைய ஆரம்பித்தது. பாத்ரூமிலிருந்து வெளியில் வந்தபோது சுகன்யா இன்னமும் தன் பின்னந்தலையில் கையை வைத்துக்கொண்டு கட்டிலின் முனையில் உட்க்கார்ந்து கொண்டிருப்பதை கண்டவன், முகத்தை துடைத்துக்கொள்வதற்காக தன் பேண்டீல் கர்சீஃபை தேடினான்.

செல்வா என்னத் தேடுகிறான் என்பது சுகன்யாவுக்கு புரிந்தது. வாய் பேசாமல் யந்திரமாக கட்டிலை விட்டு இறங்கி உள் ரூமிலிருந்து ஒரு காய்ந்த துவாலையைக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள்.

“தேங்க் யூ…” சுகன்யாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் தன் உதடுகளுக்குள் முனகினான் செல்வா.

செல்வாவும் ஒரு கணம் உள்ளுக்குள் அதிர்ந்துதான் போயிருந்தான். சே.. நான் இன்னைக்கு அறிவுகெட்டத்தனமா பைத்தியக்காரத்தனமால்ல நடந்துகிட்டேன்? அப்படி சுகன்யா என்ன சொல்லிட்டா..? நடந்ததைத்தானே அவ சொன்னா? ஆனா அதை அவ என் கிட்ட சொன்ன நேரம் சரியில்லே. சொன்னவிதம் சரியில்லே.

ம்ம்ம்.. நடந்தது நடந்து போச்சு. இப்ப எதுக்கு பழசை சுகன்யா ஞாபகப்படுத்தினா? என் அம்மாவும்தான் நாலு பேரு எதிர்லே நான் கோவத்துல உன்னை எதாவது தப்பா சொல்லியிருக்கலாம்… அதைக் கேட்டு உன் மனசு புண்பட்டு இருக்கலாம்… அதையெல்லாம் மனசுல வெச்சுக்காதேன்னு சொன்னாளே… அதை மட்டும் சுகன்யா ஏன் மறந்துட்டா?

ஆயிரம்தான் இருந்தாலும் நான் இவளை முரட்டுத்தனமா தள்ளினது தப்புத்தானே? இப்ப இவ மூஞ்சை நான் எப்படி நிமிர்ந்து பாக்கறது? என்னை ரவுடிங்கறாளே? செல்வா தன்னுள் மருக ஆரம்பித்தான்.

ஒலகத்துல பொம்பளை தன் ஒடம்பால கொடுக்கற சுகம்தான் பெரிய சுகம்ன்னு சொல்றானுங்க.. என் கேஸ்ல என்னடான்னா… ஒரு பொம்பளை குடுக்கற சொகத்துக்கு நடுவுல இன்னொரு பொம்பளை இன்னைக்கு குறுக்கே வந்துட்டா…

இவளுக்கு நான் இன்னும் தாலி கூட கட்டலை. அதுக்குள்ள மாமியார், மருமவ சண்டை ஆரம்பிச்சிடிச்சி… உன் அம்மா இதைச்சொன்னா.. உன் தங்கச்சி அதைச் சொன்னா.. சை… கொடுமைடாப்ப்பா..

செல்வா, தன் முகத்தை, கழுத்தை, மார்பை, கைகளை நன்றாகத் துடைத்துக்கொண்டு ஈரத் துண்டை பால்கனி கொடியில் உதறிப் போட்டான்.

“அயாம் சாரி.. சுகன்யா,” அறையின் நடுவில் நின்றவாறு, தன் தலையை தடவிக்கொண்டிருந்த சுகன்யாவின் கையை, மீண்டும் பற்ற முயன்றான் செல்வா.

1 Comment

  1. கதையில‌, கதை அதிகமாகவும் காமம் கம்மியாவும் இருக்கு but நல்லாதான் போய்க் கிட்டுருக்கு.
    இடையில் ஒரு நாலு நாள் கேப் விட்டுட்டீங்க.continue a எழுதுங்க.
    வாழ்த்துக்கள்.

Comments are closed.