நான் வர மாட்டேன் பெரியப்பா ,வந்தால் என்னை அந்த கிழவனுக்கு கட்டி வைத்து விடுவீர்கள் என்று அழ
ஷெட்டி ,சார் ஒரு நிமிசம் நான் பேசணும் என்று கூற,
ஐயா எங்க பொண்ணை காப்பாற்றியதற்கு ரொம்ப நன்றி,இது எங்க குடும்ப விஷயம்,நீங்க உங்க வேலையை பார்த்து கொண்டு போங்க,
ஸ்ருதி ,சார் பிளீஸ் என்னை காப்பாற்றுங்கள் ,இல்லை என்றால் என்னை அந்த கிழவனுக்கு கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள் என்று கெஞ்ச.
ஸ்ருதியின் மற்றொரு கையை ஷெட்டி இப்போது பிடிக்க,
கருணாகரன் அதிர்ச்சியுடன் ,சார் அவ கையை விடுங்க ,இல்லை என்றால் உங்க மரியாதை கெட்டு விடும்.
அப்பொழுது அங்கு வந்த கிழவன் குடும்பத்தார் ,சார் இது எங்க குடும்ப விசயம் நாங்க பேசி தீர்த்து கொள்கிறோம் .நீங்க வெளியே போங்க
இவர்கள் பேச்சில் நடுவில் வந்த கற்பகம் சார் அவளை வளர்த்த நானே சொல்றேன், என் பொண்ணை உங்க கூட கூட்டி போங்க ,இவங்க என் பொண்ணு வாழ்க்கையை நாசம் செய்து விடுவார்கள்.
ஏய் கற்பகம் உனக்கு ஒன்னும் தெரியாது,நீ உள்ளே போ என்று கன்னத்தில் அறைய
அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது. கருணாகரன் கையை ஸ்ருதி உதறி ,
” பெரியப்பா என் அம்மா மேல கையை வைத்தீர்கள் என்றால் அவ்வளவு தான். இவ்வளவு நாள் நான் உங்களிடம் பொறுத்து பொறுத்து போனது எல்லாம் என் அம்மாவிற்காக மட்டுமே .நான் இப்பொழுது மேஜர் ,எனக்கு சுயமாக முடிவெடுக்கும் திறன் உண்டு. என்னை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது”
அம்மா ,நான் உங்களுக்காக பெருமாள் கோயிலில் காத்து இருக்கிறேன் .நீங்க வாங்க.
ஸ்ருதி ஷெட்டியை நோக்கி ,சார் எனக்கு ஒரு கடைசியாக ஒரு உதவி,என்னை ஒரு ladies hostel லில் மட்டும் சேர்த்து விட முடியுமா ?
சரி ,வா பெருமாள் கோயில் சென்று பேசி கொள்ளலாம்.
யாரும் இல்லாத இடத்தில் ஷெட்டி மற்றும் ஸ்ருதி சென்று அமர,
ஷெட்டி ஸ்ருதியிடம் ,உன்னை ஒரு ladies hostel லில் இப்பொழுது நான் சேர்த்து விட்டாலும் உன் பிரச்சினை தீராது. உன்னை பார்த்து கொண்ட சென்ற சம்பத் கண்களில் அப்பட்டமாக வெறி தெரிந்தது.கண்டிப்பாக வேறு ஒரு வழியில் வந்து உன்னை தொந்தரவு செய்வான்.உன் பெரியப்பா அங்கு வந்து தகராறு செய்தால் உன்னால் என்ன செய்ய முடியும்.அந்த கிழவன் வேறு பணபலம் உடையவனாக இருக்கிறான்.இந்த நேரத்தில் கண்டிப்பாக ஒரு வலிமையான பாதுகாப்பு உனக்கு தேவை.உன் பிரச்சினை தீர்வதற்கும் ,என் பிரச்சினை தீர்வதற்கும் ஒரே ஒரு வழி தான் உள்ளது .
அது என்ன வழி சார்?
அதற்கு நாம் ஒரு ஒப்பந்தம் போட்டு கொள்ளலாம்.அது உனக்கும் benefit,எனக்கும் benefit
ஷெட்டி கூறிய அந்த ஒப்பந்தத்தை கேட்டு ஸ்ருதி பயங்கர அதிர்ச்சி அடைந்தாள்.
ஷெட்டி அவளிடம் கூறியது என்ன?ஷெட்டி கூறிய அந்த ஒப்பந்தத்திற்கு ஸ்ருதி ஒப்பு கொள்வாளா?ஸ்ருதியினால் ஷெட்டிக்கு ஆக வேண்டிய காரியம் என்ன ?
ஸ்ருதி உன் பிரச்சினை மற்றும் என் பிரச்சினை தீர்வதற்கு ஒரு வழி தான் உள்ளது.
என்ன வழி சார் அது ?
அதற்கு முதலில் நான் அந்த ஓட்டலுக்கு ஏன் வந்தேன் என்று சொல்லுகிறேன்.
எஸ் சொல்லுங்க சார்,
நான் அந்த ஓட்டலுக்கு வந்தது என்னுடைய மனைவியாக நடிக்க ஒரு விலை மாதுவை தேடி தான்.
