ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 2 62

”லேட் பண்ணாம போடா.. நா டாக்டருக்கு போன் பண்ணிருக்கேன்..! அதிகமா தெரிஞ்சா… அவ வேண்டாம்னு சொன்னாலும் விட்றாத…!! கூட்டிட்டு போயிரு..!!” என்றார்.
” சரிண்ணா.. இப்ப கெளம்பிட்டேன்..” என்றுவிட்டு உடனே எழுந்தேன்.

என்னையே பார்த்துக் கொண்டிருந்த உன்னிடம்…
”முதலாளி.. பொண்ணுககு ஒடம்பு செரியில்லையாம்… ஆஸ்பத்ரி கூட்டிட்டு போகச் சொல்றாரு..!! இரு… போனதும் வந்துருவேன்…!!” என்று விட்டு பாத்ரூம் போய்வர…

நீ உடையணிந்து நின்றிருந்தாய்..! உன் முன்நெற்றி முடி கலைந்திருந்தது.

நான் துண்டை எடுத்து… ஈரம் துடைத்து… அந்தத் துண்டை உன் தோளில் போட்டேன்..!
பேண்ட் சர்ட் போட்டு… கண்ணாடி பார்த்து தலைவார.. நீ என் பின்னால் வந்து நின்றாய்.

நான் தலைவாரித் திரும்பி… உன் கன்னத்தில் தட்டி.. ”அரைமணி நேரத்துல வந்துருவேன்..! பயப்பட வேண்டாம்… இங்க…உன்னை ஒரு புழு.. பூச்சி தீண்டாது..” என்றேன்.!

”ம்…!” தலையாட்டினாய்.மெதுவாக”யாரும் வர மாட்டாங்களா..?”
”யாரும் வர மாட்டாங்க.. கதவ சாத்திக்க..!! அப்படியும் யாராவது வந்தா.. நான் ஸ்டேண்டுக்கு போயிருக்கேனு சொல்லு…”
”என்னைக் கேட்டா…?”

உன் மூக்கைப் பிடித்து ஆட்டி.. ”உறவுக்காரினு சொல்லு..” என்றேன்.
”என்ன உறவுன்னு…?” என யோசணையுடன் பார்த்தாய்.

”என்ன சொல்லுவ…?”
”தெரிலீங்க…! வேலைக்காரினு…. சொல்லட்டுங்களா…?”
”இந்த வீட்டுக்கு வேலைக்காரியா…?” என்று சிரித்தேன்.!

”அப்றங்க…?”
” அது வேண்டாம்…”
” ம்… வேற…என்னன்னு…?”
”ம்..ம்… இப்படி சொல்லேன்..”
”எப்படிங்க…?”
” ராத்திரிக்கு.. படுக்க வந்தவன்னு…”
”ஐயோ… போங்க…” எனச் சிரித்தாய்.
”கவலப்படாத… யாரும் வர மாட்டாங்க..! கதவ தாப்பா போட்டுக்கோ… அதுக்குள்ள நான் வந்துருவேன்..”
”ம்…செரிங்க..!!”
”ஜன்னல மட்டும் தெறக்காத.. என்ன…?”
”ஏங்க…?”
”பின்னால வீட்ல.. ஆள் இருப்பாங்க..! உன்னைப் பாத்தா… யாரு என்னன்னு விசாரிப்பாங்க..!!”
”சரிங்க…”
”டிவிய சத்தமா வெக்காத…! இது உன் வீடு மாதிரி நெனச்சுக்க…! சரியா..?”

சிரித்து ”செரிங்க..” என்றாய்.
” பை…!” எனறு உன் உதட்டில்.. முத்தமிட்டு… விட்டு.. நான் கிளம்பினேன்…!!!

காம்பௌண்ட் கேட் திறந்ததும்… ‘ பப்பி ‘ நாய்.. குலைத்து விட்டு… வாலை ஆட்டிக்கொண்டு வந்தது..!!
நாய் குலைக்கும் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்தாள். என் முதலாளியின் அம்மா.

1 Comment

  1. சூப்பர் ஸ்டோரி

Comments are closed.