கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 41 8

“மீனா… எங்க அத்தை இன்னைக்கு அருமையான வெண் பொங்கல், கூடவே மெது வடை, சட்னி… சாம்பார்ன்னு சூப்பரா ஒரு டிஃபன் பண்ணியிருந்தாங்க… அதை ஒரு புடி புடிச்சதும், ஒரு சிகரெட் புடிச்சா என்னா சுகம் அதுல கிடைக்கும் தெரியுமா… அதை என்ன மாதிரி சிகரெட் பிடிக்கற ஒருத்தனை கேட்டாத்தான் புரியும்…”

“சீனு அந்த சுகம் எனக்கு வேணாம்…”

“மீனா… அது அனுபவிச்சாத்தான் புரியும்… ஆனா அந்த சிகரெட் வாசனை உனக்கு பிடிக்கலை… ஆல்ரைட்… அயாம் சாரி… நீ அந்த சிகரெட் நாத்தத்தை சகிச்சிக்கணும்ன்னு நான் சொல்லலே..”

“சீனு ஒரு விஷயத்தை நீ ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறே? சிகரெட் ஸ்மெல் எனக்கு சுத்தமா பிடிக்கலை. நீ இன்னைக்கு போட்டுகிட்டு இருக்கற இந்த டார்க் ப்ளு ஜீன்ஸ்ல, வெள்ளை புல் ஹேண்ட் சட்டையில, ரொம்ப ஹேண்ட்சம்மா இருக்கே… ஒரு வாரம் கழிச்சி உன்னை என் வீட்டுலப் பாத்ததும், உன்னை அப்படியே கட்டிப்புடிச்சி கிஸ் அடிக்கணும்ன்னு என் மனசு துடிச்சுது…”

“சரிடீ.. நீ குடுக்கறதை குடு… ஒரு முத்தத்துக்காகத்தான் இவ்வளவு நேரமா நான் கெடந்து தவிக்கறேன்.. நீயே கொடுக்கறேன்னா நான் வேணாம்ன்னா சொல்லப் போறேன்..?” முகத்தில் அசட்டுச் சிரிப்புடன், சீனு அவள் முகத்தை தன் புறம் திருப்பினான். தன் கையை அவள் தோளில் போட்டு தன்னுடன் சேர்த்தணைத்துக்கொண்டான்.

“கையை எடு என் மேலேருந்து… அது அப்ப; இப்ப உன்னைப்பாத்தாலே எனக்கு எரிச்சல்தான் வருது…!” மீனா அவன் கையை உதறிவிட்டு நகர்ந்து உட்க்கார்ந்தாள்.

“மீனா, மனசுல இருக்கற ஆசையை எப்பவும் உடனே தீத்துக்கணும்டீ…பென்டிங்க் வெக்கக்கூடாது.”

“என்னை போடீ… வாடீன்னு பேசறதை முதல்ல நீ நிறுத்து…”

“கோச்சுக்காதடீ செல்லா…” சீனு மேலும் வழிந்தான்.

“என் ஆசையை நீ மதிச்சாத்தானே?”

“உன் ஆசையை மதிக்கவேதான்… உன் முகத்தை என் பக்கம் திருப்பி, என் உதட்டை உனக்கு காமிச்சேன்…” அவன் சினிமாவில் நக்கலடிக்கும் சத்தியராஜாக மாறினான்.

“சனியனே… நான் அதைச் சொல்லலே?”

“பின்னே?” சீனு மீனாவின் இடுப்பை தன் கையால் வளைத்து தன்னை நோக்கி இழுத்தான்.

“புரியாத மாதிரி பேசாதே… உன் வாயிலேருந்து வர்ற சிகரெட் நாத்தத்தால, நீ என் கிட்ட வந்தாலே, எனக்கு கொமட்டிக்கிட்டு வாந்தி வருது… அப்புறம் எப்படி நான் உன்னை மனசார, ஆசையா உன் வாயில கிஸ் பண்ண முடியும்?”

“சீனுவாசா, நம்ம கல்சர்ல, மிடில் கிளாஸ் சூழ்நிலையில உழல்ற பாதி பொண்ணுங்களுக்கு சிகரெட் ஸ்மெல் புடிக்காதுடா… ஒரு நாளைக்கு நீயும் ஆசையா ஒரு பொண்ணு பக்கத்துல நெருக்கமா போவே; அவ மூஞ்சை திருப்பிக்கிட்டு தள்ளி நின்னான்னா, அந்த நேரத்துல அந்த உதாசீனத்தை உன்னால தாங்க முடியாதுடா…”

சீனுவின் மனதில் தன் அத்தை உஷா, வெகு நாட்களுக்கு முன், பட்டும் படாமல், இலை மறைவு காய் மறைவாக, சொன்னது சட்டென அவன் நினைவுக்கு வந்தது.

2 Comments

  1. Hi admin cont…mannichidunga raam kulanthaikaaha story cont…

  2. Admin mannichidunga tam story cont

Comments are closed.