கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 27 9

“ஆமாண்டி… ஆசைப்பட்டுத்தான் மோசம் போனேன்..?”

“நீங்க என்னா மோசம் போயீட்டீங்க என்னைக் கட்டிக்கிட்டு…? அந்தக் கதையை அப்பறமா ஆற அமரப் பேசலாம்!”

“ம்ம்ம்ம்… வேற வேலை இல்லே எனக்கு? உன் கிட்ட ஆற அமர உன் கதையை உக்காந்து பேசணுமா?” அவரும் சளைக்கவில்லை. மெல்ல உட்க்கார்ந்திருந்த சேரை விட்டு எழுந்தார்.

“இப்ப என் புள்ளைக் கதையை முதல்ல பேசியே ஆகணும்… அவனை வீட்டைவிட்டு போன்னு ஏன் சொல்றீங்க… என்னையும் எதுக்காக வீட்டை விட்டு வெளியேப் போன்னு சொல்றீங்க?”

தலைக்கு மேல வெள்ளம் போயாச்சு… இனி ஜான் போனா என்ன? முழம் போனா என்ன என்ற முடிவுக்கு வந்த ராணி அவரிடம் ஜிம்ப ஆரம்பித்தாள். பெற்ற மகனைத் தன் பக்கம் சேர்த்துக்கொண்டு, தன் வீயூகத்தை சற்றே மாற்றி அவரை மடக்க முயற்சி செய்ய ஆரம்பித்தாள்.

“என்னாடி பேசணும் அந்த தறுதலையைப் பத்தி இப்ப?”

“என் புள்ளைக்கு, அழகா, செவப்பா, அம்சமா, ஒரு பொண்ணு மனைவியா வரணும்ன்னு, அவனைப் பெத்தவ நான் ஆசைப்படக்கூடாதா? இல்லே என் புள்ளைதான் ஆசைப்படக்கூடாதா?”

“நிறுத்துடி… உங்க ரெண்டு பேரு கதையுமே எனக்கு வேண்டாங்கிறேன்.” நல்லசிவம் அவளை முறைத்தார். தன் துண்டை எடுத்து உதறி தோளில் போட்டுக்கொண்டவர், காலில் காதறுந்துப் போயிருந்த செருப்பை அணிந்தார்.

“எங்க போறீங்க இப்ப…நீங்க?”

ராணி தன் இருகைகளையும் நீட்டி அவரை வழி மறித்தாள்.. ஆவேசத்தில் அவள் முந்தானை தோளிலிருந்து சரிந்து தரையில் விழுந்து கிடந்தது. அவளுடைய வளப்பமான பருத்த மார்புகள், அவள் விட்ட வேகமான மூச்சுக்கு ஏற்றவாறு ஏறியிறங்கியது. ராணி தன் புடவையைத் தன் தொப்புளை மறைத்தும், மறைக்காமலும், இடுப்பில் கட்டியிருந்தாள். அவள் நாபியின் ஆழமும், நாபிக்குழியைச் சுற்றியிருந்த மெல்லிய கருத்த முடிவரிசையும், பளிச்சிட்ட அவள் இடுப்பின் வெண்மையும், மெல்லிய புடவைக்குள் அசையும், வலுவான துடைகளும், நல்லசிவத்தின் நாடியை, நரம்புகளை மொத்தமாக சிலிர்க்கவைத்தது.

“நீங்க ரெண்டு பேரும்தான் போகமாட்டீங்க…என்னையாவது போகவிடுங்கடீ…?

நல்லசிவத்தின் குரலில் ஒரு உறுதியும், வெறுப்பும் தெரிந்தது. அவர் தன் மனைவியின், இன்னும் கட்டுக்குலையாத, விம்மி விம்மித் தணியும் மார்பழகைப் பார்க்கமுடியாமல், அலையும் தன் மனதை ஓரிடத்தில் நிறுத்தமுடியாமல், தன் கண்களைத் தாழ்த்திக்கொண்டார்.

