கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 32 6

செல்வா இப்ப என்னப் பண்ணிக்கிட்டு இருப்பான்…?” சுகன்யாவின் மனம் சென்னையை நோக்கிப் பறந்தது.

“உன்னோட ஃப்ரெண்ட் வேணியும், அவ ஹஸ்பெண்டும் பங்ஷனுக்கு வர்றாங்க… உனக்கு வேற யாரையாவது கூப்பிடணும்ன்னா சொல்லும்மா.” ரகு தன் மருமகளின் தலையை ஆசையாக வருடினார்.

“வேணி வர்றாளா? ப்ளீஸ் மத்தவங்களையெல்லாம் கல்யாணத்தப்ப கூப்பிட்டுக்கலாம்..” சுகன்யா முகம் சிவக்க வெட்க்கத்துடன் பேசினாள். செல்வாவுடனான தன் நிச்சயத்தார்த்ததுக்கு தனக்கு வேண்டியவர்கள் அனைவரையும் அழைக்க அவள் மனம் ஏனோ விரும்பவில்லை.

“ஏன்டீ… உன்கூட காலேஜ்ல படிச்ச ஃப்ரெண்ட்ஸ் உமாவும், லட்சுமியும், இங்க உன் தாத்தா வீட்டுக்கு பக்கதுலதானே இருக்காங்க. அவங்களை கூப்பிடேன்…!! நல்லக்காரியம் நடக்கும் போது, உன் கூட உன் வயசு பொண்ணுங்க ரெண்டு பேரு இருக்க வேணாமா?” சுந்தரி ஹாலுக்குள் கையில் டிஃபன் தட்டுகளுடன் வந்தாள்.

“வேண்டாம்மா…ப்ளீஸ்..”

“சரிடீ நான் சொல்லவேண்டியதை சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்…

“சுந்தரி… நீ சாயந்திரமா உன் பொண்ணை சுத்திப் போடும்மா… என் பேத்தி மொகத்துல கல்யாணக்களை வந்துடுச்சு…” கனகா முகத்தில் பெருமிதத்துடன் சுகன்யாவின் கன்னத்தை ஆசையுடன் வருடினாள்.

“ஆகட்டும் அத்தே.. இப்ப நீங்களும் மாமாவும் எழுந்திருச்சி சாப்பிட வாங்களேன்..”

“இல்லம்மா. டிஃபனை நான் எடுத்து வைக்கிறேன். நீயும் என் புள்ளையும் நம்ம வீட்டுக்கூடத்துல ஒண்ணா ஜோடியா உக்காந்து சாப்பிடறதைப் பாக்கணும்ன்னு, எவ்வள நாளா காத்துக்கிட்டு இருக்கேன் தெரியுமா?” கனகா தன் குரல் தழுதழுக்க மனதில் புதைந்திருக்கும் ஆசையை மெல்ல மெல்ல வெளியிட்டாள்.

“பாட்டீ… நிஜ்ஜம்மா சொல்றேன்; உங்க புள்ளையையும், மருமகளையும் ஒண்ணா நிக்க வெச்சு முதல்ல நீங்கதான் சுத்திப் போடணும்.”

“நீ சும்மா இருக்க மாட்டேடீ?” அவள் பேச ஆரம்பித்ததும் சுந்தரி தவித்தாள்.

“பாட்டீ… போனவாரம், காஞ்சீபுரம் கோவில்லேயும், மஹாபலிபுரம் பீச்சுலயும், ஒருத்தர் கையை ஒருத்தர் புடிச்சிக்கிட்டு, குசு குசுன்னு பேசி சிரிச்சிக்கறதும், ரோட்ல இடிச்சிக்கிட்டு நடக்கறதுமா இவங்க பண்ண அட்டகாசத்தை என்னால தாங்க முடியலை.”