சம்பத்-“டேய் மச்சி நீ வரவேண்டாம் ”
அலெக்ஸ் – டேய் மாமு ,நான் already on the way
சம்பத் – இல்ல மச்சி,அந்த பொண்ணோட அப்பன்காரன் வந்து கூட்டிட்டு போய்ட்டான்டா. அதனாலே நீ வராதே
அலெக்ஸ் – என்ன மாமு இப்படி ஏமாற்றி விட்டாய் ,சரி நான் இன்ஸ்பெக்டர் பலராமுக்கும் வரவேண்டாம் என்று ஃபோன் பண்ணி சொல்லி விடுகிறேன்.
ம் இப்போ வந்து இந்த மாமனை கட்டி அணை பார்க்கலாம் ,50 KG தாஜ் மகால் எனக்கே எனக்கா என்று சம்பத் கையை நீட்ட,.
சிரித்து கொண்டே நெருங்கிய ஸ்ருதி நீட்டிய கையை முதுகின் பின் வளைத்து முறுக்க ,
ஐயோ விடுடி கை வலிக்குது என்று அவன் கதறி பின்புறமாக இன்னொரு கையை நீட்ட அதையும் பிடித்து துப்பட்டாவை வைத்து கட்டி ஸ்ருதி முடிச்சு போட்டாள்.அவன் அடி வயிற்றில் முழங்காலால் ஒரு எத்து எத்த அங்கேயே சுருண்டு விழுந்தான்.
ஏண்டா நாயே ,இவ்வளவு தானடா உன் பலம் .ஒரு பொம்பளை என்னையே உன்னால சமாளிக்க முடியல, கட்டின பொண்டாட்டிய கூட ஒழுங்கா வாழ துப்பு இல்லாத உனக்கெல்லாம் இன்னொரு பொண்ணு கேட்குதா? . ச்சீ நீயெல்லாம் ஒரு ஆம்பள . தூ தூ……
பக்கத்தில் இருந்த sofa வின் காலில் அவனை பிணைத்து கட்டிவிட்டு சாவியை எடுத்து திறந்து பொறுமையாக வெளியேற
அடியேய் நீ எங்கே போனாலும் உன்னை விட மாட்டேன் என்று அவன் கத்த
அதுக்கு நான் திரும்ப இங்கே வந்தா தானே ,இதோடு உன் வேலைக்கு good bye என்று வெற்றி நடை போட்டு வெளியேறினாள்.
வேலை விட்டு நின்று போனதை அறிந்த அவள் பெரியப்பா தாம் தூம் என்று வீட்டில் குதிக்க ,அந்த நேரம் பார்த்து அவன் கைபேசி அழைத்தது.
“ஹலோ சொல்லு, நான் கேட்ட விசயம் என்ன ஆச்சு ”
எதிர்முனை -ஒரு வரன் வந்து இருக்கு அவங்களுக்கு முழு திருப்தி.உடனே கல்யாணம் பண்ணி கொள்ள வேண்டும் ஆசை படுகிறார்கள் ,ஆனா ……..
கருணாகரன் -யோவ் அதெல்லாம் பரவாயில்ல எனக்கு வர வேண்டியது வந்து ஆகனும்.என் நிபந்தனைகளை சொல்லி விட்டாயா .
எதிர்முனை – சொல்லி விட்டேன் அய்யா
கருணாகரன் – அப்போ நாளை காலை பொண்ணு பார்க்க வர சொல்லு
எதிர்முனை – சரிங்க அய்யா
வீட்டிற்குள் வந்த கருணாகரன் ,
நாளை ஸ்ருதியை பொண்ணு பார்க்க வருகிறார்கள் .பெரிய ஜமீன் குடும்பத்தில் இருந்து வருகிறார்கள் நல்லா அலங்காரம் பண்ணு என்று கற்பகத்திடம் கூறினான்
ஆனால் நாளை ஸ்ருதி வாழ்வில் அணுகுண்டு வெடிக்க போவது அறியாமல் கற்பகம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள்.
பெண் பார்க்கும் படலம் வீட்டில் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்க
ஸ்ருதிக்கு அலங்காரம் அமர்க்களமாகவே நடந்து கொண்டு இருந்தது.
என் பொண்ணு அலங்காரம் இல்லாமலே தேவதை கணக்கா இருப்பா ,இப்போ அலங்காரம் வேறு செய்து கொண்டு அழகில் மஹாலக்ஷ்மியையே தோற்கடித்து விடுவாள் போல் இருக்கே ,கற்பகம் மூக்கில் விரல் வைக்க
பார்த்தும்மா ,என் பொண்டாட்டி அழகிற்கு யார் இங்கே போட்டி என்று மகா விஷ்ணு சண்டைக்கு வந்து விட போகிறார் இது சாரு
போடி,அந்த மகா விஷ்ணுவே வந்தாலும் என் பொண்ணுகிட்ட காதல் பிச்சை தான் வாங்குவார் கற்பகம் கூற
ஆமாம், இரண்டு வாழைதண்டு நடுவில் உள்ள ராஜ கோபுரத்தை ஆள ராஜகுமாரன் வந்து கொண்டு இருக்கிறான் என்று ஒரு தோழி கலாய்க்க
போதும் பெரியம்மா சும்மா என்னை ஓட்டாதீங்க ஸ்ருதி வெட்க்கபட்டாள்.
ஐயோ என் பொண்ணுக்கு வெட்க்கத்தை பாரேன்.