“என் புள்ளை கல்யாணத்தை நடத்திட்டு… உங்களுக்குப் பாக்கியா இருக்கற இந்த கடைசி கடமையையும் முடிச்சுட்டு, எங்க வேணா நீங்க போங்க… அதுக்கப்புறம் நீங்கப் போறதைப் பத்தி எனக்கு கவலையில்லே… ஆனா இப்ப நீங்க பாதி ஆட்டத்துல வெளியே போறதை நான் அனுமதிக்கமாட்டேன்.” ராணி ஒரு பெண் நாகமாக அவர் முன்னால் நின்று படமெடுத்தாள். படமெடுத்து கொத்திவிடுவது போல் தன் தலையை ஆட்டினாள்.

நாகம் படமெடுக்கும் போது பாக்கறதுக்கு அழகாத்தான் இருக்கு… அதுக்காக எவ்வளவு நாளைக்குத்தான் இவளோட இந்த உடம்பு அழகுல நான் கட்டுப்பட்டு நிக்கறது… காமம்… காமம்…காமம்…. விசுவாமித்திரன் மொதல்கொண்டு இந்த நல்லசிவம் வரைக்கும் இந்த பெண் உடம்பின் மேல இருக்கற, ஆசையிலிருந்து, மோகத்துல இருந்து, விடுபட முடியாம தவிக்கிறாங்களே? இதுக்கு ஒரு விடிவே இல்லையா? இதுதான் ஆண்களோட தலையெழுத்தா? கையேந்தி நிக்கற பிச்சைக்காரன் மாதிரி இவ முன்னாடி, இதுக்காக அப்பப்ப ராத்திரி நேரத்துல நிக்க வேண்டியதா இருக்குது. அதுக்காக இவ போடற விதிகளுக்கு உட்பட்டு நிக்க வேண்டியதா இருக்குது?

ஆண்டவா! என் பார்வையில ஒரு தெளிவைக் கொடேன்! பெண்ணாசையை மனசுக்குள்ளிருந்து ஒழிக்கணுங்கற ஒரே எண்ணத்தையும், வலுவையும் கொடேன்…! என் மனதில் இருக்கும் பெண் மோகத்தை வேரோடு சுட்டுப் பொசுக்கி, சாம்பலாக்கும் வைராக்கியத்தைக் கொடேன்? நல்லசிவத்தின் மனது வெகுவாக அரற்றியது. ஓலமிட்டது. இவ தன் உடம்பை காமிச்சே என்னை கட்டிபோட்டு வெச்சிருக்காளே? எப்பவும் கட்டி போட்டுடறாளே? எனக்கு என்னைக்கு இதுலேருந்து விமோசனம்? அவர் சுவாசம் வேகமாகவும் வெப்பமாகவும் வந்தது. மூச்சின் வெப்பத்தால் தன் நெஞ்சு வெடித்துவிடுமோ என அவர் தன் மனதுக்குள் பயந்தார்.

என் மூச்சு இப்பவே, இந்த நொடியே நின்னாலும் பரவாயில்லையே? விட்டுது ஆசை விளாம்பழ ஓட்டோடன்னு போயிடுவேனே? ஆனா இந்த பொம்பளையோட உடம்பு மேல இருக்கற ஆசையும், சதை வெறியும், காமவேட்க்கையும் என்னைவிட்டுப் போகலையே? அறுபது வயசுல இந்த வேட்க்கை போகலன்னா, எப்ப அது என்னை விட்டுப் போகும்? உடல் ஓய்ந்தாலும், மனம் ஓயவில்லையே? ஒரு பெண்ணின் உடலுக்குள் இத்தனை வசீகரமா? அந்த வசீகரத்தில், ஆண் என்றுமே தன் அகம் அழிந்து நிற்க வேண்டியதுதானா? அவர் வெட்கத்தில் தன் தலை குனிந்து நின்றார்.

நல்லசிவம், தன் காலில் அணிந்த செருப்பை கழட்டி வேகமாக மூலையில் உதறினார். உதறித் தோளில் போட்டத் துண்டை வேகமாக மீண்டும் உதறி, வெரண்டாவில் கிடந்த மர ஈஸிச்சேரில் விரித்துப் போட்டு, சப்பனமிட்டு உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டார். கண்களுக்குள் ராணியின் செழிப்பான சிவந்த மேனி வந்து நின்றது.

