வழிமறியவள் – Part 50 34

குடும்பம் நடத்துவதாக தான் நினைத்து கொண்டு இருந்தனர்.

பவித்ராவின் அண்ணன் பாலுவுக்கோ தன் தங்கச்சியின்

துரோகமும், மாமாவின் விட்டு கொடுத்த அணுகுமுறையும் அவனை ரொம்பவே
பாதித்தது.

இதனால், அவன் திருமணம் செய்து கொள்ளவே பயப்பட ஆரம்பித்தான்.

தனக்கு வரப்போகும் மனைவியும் தன் தங்கச்சி போல

தன்னை ஏமாத்தி விடுவாளோ என்று நினைக்க ஆரம்பிச்சான்.

அவன் நினைக்கிறதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

சில மாதங்கள் கழித்து, சதிஷ் அவன் வெளிநாட்டு நண்பன் அன்புவை அழைத்து

அவனுக்கு ஒரு நல்ல அந்தஸ்து வேலையை போட்டு கொடுத்தான்.

நாட்கள் நகர்ந்தன

பவித்ராவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

அம்மாவை போலவே குழந்தை அழகாக இருந்தது.

அம்மா எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாய்யும்னு சொல்வாங்களே.

அப்போ இந்த குழந்தையும் பிற்காலத்திலே அம்மாவை விட……………..

யாருக்கு தெரியும்………….

பொறுத்திருந்து பார்ப்போம்……………………

குழந்தை பிறந்தவுடன் அந்த வீட்டின் சூழ்நிலை

சிறிது சிறிதாக மாற தொடங்கின.

பவித்ரா கூட சதிஷ் உடல் ரீதியாக எந்த தொடர்பும் இல்லைனு

அறிஞ்ச ஹசன் ரொம்பவே ஆச்சர்ய பட்டார்.

இப்படியும் ஒரு மனிதன்.

சதீஷின் இந்த வைராக்கியம் ஹசனுக்கு ரொம்பவே பிடிச்சிருச்சி.

சதிஷ் மேல நல்ல அபிப்ராயம் ஹசனுக்கு.

சதிஷ் பவித்ரா மேலதான் தன் வெறுப்பை காண்பிச்சானே ஒழிய

ஹசனிடம் அன்பாகவே இருந்தான்.

இந்த குணம் ஹசனையும் பவித்ராவையும் ஆச்சர்யப்படவும்

குழப்ப படவும் வைத்தது.

தன் சொந்த கம்பனி என்றாலும் சதிஷ் நிறைய விஷயங்கள்

ஹசனிடம் கலந்து ஆலோசித்து செயல் பட்டான்.

வேலை இல்லா இளைஞர்களுக்கு தன்னுடைய கம்பனியில் வேலை கொடுத்தான்.