வாசமான ஜாதிமல்லி 4 29

அன்று பிரபு சென்றபின் மீரா விசாரமுள்ள மனநிலையில் இருந்தாள். நான் மகிழ்ச்சியாக இருக்க எனக்கென்று நான் இதுவரைக்கும் என்ன செய்து இருக்கேன். ஒரு நல்ல மனைவி மற்றும் தாயாக இருந்து என் குடுபத்தை நல்லபடியாக கவனித்தேன். என் வாழ்க்கையே என் கணவர் மற்றும் குழந்தைகளை சுற்றி தான் இருந்தது. இபோது நான் வசதியான நிலையில் இருக்கேன் அனால் வாழ்கை என்றால் இது மட்டும் தானா? சமைப்பது, வீட்டை பராமிப்பது, கணவர் மற்றும் பிள்ளைகளின் தேவைகளை கவனித்துக் கொள்வது. சமுதாயம், இதுதானே ஒரு இல்லத்தரசியின் பொறுப்பு என்று சொல்லும்.

எப்போது நான் கடைசியாக எனக்கு பிடித்ததை செய்து மிகுந்த மகிழ்ச்சியுடன் சிரித்திருக்கேன் என்று யோசித்தாள். ஆனாலும் என் கணவர் என்னை ரொம்ப அன்போடு பார்த்துக்குறார். கணவன் மனைவி இடையே சின்ன சின்ன சண்டைகள் வருவது சகஜம் அனால் எங்கள் இடையே அது கூட மிகவும் குறைவு. என்னை கோபம் கொண்டு அவர் திட்டியது கூட கிடையாது. நான் ஆசைப்பட்டதை வாங்கி கொடுத்திருக்கார். எனக்கு இரண்டு அழகான குழந்தைகள் இறுக்கர்கள். சமுதாயத்தில் பெரும் மதிப்பு இருக்கு. இதற்க்கு மேல என்ன வேணும் என்று தன்னை கேட்டுக்கொண்டாள்? இருந்தபோதிலும் ஒரு இன்மை உணர்வு இருந்தது. அதை உதறி தள்ள முடியவில்லை மீராவுக்கு.

அன்று மாலை வழக்கம் போல மீரா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தாள். அவள் பிள்ளைகளுக்கு அன்று கூடுதல் டிவிஷன் இருந்ததால் அவர்கள் அவளுடுன் வரவில்லை. அவள் அன்று கோவிலுக்கு போவது அவளுக்கு அவசியமாக இருந்தது. அவள் மனதை உறுதிகொண்டு இருக்கும் சஞ்சலத்தை சாந்த படுத்த வேண்டும். அவள் அடக்கி வைத்திருந்த அல்லது அழ மனதில் அவளுக்கே தெரியாமல் புதைந்தகிருந்த வருத்தங்கள் இப்போது உணர துவங்கிவிட்டாள்.

அவள் வீட்டுக்கு நெருங்க அங்கே பிரபு அந்த மங்க தோப்பில் அவன் பைக் மேல் சாய்த்துக்கொண்டு இருப்பதை பார்த்து ஆச்சிரியம் அடைந்தாள். மீரா முதலில் பார்த்தது பிரபு கையில் சிகுரெட் இருக்குதா என்பதை தான். அப்படி எதுவும் இல்லை என்று பார்த்த போது மகிழ்ச்சி அடைந்தாள். அவளுக்கு செய்த சத்தியம் அவன் மீறவில்லை.

“உன்னாலே கட்டுப்படுத்த முடியவில்லை தானே, இங்கே புகை பிடிக்கத்தான் வந்த,” என்று மீற சிரித்தபடி அவனை சீண்டினாள்.

பிரபு பதிலுக்கு புன்னகைத்தான் அனால் அவன் எதோ ஒரு சிந்தனையில் இருப்பது போல இருந்தது. இதை கவனித்த மீற, அக்கறையுடன் கேட்டாள்,” நீ எதோ ஒரு கலக்கத்தில் இருப்பது போல இருக்கு, என்ன அது?”

பிரபு ஒன்னும் இல்லை என்று காட்டிக் கொள்வதுக்காக புன்னகைத்து போல மீராவுக்கு தோன்றியது,” ஒன்னும் இல்லை, நல்ல தான் இருக்கேன்,” என்றான்.

மீரா அவனை விடப்போவதில்லை,” சும்மா சொல்லாத, உன் முகம்மெ உன்னை காட்டி கொடுக்குது, என்ன விஷயம்?”

“இல்லை, உண்மையில், ஒன்னும் இல்லை,” ஒரு வற்புறுத்தலான புன்னகை வீசினான்.

“நாம நண்பர்கள் என்று நினைத்தேன், நீ பகிர்ந்துகொள்ள விரும்பாலான பரவாயில்லை, சரி எனக்கு வேலை இருக்கு,” என்று அங்கே இருந்து மீரா கிளம்பினாள்.

மீரா எரிச்சல் அடைந்தாள் என்று பிரபுவுக்கு விளங்கியது,” கோப படாதே மீரா, இரு, நான் சொல்லுறேன்,” என்று கூறி அவளை தடுத்தான்.

மீரா திரும்பி அவனை நெருங்கி வந்து நின்றாள். அவன் தன் அந்தரங்க விஷயத்தை தன்னுடன் பகிர்ந்துகொள்ளும் அளவு அவளை நம்புகிறான் என்று அவளுக்கு மகிழ்ச்சி. “சொல்லு, ஏன் உன் மூஞ்சி யாரிடம்மொ உன் பணத்தை எல்லாம் பறிகொடுத்தது போல இருக்கு,” அவன் மூடை லேசாக்கும் வகையில் புன்னகைத்துக் கொண்டு கேட்டாள்.

பிரபு அவன் வாலெட் வெளியே எடுத்தான். மீரா உடனே,” காசு பறிபோகலா, எல்லாம் இருக்கு என்று நீ காட்ட தேவை இல்லை,” என்று சிரித்தாள்.

மீரா அப்படி சொன்னபோது பிரபுவும் உண்மையில் சிரித்துவிட்டான். அவள் சிறிய ஜோக் அவனை சிரிக்க வைத்துவிட்டது என்று மகிழ்ந்தாள். அவன் வாலெட் உள்ளே சொருகி இருந்த ஒரு போட்டோ எடுத்து அவளிடம் காண்பித்தான். என்ன போட்டோ அது என்று அறிய ஆவல் கொண்டு அதை எடுத்து பார்த்தாள், பார்த்ததுதான் அதிர்ச்சி அடைந்தாள்.

அந்த போட்டோவில் பிரபுவும் ஒரு வெள்ளை காராச்சியும் இருந்தார்கள். அவர்கள் இருவரும் மற்றவரின் இடையை கையில் சுற்றி வளைத்து பிடித்து பாஸ் கொடுத்திருந்தார்கள். அவள் பற்பத்துக்கு நல்ல தான் இருந்தாள். மீராவுக்கு ஒரு பொறாமை உணர்வு அவள் இதயத்தை குத்தியது.

2 Comments

Comments are closed.