நான் யோசித்துக்கொண்டே வண்டியை ஓட்ட வீடு வந்து சேர்ந்தோம். மலர் என்னை முந்திக் கொண்டு வேகமாக வீட்டை நோக்கி ஓடி கதவை தட்டினாள்.. சும்மாவா பின்ன காதலிக்க ஆரம்பிச்சு இரண்டாவது வாரத்தில இருந்தே, எப்போ உங்க வீட்டுல சொல்லுவ, எப்போ என்னை உங்க வீட்டுக்கு கூட்டி போவ ன்னு நாலு மாசமா நச்சரிச்சா..
என் அம்மா தான் கதவை திறந்தாள்..
யாரும்மா நீ? என்ன வேணும்
என்னை பார்த்தா யாரு ன்னு கேக்குறீங்க.. என்னை தெரியலையா?
இல்லையேம்மா.. நீயே சொல்லிடேன்..
நான் இன்னும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தேன்.. அம்மா என்னை கவனிக்கவில்லை..
மலர்: உங்க வருங்கால மருமகளை பார்த்து யாரும்மா நீ? ன்னு கேக்குறிங்கள்ல.. பாருங்க கல்யாணத்துக்கு அப்புறம் உங்களை வச்சுக்கிறேன்..
அவள் சொல்லிமுடிக்க நான் சரியாக அங்கு வந்தேன்.. என் அம்மாவுக்கு எல்லாம் புரிந்தவுடன், மலரை மேலிருந்து கீழ் வரை பார்த்து மகிழ்ந்து போனாள்..
அம்மா: டேய் கிஷோர் எப்புடிடா இந்த பொண்ண பிடிச்ச.. இவ்ளோ அழகா இருக்கு.. (மலரிடம் திரும்பி) ஓ என் பையன கட்டிக்கிட்டு என்னை சைடுல வச்சுக்க போறியா? என்று அவளை பார்த்து கண்ணடித்தாள்..
ச்சீ போங்க அத்தை, நான் என் புருசனுக்கு மட்டும் தான்..
Konja perusa podunga
Mmmm podalam
Konjam perusa podunga..
Super story