ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 4 24

மழையும் பெரிதாகப் பெய்யவில்லை… மறுபடி… அவளும்.. கோமளாவும் போய்த்தான்… ராசுவை எழுப்பி விட்டார்கள்…!!

பாக்யா… பரத்.. திருமணம்.. எளிய முறையில்… எந்தவிதப் பிரச்சினைகளும் இல்லாமல் நடந்து முடிந்தது.
பஞ்சாயத்து நடந்ததற்குப் பிறகு… தாழி கட்டும் முன்பாகத்தான் பரத்தின் முகத்தைப் பார்த்தாள் பாக்யா.
அவளது மனம் இன்ப வெள்ளத்தில் தத்தளித்தது.

ஊர் மக்கள் அனைவருமே.. ஜாதி.. பேதமின்றி…அவளது திருமணத்துக்கு வந்திருந்தனர். அதில் எல்லோருமே அவளை ஆசீர்வதித்தார்களா இல்லையா என்று தெரியவில்லை.. ஆனால்….. ஒருவர்கூட.. அவளைத் திட்டத் தவறவில்லை..!!

படிக்கவேண்டிய வயதில் இப்படி அவசரப்பட்டு… திருமணம் செய்து கொண்டதற்காக…!!

மதியத்திற்கு மேல்.. கோவிலுக்குப் புறப்பட்டார்கள். பாக்யா புடவை மாற்றிக்கொண்டிருக்க… கோமளா அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.

” இன்னுமே.. என்னால நம்ப முடியல கோமு..” என்றாள் பாக்யா.
”என்ன…?” என அவளைக் கேட்டாள் கோமளா.
”என் கல்யாணம் இப்படி…நல்ல விதமா முடியும்னு.. ராசு வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் எத்தனை பயத்துலருந்தேன் தெரியுமா..?”
” எல்லாம் ராசு பண்ணதுதான்.. எல்லாருகிட்டயும் பேசி… வரவெச்சு… எப்படியோ எல்லாம் நல்ல படியா முடிஞ்சுது. ..”
”வெளில இருந்தா… அவன கூப்பிடு..”
” யாரு உன் புருஷனவா..?”
” ஏய்.. அவன இல்லடி… ராசுவ..”
”எதுக்குடி…?”
” கூப்பிடேன்…”

கோமளா வெளியே போனாள். பாக்யா புடவை மாற்றி.. தயாராகி விட்டாள்.

கோமளா உள்ளே வந்தாள். ”வர்றான்..”
ராசு வந்து ” என்ன பொறப்பட்டாச்சா..?” என்றான்.
” ம்..! நீயும் வா…!”
” நம்மளுக்கு அதெல்லாம் ஒத்து வராது… போய் நெறைய வரத்த வாங்கிட்டு வா..”
சிரித்தவாறு முன்னால் வந்து அவன் நெஞ்சில் சாய்ந்து… அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள் பாக்யா.
”தேங்க்ஸ் பையா…”
”ஏய் லூசு… என்னடி இது…” என்றான் ராசு.
கோமளா பதறினாள் ”யேய்.. யாராவது வரப்போறாங்கடி..!”
” ரொம்ப.. ரொம்ப தேங்க்ஸ்டா..” என மனசு நெகிழ்ந்து சொன்னாள் பாக்யா..!!

மாலைவரை…சுமூகமாகத்தான் இருந்தது.
ஆனால் அதன் பிறகு ஒரு பிரச்சினை கிளம்பியது..!

இரவு… அவர்கள் எங்கே..தங்குவது என்கிற பிரச்சினை.!!

பரத்தின் அக்கா… அவனது வீட்டில்தான் பையனும்.. பொண்ணும் தங்க வேண்டும் என்று பிடிவாதமாக நிற்க….
பாக்யா வீட்டினர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
அந்தப் பிரச்சினை நீண்ட நேரம் நடந்து கொண்டிருந்தது.
ஆளாலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க… அதுவரை அமைதியாக இருந்த பாக்யா… வெளியே போய்… அத்தனை பேர் முன்பாகவும் நின்று…
”யாரும் சண்டை போட வேண்டாம்…நாங்க.. அங்கயே போய் தங்கிக்கிறோம்..” என்று சொல்ல….

ராசு உட்பட… அவளது உறவினர்கள் அத்தனை பேரும் வாயடைத்துப் போனார்கள்.
அவளைத் திட்ட வந்தவர்களையும் அடக்கினான் ராசு. .!
”வாழப் போறவ.. அவ..! அவளே இப்படி சொன்னப்பறம்…இனி நாமெல்லாம் பேசறதுல.. அர்த்தமே இல்ல… விட்றுங்க..!”

