என்ன பண்றது என் காதலனச்சே!! 366

மூவரும் இங்கே நான் இருப்பதையே மறந்து விட்டது போல் இருந்தது.. மலர் மட்டும் அப்பப்போ என்னை பார்த்து சிரித்து நான் என்ன நினைக்கிறன் என்று கணிப்பது போல் இருந்தது.

AC நின்ற பிறகும் அண்ணன் மலரை தடவிக் கொண்டிருக்க, அதை சிவந்த கண்களோடு அண்ணி பார்த்துக் கொண்டிருந்தாள். திடீர்னு அண்ணி என்னை பார்க்க நான் அவளை பார்க்க, அவள் பார்வை என்னை ஏளனமாக பார்ப்பது போல் இருந்தது..

“என்னங்க AC நின்னுருச்சு, நீங்க இங்க கொஞ்சம் வாங்களேன்” என்று அண்ணி அண்ணனை அழைக்க, அண்ணன் வெறுப்போடு எந்திச்சு போனான்..

சில நிமிடங்கள் கடந்து செல்ல மலரின் வாய்க்குள் மூன்று விரல்கள் போய்க் கொண்டிருந்தது..

“மலர் மீன் குழம்பு இன்னும் இருக்குடி, நான் வேணா வச்சு தரேன். என் புருஷன் விரலை கடிச்சு திண்ணுறாத” என்று சிரித்து கொண்டே அம்மா சொன்னாள்..

“அத்தை நீங்க இதை முன்னாடியே சொல்ல கூடாதா? காலி ஆகிருச்சி ன்னு நினச்சு நான் மாமா விரலை சப்பிக்கிட்டு இருந்தேன்.. உங்க மீன் குழம்பு அவ்ளோ ருசி அத்தை.. சீக்கிரம் வச்சு கொடுங்க” என்று மலர் சொன்னாள்.

என் அம்மா ஒரு தட்டில் மீன் குழம்பு சாப்பாடை கொண்டு வந்து வைக்க மலருக்கு அப்போதே நாக்கு ஊறியது அவள் முகத்தை பார்த்தாலே நன்றாக தெரிந்தது. ஸ்பூனில் சாப்பிட்டு பழகியவள் கையில் அள்ளி சாப்பிட்டதால் சோற்று பருக்கைகளை அதிகம் தரையில் சிந்தின.. இன்னும் சில பருக்கைகள் அவள் சுடிதாரில் விழ அதை அவள் துடைக்க முயற்சி செய்கையில் சுடிதார் முழுதும் மீன் குழம்பை பரப்பி விட்டாள்.. மொத்தத்தில் ஒரு சிறு குழந்தை சாப்பிடுவதை போல் சாப்பிட, அதை அம்மாவும் அப்பாவும் பார்த்து ரசித்து கொண்டிருந்தனர். இங்கே நான் சாப்பிடாம இருக்குறது எல்லாரும் மறந்துட்டாங்க போல. சரி எனக்கு பசிக்காம இருக்குறதுனால நானும் அமைதியா இருந்துட்டேன்..

4 Comments

  1. Konja perusa podunga

  2. Konjam perusa podunga..

  3. Super story

Comments are closed.