அம்மாவுக்கு அம்மாவும்
அப்பாவுக்கு அப்பாவும்
நல்ல தோழனுக்கு தோழனாகவும்
உன் கூட இருந்து இது வரைக்கும் உன்னை
பார்த்துக்கிட்டேன்.
உனக்கு எந்த குறையும் இல்லாம உன்னை வளர்த்தேன்.
நல்ல படிக்கச் வச்சேன்.
வெளிநாட்டில் போய் படிக்கணும் னு நீ சொன்னபோது
எனக்கு பிடிக்காட்டாலும் உன்னை அனுப்பி வைச்சேன்.
காரணம் உன்னை பிரிய எனக்கு மனசில்லை.
உன் மனசு கஷ்டப்பட கூடாதுனு நீ இஷ்ட பட்ட படி அனுப்பி படிக்கச் வச்சேன்.
ஆனா நீ போன பிறகு எனக்கு தனிமை வாட்டியது.
இவ்வளவு பெரிய வீட்டில் நான் மட்டும்.
அதிக நேரம் ஆபிசில் இருக்கும்போது,
உன் மாமா அமீர் எனக்கு சொன்ன யோசனை.
உதவிக்கு ஒரு ஆளை வைத்து கொள்ள சொன்னான்.
அப்போது வந்தவதான் பவித்ரா.
ஆரம்பத்துல எனக்கு ஒன்னும் தெரியல.
ஆனா போக போக
அவளுடைய பேச்சும், குணமும், வேலை செய்யிற
திறமையும் ரொம்பவே அபாரம்.
நம்மகிட்ட வேலைக்கி வரும்போதே கல்யாணம் ஆணவ.
அதனாலேயே நான் அவகிட்ட ரொம்ப நெருங்காம இருந்தேன்.
ஆனா அவ ரொம்பவே என்கிட்ட நெருங்கி
உரிமையா நடந்துக்கிட்டா.
என்னுடைய உடல் நிலை சீரானது.
ஆனா என்னுடைய மனசு சஞ்சல பட ஆரம்பிச்சது.
நான் எந்த முடிவு எடுத்தாலும் அது அவ வாழ்க்கையை பாதிக்கும் என்று தெரியும்.
ஆனா இது எல்லாம் நடக்கும் என்று தெரியாது.
இதனாலேயே அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்.
சலீம், என்ன டாடி, உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்ததா,
ஏன் எனக்கு சொல்லல.
ஹசன், சிரிப்புடன், உனக்கு சொன்னா உன் மனசுதான் கஷ்டப்படும்.
படிப்பு கெடும்.
அதனால்தான் நான் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன்.
சலீம், என்ன டாடி, இப்படி சொல்றீங்க,
உங்களுக்கு ஏதாவது ஆனா