கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 42 8

“அடிச்சுக்கடா.. நல்லா அடிச்சிக்கோ.. கோழி அமுக்கறதுன்னா.. துட்டுக்கு காலை விரிக்கறவ கூட படுத்து எழுந்துக்கறதுன்னுதானே அர்த்தம்.. ஆட்டைக் கடிச்சி.. மாட்டைக் கடிச்சி.. கடைசியா நீ இப்ப இந்த வேலையையும் செய்ய ஆரம்பிச்சிட்டியா… ஏன்டா இப்படீ உருப்படாம போறே? கீழே போனதும் உங்க அத்தைக்கிட்ட சொல்லவா இந்த கர்மத்தையெல்லாம்..”

“எம்மாத் தாயே.. உன் கால்லே விழறேன்டீ.. உனக்கு புண்ணியமா போவட்டும்.. ரெண்டு வருஷம் கழிச்சி இன்னைக்குத்தான் என்னைப் பெத்தவர் என் கிட்ட வாய்விட்டு பேச ஆரம்பிச்சிருக்காரு.. அந்த வேதாளத்தை திருப்பியும் மரம் ஏற வெச்சுடாதே…”

“அப்ப நான் பொலம்பறை செத்த நேரம் பொத்திக்கிட்டு கேளு…”

“எல்லாம் என் தலையெழுத்துடி மீனா… என் தலையெழுத்து… நீ வேலாயுதம் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டேடீ… அந்த நாய்க்கு சுத்தாம அறிவுங்கறேதே கிடையாது… செல்வாவை வேணா நீ கேட்டுப் பாருடீ.. செல்வாவுக்கு வேலாயுதத்தைப் பத்தி நல்லாத் தெரியும்…”

“ஆமாம்… அது ஒண்ணுதான் பாக்கி.. இந்த அசிங்கத்தை… நீங்க கட்டிங் வுட்டுட்டு, கோழி மிதிக்கற கூத்தை … நான் என் அண்ணங்கிட்ட வேற டிஸ்கஸ் பண்ணணுமா.. ஒழுங்கா இருக்கற அவனும் கெட்டு குட்டிசுவரா போவணுமா.. இன்னொரு தரம் நீ என்னை வெளியில அழைச்சிக்கிட்டு போறேன்னா.. அவன் என்னை காறித் துப்பணுமா?”

“அடியே மீனா.. திங்கற சிக்கனை சொன்னான்டீ.. வேலாயுதம், ரெண்டு கால் கோழியைச் சொன்னான்.. ஹென்… ஹெச். ஈ. என். ஹென்.. அதைச் சொன்னான்டீ… நீ நினைக்கற மாதிரி அவன் சொன்னது எந்த பொம்பளையைப் பத்தியும் இல்லடீ..”

“பொய் சொல்லாதே.. பொம்பளைக்கு எத்தனை காலுடா… பொட்டைச்சிக்கு நாலு காலா.. கதை சொல்றியா நீ என் கிட்ட… சீனு.. நீ பொய் மட்டும் சொல்லதே.. பொய் சொல்றவங்களை பாத்தாலே எனக்கு சுத்தமா பிடிக்காது…” மீனா பாய்ந்து சீனுவின் அருகில் வந்தாள். அவன் தலைமுடியை பிடித்து வேகமாக உலுக்க ஆரம்பித்தாள்.

“போச்சுடா.. ஆண்டவா.. பெருமாளே.. என்னைக் காப்பாத்துடா.. இவகிட்டேருந்து என்னைக் காப்பாத்துடா..” சீனு தன் கைகளிரண்டையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டான்.

1 Comment

  1. Manichudunga ram sooper story pls next part

Comments are closed.