என்ன பண்றது என் காதலனச்சே!! 366

அண்ணி சொன்னதுல நூறு சதவிகிதம் உண்மை இருக்க என்னால் எதுவும் பேச முடியாம தலையை குனிஞ்சுட்டு அமைதியா இருந்தேன்.

(அண்ணி தொடர்ந்தாள்) வேண்டாம் டா தம்பி. இது வேண்டாம் நமக்கு. விட்டுரு!! ன்னு சொல்லிட்டு பாசமா என் தலையை தடவி கொடுத்தாள்.

அண்ணி எதை விட்டுரு ன்னு சொல்றா ன்னு எனக்கு நல்லா புரிஞ்சது. ஆனா நான் எப்படி மலரை விடறது, என்னால அவ இல்லாம இருக்க முடியாது ன்னு நான் எப்டி அண்ணி ட்ட சொல்றது.

(தலையை தடவி கொண்டிருந்தவள் என் கன்னங்களில் கை வச்சு) ஏன் தம்பி அமைதியா இருக்க, நீ மனசுல என்ன நினைக்கிற எனக்கு புரியாம இல்ல டா. உனக்கு அவளை விடறது நரக வேதனை யா இருக்கும். ஆனா உன் வாழ்க்கை வேற பாதையை நோக்கி போகும் பொது அதுவும் தப்பான பாதையா இருக்கும் பொது இந்த நரக வேதனை கூட நல்ல விஷயம் தான் டா.

ஒரு ஒரு உண்மையா அண்ணி எனக்கு புரிய வைக்க, அந்த உண்மை லாம் நெருஞ்சி முள் மாதிரி நெஞ்சை குத்த, மலரை விட்டு விலகுவது என்ற உண்மை கடப்பாரை நெஞ்சை குத்துவது மாதிரி இருக்க என் கன்னங்களை பிடித்து இருந்த அவள் கைகளில் ஆதரவாக சாய்ந்தேன். என் கண்ணுல இருந்து ஒரு துளி அவளோட கையை நனைச்சது. என்னோட கண்ணீரை உணர்ந்ததும் என்னை இழுத்து அவளோட மடியில படுக்க வச்சு ஆதரவா தலையை தடவி கொடுத்தாள்.

நான்: என்னால மலர் இல்லாம இருக்க முடியாது அண்ணி

தலையை தடவி கொண்டிருந்தவள், மெதுவாக சொன்னாள். இது உன் வாழ்க்கை மட்டும் இல்லடா தம்பி, என் வாழ்க்கையும் இருக்கு..

அண்ணனை பற்றி தான் அண்ணி பேசுறா ன்னு புரிஞ்சது. என்கிட்டே பதில் இல்ல, அமைதியாக அவள் மடியில படுத்து இருந்தேன்.

4 Comments

  1. Konja perusa podunga

  2. Konjam perusa podunga..

  3. Super story

Comments are closed.