வா ஸ்ருதி ,காலையில் லேட்டா வந்தீயா அது தான் கொஞ்சம் கோபத்தில் திட்டி விட்டேன்
பரவாயில்லை சார் ,இன்னிக்கு வந்த details
ஆதார் கார்டு – 14
Eb bill – 8
Railway ticket booking – 27
அப்புறம் TNPSC group 4 and போஸ்ட் ஆபீஸ் job apply செய்தது -15
அப்புறம் ஜெராக்ஸ் and print out details எல்லாம் இதில் இருக்கு.
Total amount 4576 ரூபா இருக்கு சார்
நான் கிளம்பலாமா சார்?
இரு ஸ்ருதி என்ன அவசரம் ?உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும் ?
இல்ல சார் ,எனக்கு கடைசி பஸ் 9.30 மணிக்கு அதை விட்டா எனக்கு வேற பஸ் இல்ல.நாளைக்கு பேசிக்கலாம்.
நீ ஏன் போய் வீட்டில் கஷ்டப்பட போகிற ? உனக்கு தான் வீட்டில் எந்த வசதியும் கிடையாதே.இங்கே AC இருக்கு .நல்லா மெத்து மெத்து என்று காஸ்ட்லி பஞ்சு மெத்தை இருக்கு .இன்று இரவு இங்கேயே என்னோடு தங்கி விடு .
சார் நீங்க நினைக்கிற ஆள் நான் கிடையாது .நான் கிளம்புறேன்.
எங்கே போ பார்க்கலாம் ,என்று கதவை தாழ்ப்பாள் இட்டு சாவியை தூக்கி எறிய அது sofa விர்க்கு அடியில் விழுந்தது. எவ்வளவு நாள் இதுக்காக காத்திட்டு இருக்கேன்.இன்னிக்கு உன்னை விட்டால் என்னை விட முட்டாள் யாரும் இந்த உலகத்திலேயே கிடையாது.
அதுவும் இல்லாம இது ஒன்னும் சினிமா இல்ல ,ஹீரோ எவனாவது வந்து காப்பாற்றுவதற்கு
என் பெரியப்பா என்னை தேடி இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார் ,தயவு செய்து கதவை திறங்க
என்ன காமெடி பண்ற ஸ்ருதி,எப்படியும் நீ வீட்டுக்கு போகிற நேரம் மணி பத்து ஆயிடும்.அதற்கு அப்புறம் தான் உன்னை தேடி இங்கே வருவாங்க ,அதுக்கு மறுபடியும் இன்னும் ஒரு அரை மணி நேரம் ஆகும் .இந்த time போதாதா நம் first night நடக்கறதுக்கு.ஒழுங்கா வந்து படுத்தா காயம் எதுவும் இல்லாம வீட்டுக்கு போய் நானே விடுவேன்,வெளியே யாருக்கும் விசயம் தெரியாது.இல்லை என்றால் ஓடி ஆடி dress எல்லாம் கிழிந்து வந்து படுத்தாலும் சரி எனக்கு ok தான் .என்ன ,இங்கே நடக்க போகிற விசயம் வெளியே தெரிந்து நீ தான் அசிங்கப்படனும் என்று அவன் நெருங்கி வர,
நீ கிட்டே வந்தா நான் கத்தி இப்போ கூப்பாடு போடுவேன்.
எங்கே போடு என்று டிவி VOLUME யை அவன் அதிகப்படுத்தினான்.
“நீ என்ன கத்தினாலும் வெளிய கேட்காது.எவனும் இதுவரை ஏன் அதிகமாக சவுண்ட் வைக்கிறேன் என்று வந்து கேட்டதும் கிடையாது.”
சமயோசிதமாக யோசித்த ஸ்ருதி,எதிரில் சரக்குக்கு mix செய்வதற்காக வைத்து இருந்த Sprite பாட்டிலை எடுத்து மூஞ்சில் ஊற்றினாள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஸ்ருதி sofa விற்கு அடியில் விழுந்த சாவியை எடுக்க முயன்று கொண்டு இருக்கும் பொழுது அவன் முகத்தை துடைத்து கொண்டு நெருங்கி வந்தான்.
சுதாரித்த ஸ்ருதி அவன் நெருங்கும் முன் பெட்ரூம் சென்று தாளிட்டு கொண்டாள்.
ஏய் ஸ்ருதி ,ஒழுங்கா கதவை திற இன்னிக்கு நீ என்ன பண்ணாலும் எங்கிட்ட இருந்து தப்ப முடியாது என்று கதவை இடித்தான்.
நீ சொன்ன கேட்க மாட்டா,ஒழுங்கா கதவை திறந்தா நான் மட்டும் உன்னை அனுபவித்து விட்டு விடுவேன்.இல்லை இன்னும் ரெண்டு பேரை கூப்பிட்டு உன் உடம்பை நார் நாரா கிழித்து விடுவோம் என்று அவன் மிரட்ட ஸ்ருதி தப்பிக்க வழி தேடினாள்.
கோபத்தில் எரிமலையாய் வெடித்து கொண்டு இருந்த சம்பத் ,உடனே மொபைலை எடுத்து ,டேய் அலெக்ஸ் நீ உடனே இன்ஸ்பெக்டர் பலராமை கூட்டி கொண்டு வீட்டுக்கு வாடா.ஒரு செம ஃபிகர் மாட்டி இருக்கு இன்னிக்கு ராத்திரி முழுக்க வச்சி செய்வோம்.
எதிர்முனையில் இருந்த அலெக்ஸ் ,உடனே வரேன் மாமா .
ஸ்ருதி உன் உடம்பை தயார் படுத்தி வச்சிக்கோ இன்னும் பத்து நிமிஷத்தில் எங்க ஆளுங்க வந்து விடுவார்கள் என்று கதவிற்கு வெளியே நின்று கத்தினான்.
அறைக்குள் அடைப்பட்டு இருந்தாலும் ஸ்ருதியின் மனம் நிதானமாகவே செயல்பட்டது.மூன்று பேரிடம் போராடுவதை காட்டிலும் ஒருவனுடன் சண்டையிடுவது முடியக்கூடிய காரியம் என்று மனதில் தோன்ற ஸ்ருதி உடனே செயலில் இறங்கினாள்.கதவை திறந்த ஸ்ருதி,
என்னை மன்னித்து விடுங்கள் சார்,நான் உங்களுடன் படுக்க சம்மதிக்கிறேன் . பிளீஸ் அவங்களை மட்டும் வர சொல்லாதீங்க.
ம்,அப்படி வா வழிக்கு என்று சொல்லிய சம்பத் அலெக்ஸிற்கு ஃபோன் செய்தான்.
