”கிட்டதட்ட உன்ன பாத்தாளும் எனக்கு.. என் புள்ளைய பாக்கற மாதிரிதான் இருக்கு..” என்றார் சாந்தியின் அப்பா.
” ஏன்ப்பா.. ?” சாந்தி.
” இல்ல.. இந்த புள்ளையோட புருஷன பத்தி பேசிட்டிருந்தோம்..”
” அது எதுக்குப்பா இப்ப.. விடு..”
” இப்படி விட்டு குடுத்து.. விட்டு குடுத்து.. உன்னை மாதிரியே.. அப்பன் ஆத்தாள நம்பிட்டு போய் உக்காரச் சொல்றியா.. ?”
” இவள்ளாம் அப்படி இல்ல..? அவனை லெப்ட் ரைட் வாங்கிட்டுதான் இருக்கா..!”
” சும்மா சண்டை போடறதுனால அவன் திருந்திர மாட்டான். இந்த புள்ளையோட அப்பன மாதிரி ஆளுக.. குடிச்சிட்டு வந்து நாலு வீசு வீசிறனும்.. அப்பதான் நெஞ்சுக்குள்ள ஒரு பயம் இருக்கும்..”
” எங்கப்பன் அடிச்சா.. என்னைத்தான் அடிக்கும்..” என்று சிரித்தபடி சொன்னாள் பாக்யா.
பன்னிரெண்டு மணிக்கு பாக்யாவை உட்கார வைத்து பிரியாணியை சாப்பிட வைத்தாள் சாந்தினி. சிக்கன் பிரியாணி. மட்டன் வருவல்..! காரசாரமாக நல்ல மணத்துடன் சமைத்திருந்தாள்.!
” எல்லாமே நான்தான் செஞ்சேன்.” என்றாள் ”நல்லாருக்கா..?”
” சூப்பரா இருக்கு.! எப்படி பழகின..?”
” அங்க.. எங்க வீட்டு பக்கத்துல ஒரு முஸலிம் அக்கா இருக்கு. அதுகிட்ட இருந்து கத்துகிட்டேன்..!!”
உண்மையாகவே விரும்பி சாப்பிட்டாள் பாக்யா. மூக்கு முட்ட சாப்பிடும் அளவுக்கு கவனித்தாள் சாந்தினி. !! சாப்பிட்ட பின் உட்கார்ந்து வெற்றிலை போடும் போது கேட்டாள் சாந்தி.
” சினிமா போலாமா பாக்யா..?”
” எப்ப.. ?”
” மேட்னிக்கு..”
” போய்ட்டு வாங்க..” என்றார் அவள் அப்பா.!
” போலாம்..” என யோசனையாக இழுத்தாள்.
” ஏன்.. ?”
” இல்ல.. என் புருஷன் வீட்ல இருக்கான். அவன் இல்லாம போனா.. எங்கப்பா திட்டும்.. அதான் யோசிக்கறேன்..”
” சரி.. அவனையும் வரச் சொல்லு..”
” ம்ம்.. கேட்டுப் பாக்கறேன்..! வருவான். !!” என்றாள் முடிவு செய்து.
சாந்தி வீட்டில் இருந்து விடை பெற்று தன் வீட்டுக்கு வந்தாள். பரத் வீட்டில் கால் மேல் கால் போட்டு படுத்துக் கொண்டிருந்தான். எதுவும் பேசாமல் அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்தாள். அவன் மெல்லப் புரண்டு அவள் மடியில் கையைப் போட்டான். நல்ல மூடில்தான் இருக்கிறான் என்று தோன்றியது.
” சாப்பிட்டியா ?” என்று கேட்டாள்.
” ம்ம்.. நல்லா பசி வேற ஆயிருச்சு. போட்டு ஒரு வெட்டு வெட்டிட்டேன்..” அவள் இடுப்பை தடவினான்.
அவன் பக்கம் சாய்ந்தாள்.
” சினிமா போலாமா..?”
” என்ன திடீர்னு..?”
” சாந்தி என்னை கூப்பிட்டா.. நீ வந்தா நல்லாருக்கும்..”
” என்னையும் அவதான் கூட்டிட்டு வரச் சொன்னாளா..?”
