கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 32 6

“என்னங்க… குமாரசுவாமி சார் உங்க ஆஃபிஸ் மேனேஜர்தானே? இங்க எங்கே வந்தார்? இவரோட சுகன்யாவும், சுந்தரியும் வர்றாங்களே?” மல்லிகா தன் புருவத்தை உயர்த்தி அவரை ஒருகணம் நோக்கியவள், தன் கணவரை வியப்புடன் திரும்பிப் பார்த்தாள்.

“மல்லிகா, குமாரசுவாமிதான் நம்ம சம்பந்தி. சுகன்யா அவரோட பொண்ணுதான், இந்த விஷயம் எனக்கே ரெண்டு நாள் முன்னாடிதான் தெரியும். நீதானே சுகன்யாவோட அப்பா யாருன்னு கேட்டுக்கிட்டு இருந்தே… அதான் சஸ்பென்ஸா இருக்கட்டும்ன்னு உனக்கு நானும் சொல்லலே..” நடராஜன் சிரித்தார்.

“அண்ணா, நீங்க பண்ணது சரியில்லே… உங்களுக்கு தெரிஞ்ச உடனே… வீட்டுல அவங்ககிட்ட இந்த விஷயத்தை ஏன் சொல்லலை?” சுந்தரி நடராஜனிடம் போலியாக சண்டையிட்டாள்.

“பாத்தீங்களா சுந்தரி… எவ்வளவு முக்கியமான விஷயத்தை இவர் எங்கிட்ட இப்படி மறைச்சு வெச்சிருக்கார்? மல்லிகாவும் பொய்யாக கோபித்துக்கொண்டாள்.

“மேடம் தப்பு என் மேலதான்… மறைச்சது நான். நீங்க என் மேலதான் கோபப்படணும்..!! இந்த விஷயம் அவருக்கும் உண்மையிலேயே தெரியாது. ஆனா அதுக்கான காரணத்தையும் உங்களவர்கிட்ட நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்…? குமாரசுவாமி சற்றே வருத்தத்துடன் அவளிடம் மன்னிப்பு கேட்கும் தொனியில் பேசினார்.
“எப்படியிருக்கீங்க செல்வா… உங்க காதுக்குப் பின்னாடியிருந்த காயமெல்லாம் ஆறிடிச்சா? மனதில் பொங்கிவரும் உவகையுடன், கண்களில் ஆசை வழிய, சுகன்யா நேராக செல்வாவிடம் ஓடினாள். ஒரு கையால் அவன் கரத்தைப் இறுகப் பிடித்துக்கொண்டவள், மறுகையால் மீனாவின் கரத்தை பற்றிக் கொண்டாள்.

“நல்லாருக்கேன்…நீ எப்படி இருக்கே சுகு?” சந்தோஷத்தில் வாயால் பேசமுடியாமல், விழிகளாலேயே பதிலளித்தான் செல்வா.

“டேய்… பத்து நாளா உன்னைப் பாக்காம, உன் கூட பேசாம, தவிச்சுப்போய் நிக்கறா சுகன்யா… தனியா தள்ளிக்கிட்டுப் போய் பயப்படாம பேசுடா… அம்மா கேட்டா நான் சொல்லிக்கறேன்… நான் தான் இருக்கேன்ல்லா.. அவளுக்கு இருக்கற தைரியம் உனக்கில்லேயே?!” சீனு அவனை கலாய்க்க ஆரம்பித்தான்.

“சும்மா இருங்க சீனு… அம்மா என்னையே பாத்துக்கிட்டு இருக்காங்க… அவங்க காதுல விழுந்துடப் போவுது? …” சுகன்யா வெட்க்கத்துடன் சிணுங்கினாள்.

“யாரு உங்க அம்மா காதுலயா? இல்ல இவன் அம்மா காதுலயா?”

“என் மாமியார் காதுல…” சுகன்யாவின் பதிலில் மகிழ்ச்சியின் கீற்றுகள்.

“மிஸஸ் மல்லிகா உன் மாமியார் மட்டுமில்லே..!!” சீனு தன் வாயைக் நீளமாகத் திறந்து இளித்தான்.

“பின்னே..?” இவன் என்ன புதிர் போடறான்.. சுகன்யா விழித்தாள்.

“சுகன்யா.. கொஞ்சம் கிட்டவாயேன்” சீனு சுகன்யாவை தன்னருகில் கண்ணால் சைகை செய்து அழைத்தான்.

“அப்படி என்ன ரகசியம் சொல்லப் போறீங்க?”

“உன் மாமியார்தான் எனக்கும் வுட் பீ மாமியார். ரெண்டு நாள் முன்னாடிதான்… மீனா என்னை அவ ஆளா அப்ரூவ் பண்ணியிருக்கா.. வீட்டு மருமக நீ… உன் தயவு எங்களுக்கு கண்டிப்பா வேணும்.. எங்களை கைவிட்டுடாதே சுகன்யா..” சீனு அவள் காதைக் கடித்தவன் தன் இரு கரங்களையும் கூப்பி அவளை போலியாக வணங்கினான்.

“மீனா.. இங்க வாயேன்… ஒரு நிமிஷம்..” சுகன்யா உரக்க கூவினாள்.

“என்ன சுகன்யா..?”

“சரியான ஆள்டீ நீ… ரகசியமா வெச்சிருக்கியே உன் விஷயத்தை.. நேத்து போன்ல பேசினப்ப கூட எங்கிட்ட சொல்லலே நீ…” சுகன்யா அவளருகில் வந்த மீனாவை தன்னுடன் சேர்த்துக்கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.