உங்களுக்கு தான் மனைவி இருக்காங்களே ,அப்புறம் ஏன் சார்?
அவசரபடாதே..,ஸ்ருதி நான் சொல்வதை முழுக்க கேள்.என் மனைவி இப்போ இங்கே இல்ல.என்னுடைய கிராமத்தில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது.என் தொகுதியில் நிற்பதற்கு பெண்களுக்கு மட்டுமே கட்சி மேலிடம் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது..என் மனைவி வெளிநாடு சென்று உள்ளதால் அவள் வரும் வரை ,என்னுடைய மனைவியாக நடிக்க ஏதாவது ஒரு பெண் தேவை ,அதற்காக தான் வந்தேன்.
எனக்கு புரியல சார் ,நீங்க இருப்பது மத்திய அரசில் இணை அமைச்சர் பதவி ,போயும் போயும் ஒரு கவுன்சிலர் பதவிக்கு இவ்வளவு ஏமாற்று வேலை தேவையா?
யாருக்கும் சொல்லாத ரகசியம் உன்னை நம்பி சொல்றேன் ஸ்ருதி .இது வெறும் கவுன்சிலர் பதவி என்றால் போனால் போகிறது விட்டு விடுவேன்.ஆனால் இப்போ என் மந்திரி பதவியை காட்டிலும் முக்கியமான தேவை அந்த பதவி தான்.அந்த கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் கனிமவளத்துறை லித்தியம் கிடைக்கிறது என ஊர்ஜிதம் செய்துள்ளது.லித்தியம் என்பது எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிக்கான மூலப்பொருள் .அந்த இடத்தை முழுக்க நான் தான் டெண்டர் எடுத்து உள்ளேன்.இப்பொழுது அதை தங்கு தடையின்றி அதை எடுக்க வேண்டும் என்றால் எனக்கு அந்த கவுன்சிலர் பதவி தேவை.அதில் கிடைக்கும் பெரும் வருமானத்தை வைத்து தான் என் மக்களுக்கு என்னால் நலத்திட்டங்கள் செயல்படுத்த முடியும்.இதை வைத்து வரும் தேர்தல்களில் என் அரசியல் பதவியை நீட்டித்து கொள்ள முடியும்.இப்பொழுது நான் என் மனைவியை நிற்க வைக்கவில்லை என்றால் அந்த பதவி எனது எதிரி கைக்கு சென்று விடும்.அது எனக்கு மிகுந்த அரசியல் பின்னடைவை கொடுக்கும்.என்னோட கெட்ட நேரம் என் மனைவி இங்கே இல்லை .இன்னோரு முக்கியமான விசயம் இதற்கு முன் என்னுடைய முக்கிய வருமானம் போதை மருந்து கடத்தல் மட்டும் தான்.அதில் எனக்கு நிறைய வருமானம் வரும் ,அதை என் அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்வேன்.ஆனால் அதையும் என் அனிதா பேச்சை கேட்டு விட்டு விட்டேன்.என்னோட மாற்று வழி வருமான ஆதாரங்கள் தான் இவை.அரசியலில் நீடிக்க வேண்டும் என்றால் அதிகாரம் மட்டும் போதாது,பணமும் முக்கிய தேவை.இதெல்லாம் அரசியல் உனக்கு புரியாது.ரொம்ப எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் தவறான வழியில் சம்பாதித்தால் கூட தப்பு கிடையாது ஸ்ருதி.
சரி சார் ,இப்போ என்கிட்ட என்ன எதிர்பார்க்கிறிங்க
நீ நிச்சயமாக புத்திசாலி தான் ஸ்ருதி ,நேராக point க்கு வந்து விட்டாய்.நீ ஆசைப்பட்ட படிப்பு மற்றும் நீ கேட்கும் அனைத்தையும் நான் நிறைவேற்றி கொடுக்கிறேன்.எல்லாவற்றிற்கும் மேலாக உனக்கு முழு பாதுகாப்பு தருகிறேன்.அதற்கு பதில் என் மனைவி நீ அனிதாவாக ஒரு வருடத்திற்கு நடிக்க வேண்டும்.
சார் ர்ர்ர் …. என்று ஸ்ருதி அதிர்ச்சியாக,
இரு ஸ்ருதி இன்னும் நான் முடிக்க வில்லை
நீ என் மனைவியாக இந்த கவுன்சிலர் election பதவிக்கு மட்டும் நடித்தால் மட்டும் போதும்.ஊரார் பார்வைக்கு தான் நீ என் மனைவி ,மற்றபடி வீட்டில் நாம் வெறும் நண்பர்கள் மட்டுமே.நீ எதுவும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒரு agreement நான் போட்டு தருகிறேன்.அது முழுக்க முழுக்க உன் எதிர்காலத்திற்கு பாதுகாப்பு.நீ இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் கூட பரவாயில்லை நீ கேட்டு கொண்டபடிஉன்னை ஹாஸ்டலில் சேர்த்து விட்டு கிளம்புகிறேன்.நீ எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்.The ball is in your court Shruthi.
சரியாக அந்த நேரம் கற்பகம் மற்றும் சாரு வர இவர்கள் பேச்சு நின்றது.

கதை சூப்பர் ❤️❤️❤️❤️
Super story