” ஆமா.. நீ பெரிய ஆணழகன் பாரு..? அவ நாங்க ரெண்டு பேரும் தனியா போற மாதிரிதான் சொன்னா.! இதே நீ வேலைக்கு போயிருந்தா.. நான் போயிருவேன். இன்னிக்கு நீ வேற வீட்ல இருக்க. உன்னை விட்டுட்டு எப்படி நான் மட்டும் போறது.. ?”
” ஏன்.. போனா என்ன.. ?”
” போலாம்தான்.. ஆனா எனக்கும் ஒரு அப்பன் இருக்கானே.. குடிகார அப்பன்..! அவன் என்னை புடிச்சு காச்சு காச்சுனு காச்சிருவான்..!” என்று சிரித்தபடி சொன்னாள் ”வீட்ல ரொம்ப போர் அடிக்குது. வாடா போலாம்..”
” பல்லி வருவாளா.. ?” நைட்டிக்கு மேல் அவள் மார்பைத் தடவினான். அவளுக்கு சுத்தமாக மூடு இல்லை.
” தெரியல. அவ வர மாட்டா.. அவங்கப்பன் அவளை கொன்னே போட்றுவான்..”
” நாம மூனு பேரு மட்டுமா..?”
” ஏன்.. உனக்கு வேற ஜோடி வேணுமா.. ??”
” இருந்தா நல்லாத்தான் இருக்கும்..” அவன் முகத்தை தூக்கி அவள் மார்பில் வைத்தான். வாசம் பிடித்தான்.
” அப்ப கூப்பிட்டுக்கோ..”
” யாரை. ?”
” உனக்கு புடிச்சவ ஒருத்தி இருக்காளே.. அவளையே வேணாலும் கூப்பிட்டுக்கோ..”
” ஏய்.. லூசு மாதிரி பேசாதடி..” சட்டென விலகிச் சொன்னான்.
” சரி தொலை. நாசமாப் போனவனே..! கெளம்பு. இப்ப போனா சரியா இருக்கும்..” அவளும் எரிந்து விழுந்தாள்.
” சரி படு.. ஒரு ஆட்டம் போட்டுக்கலாம்..”
” ஏ.. வந்து பாத்துக்கலாம். என்னால இப்ப முடியாது. சாந்தி வீட்ல பிரியாணி செஞசுருந்தா.. நான் நல்லா ஒரு வெட்டு வெட்டிட்டேன். வயிறு பாரு.. எப்படி ஊதிட்டு இருக்குனு..!!” என்று வயிற்றைக் காட்டினாள்.
” அடிப்பாவி.. புருஷனை விட்டுட்டு அவ வீட்ல போய்.. மூக்கு புடிக்க தின்னுட்டு வந்துருக்கியா.. ?”
” ஆமா.. பெரிய புருஷன். சீமைல இல்லாத புருஷன். ! அடச் சீ.. எந்திரி..”
பரத் எழுந்தான். அவள் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு..
”குளிச்சிட்டு வந்தர்றேன். எதுக்கும் நீ அந்த பல்லி வராளானு போய் கேட்டுப் பாரு..” என்று விட்டு வெளியே போனான்.
பாக்யா எழுந்து முத்து வீட்டுக்குப் போனாள். முத்துவின் அப்பா வீட்டில்தான் இருந்தார்.
” ஏன் பாக்யா ?”
” முத்து என்ன பண்றாண்ணா.?”
” படுத்துட்டு இருக்கா..”
முத்து ”ஏம்ப்பா. ?” என்று உள்ளிருந்து கேட்டாள்.
” வெளிய வா..”
முத்து வந்தாள். அவள் முகம் பூரிப்பாக இருந்தது. வாய் நிறைய புன்னகை.
” சினிமாக்கு வரியாடி ” சன்னமாகக் கேட்டாள்.
” இப்பவா ?”
” ம்ம்.. ”
” யாராரு.. ?”
” சாந்தி. நானு.. என் புருஷன்.. ”
” பரத்தும் வரானா.. ?”
” ஆமா..! அவனுக்கு ஜோடி இல்லேன்னு அவன்தான் உன்னை கூட்டிட்டு வரச் சொன்னான்..” என்று சிரித்தாள்.