நல்லசிவம் ஆசைப்பட்டு கல்யாணம் செய்து கொண்ட இள வயது ராணியின் உடல் மெல்ல மெல்ல வளர்ந்து விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தது… நீளமான கைகள், கொழுத்துக் குலுங்கும் மார்புகள், சிறுத்த இடை, அகலமான பிருஷ்டங்கள், பருத்த இடுப்பிலிருந்து இறங்கும் நீளமான, அடிவாழைத் தொடைகள், வலுவான கெண்டைக்கால் சதைகள், கருத்த முடியின் நடுவில் அழகான, சுகமான பாம்பின் படத்தையொத்த அல்குல், அன்னைக்குப் பாத்தத்துக்கு இன்னைக்கும் ஒரு மாத்து கொறையாம இருக்காளே? அம்மா… இது என்ன வேதனை எனக்கு? திருப்பியும் இந்த முறையும் ராணிதான் ஜெயிச்சிட்டாளா? இவளை உதறித் தள்ளிட்டு ஓடணும்ன்னு பாக்கிறேன், முடியலியே?

ராணி ஜெயிச்சிட்டதா நான் ஏன் நெனைக்கணும்? இவளைப் பாத்து நான் ஏன் இந்த வயசுல வீட்டை விட்டு ஓட நினைக்கிறேன். வீட்டை விட்டு போனா என் புள்ளை பண்ற தப்புகள் என் கண்ணுல படமா இருக்கலாம்? அவனைப் பத்தி மத்தவங்க தப்பா பேசறது காதுல விழமா இருக்கலாம். ஆனா என் மனசுக்குள்ள இருக்கற காமம் என்னை விட்டு போயிடுமா? பெண்ணுடம்பு மோகத்தை மனதிலிருந்து தானே ஒழிக்கவேண்டும். மனசால நான் இவகிட்டேயிருந்து விலகாமல், உடலால் விலகி என்னப் பலன்?

இயல்பா இருடா நல்லசிவம்.. உன் இயல்பு என்ன? அதிகமாக பேசாமல் இருத்தல். உன் பிள்ளைக்கும் பொறுப்பு வரும். அதுவரைக்கும் நீ பொறுமையா இரேன். அவனை ஏன் நீ குறை சொல்லிக்கிட்டே இருக்கே? இருக்கப் போற கொஞ்ச நாளைக்கு மவுனமா இருந்துட்டுப் போயேன்?

உன்னை வேண்டாம்ன்னு சொன்ன ராணியை நீதான் விரும்பி அவதான் வேணும்ன்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டே? மனைவியா ஏத்துக்கிட்டவளை, இந்த வயசுல என்னைக்கோ அவ பண்ணத் தப்பை மனசுக்குள்ள நெனைச்சு, விமர்சனம் பண்ணது சரியா? உன் பார்வையில் அது தப்பு? ராணி தன் பார்வையில அதை தப்புன்னு இதுவரைக்கும் ஒத்துக்கலையே? அவளை இந்த வயசுல உன் வயசுக்கு வந்த புள்ளை எதிர்ல விமர்சனம் செய்தது உன் தப்புத்தானே?

உன் வாழ்க்கையில, உன் இளமையிலேயே ஒரு ஆறுமாசம், ஒரே வீட்டுல நீ இவ கூடவே இருந்துக்கிட்டு, ஓரளவுக்கு மனசாலேயும், சுத்தமா உடம்பாலேயும், ஆறு மாசம், ராணியை விட்டு நீ பிரிஞ்சுத்தானே இருந்தே? உன் மனசாலே இவகிட்டேயிருந்து மீண்டும் உன்னால ஒதுங்க முடியாதா? மனசால் ஒதுங்கினால்… உடல் ஒதுங்கத்தானே போகுது? நல்லசிவத்தின் மனம் யோசித்து யோசித்து ஒருவாறு தன் புலம்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
“நல்லசிவத்தின் முன் ராணி மூச்சிறைத்துக்கொண்டு நின்றிருந்தாள். தரையில் கிடந்த தன் முந்தானையால் தன் வியர்த்த முகத்தையும், கழுத்தையும் துடைத்துக்கொண்டாள். முந்தானையை ஒழுங்காக போடாமல், கோபத்தில் ஏனோதானோவென மார்பின் மேல், புடவையை வீசியவள், கண்ணை மூடி அமர்ந்திருந்த நல்லசிவத்தின் முகத்தை ஒரு வினாடி உற்று நோக்கினாள். அவள் மனதிலும் விஷம் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது.

Updated: April 15, 2021 — 3:36 am