உடனே விமலா ராஜியிடம் அண்ணா எப்ப வருவார் அண்ணி என்றாள்…
எப்பொழுதும் போல் நாளைக்கு மதியம் 3 மணி போல் வருவார்…ஈவினிங்க் 6 மணிக்கு கேக் வெட்டிவிடளாம் அப்போ தான் செல்வா காலேஜ் விட்டு வருவான் நீயும் வருவே என்றாள்…
சரி அண்ணி நான் கிளம்புகிறேன் என்று அவளும் அவள் தம்பியும் கிளம்பினார்கள்.
அவர்கள் அவள் அப்பா அம்மா உடன் வேறு ஒரு ஏரியாவில் இருந்தார்கள்..ராஜி அவள் கணவனுடன் இங்கே தனியாக வசித்து வருகிறாள்..
இந்த ஹேப்பி பெர்த்டே தெர்மோகோலை யாரு மாட்டுவா என்றாள் ராஜி.. விமலாவிடம்..
அது தான் உங்க பாசமான தம்பி இருக்கார்ல அவர் மாட்டுவார் என்று ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு …நான் கிளம்புகிறேன் எனக்கு நிறைய படிக்க வேண்டியது இருக்கு என்றாள்…
ஆமா…ஆமா ….அக்கா இருந்தாலும் விமலாவுக்கு இது ஓவர் தான் …பி.ஏ இங்கிலீஷ¤க்கே இப்படியா என்றேன் ராஜியிடம்…
ஹ்ம்ம் நான் படிக்க்றது எனக்கு …அவுங்கவுங்க கோர்ஸ் அவுங்கவுங்களுக்கு பெரிசு என்ற சொல்லி…டாக்டருக்கு படிக்க்ரோம்னு ரொம்ப தான் ஆடுராரு உங்க தம்பி…கொஞ்சம் சொல்லி வைங்க என்று கிளம்பினாள்…
அக்கா நீங்க சொன்னது சரி தான் எப்பா… என்னது இப்படி பேசுராங்க…பாவம் இவுங்களை கட்டிக்க போரவரு என்றேன்…
அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் அதெல்லாம் நாங்க பார்த்துக்கிரோம்..நீங்க உங்கள நம்பி வருபவளை நல்லா பார்த்துக்கொள்ளுங்கள் என என்னிடம் முதல் முறை நேரடியாக பேசினாள்…
சொல்லிவிட்டு விருட்டென கிளம்பி சென்று விட்டாள்…
நான் ஹேப்பி பெர்த்டே அட்சயா என்ற தெர்மோகோல் எழுத்துக்களை ஒவ்வொன்றாக எடுத்து குண்டூசி தேடி சுவற்றில் இருந்த துணியில் மாட்டிக்கொண்டிருந்தேன்…
நான் சாப்பாடு உனக்கும் சேர்த்து வைத்து விடுகிறேன் என சொல்லி கிச்சன் சென்றாள்.
இல்லை வேண்டாக்கா என்று சொன்னதும்…அதெல்லாம் முடியாது நீ இன்னைக்கு இங்கே தான் சாப்பிடனும் என்று சொல்லி டீவியை ஆன் பன்னி விட்டு கிச்சன் சென்றாள்..
டீவியில் இரவு செய்திகள் தொடங்கி விட்டிருந்தது….