அதன் பிறகு… அவளது வீட்டுச் சூழ்நிலையே மாறிப்போனது..!
அதுவரை கலகலப்பாக இருந்த வீடு… அமைதியாகிப் போனது..!

பரத்தின் அக்கா.. அவர்களைப் புறப்படச்சொல்ல.. இருவரும் போய்… புறப்படத்தயாராக…
அவளது சொந்தங்கள் எல்லாம் கிளம்பத் தொடங்கினர்..!!

” உங்க சொந்தக்காரங்க எல்லாம் கோவிச்சுட்டு போறாங்க போலருக்கு..?” என்றான் பரத்.
” போனா போயிட்டு போறாங்க..! அதுக்கென்ன பண்ண முடியும்…?” என்றாள் அவள்.

கோமளாவின் குடும்பம் தவிற.. மற்ற அனைவருமே கிளம்பினர்.
அவளது அப்பாவும்…அம்மாவும்… அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்புவது கேட்டது.
ராசுவின் அம்மாவைத் தவிற..வேறு யாரும் வந்து… அவளிடம் சொல்லிக்கொள்ளவில்லை.

அவள் புறப்பட்டு வீட்டுக்குள் நின்றிருந்த போதுதான் தெரிந்தது ராசுவும் கிளம்புகிறான் என்று..!!

அதுவரை இயல்பாக இருந்த அவளது மனதில்.. சட்டென ஒரு கலவரம் உருவானது.

அம்மா சொல்லிக்கொண்டிருந்தாள்..!
” எல்லாருமே போய்ட்டாங்க நீயாவது இரு தம்பி..!”
”இல்லக்கா..! கோவிச்சுக்காத..!” ராசு.
அவளது அப்பா ”நீ போகக்கூடாது ராசு..! இன்னிக்கு ஒரு நாள் இருந்துட்டு போ..! உனக்கு என்ன வேனுமோ..எல்லாம் நா வாங்கித்தரேன்..!” என்றார்.
”சே.. சே..! அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மச்சா..! போயி.. இனி வேலைய பாக்கலாம்…!” என்றான் ராசு.

அம்மா…” அவ சொல்லிட்டான்னெல்லாம் கோவிச்சுட்டு போறியே தம்பி.. அவளப் பத்தி உனக்கே தெரியுமே..! அவள விட்று.. நீ..எங்களுக்காக இரு..!”
” சே.. சே..! அதுக்காகெல்லாம் இல்லக்கா..! நீ அப்படி எதும் நெனச்சுக்காத…” ராசு.

மறுபடி அப்பா ” இதபார் ராசு.. நீ சொன்னேங்கற.. ஒரே காரணத்துக்காகத்தான்.. இத்தனை கடன் பட்டு… எல்லாரையும் கூப்பிட்டு வெச்சு… நல்லபடியா இந்த கல்யாணத்த நடத்தி வெச்சோம்..! இல்லேன்னா..ஊர்க்காரரே என்னமோ பண்ணிட்டு போகட்டும்னு விட்றுப்போம்..! இப்ப இத்தனை ஏற்பாடு பண்ணதெல்லாம் நாம…! ஆனா அவன் எங்களுக்கு பையனே இல்லேன்னெல்லாம் சொன்னவங்க… இப்ப வந்து கூப்பிட்டதும்… அவங்க கூட போறதுக்கு நிக்கறா.. இப்பவே பெத்தவங்கள மதிக்காத.. இது எங்க நல்லா வாழப் போகுது..?
அவ எப்படியோ போய்ட்டு போறா… இனி அவளாச்சு… அவ புருசனாச்சு..! ஆனா அவ பேசிட்டானு… நீ போறதெல்லாம் எனக்கு சுத்தமாவே புடிக்கல…”
” என்ன மச்சா…நீங்க மறுபடி…மறுபடி…”

அவளது அம்மா இறுதியாக ஒன்று சொன்னாள்.
”இதபாரு தம்பி… நீ இருந்தா.. நாளைக்கு அவளைப் போய் மறு அழைப்புக்கு கூட்டிட்டு வருவோம்.. நீ போய்ட்டா.. இதோட கடைசி..! நீயே முடிவு பண்ணிக்க…!!”
ராசு ”என்னை மன்னிச்சுருக்கா… இதுக்கு மேல என்னால இருக்க முடியாது.. நா கெளம்பறேன்..” என்க…

அதைக்கேட்டுக்கொண்டிருந்த பாக்யாவின் கண்களில் மளமளவென கண்ணீர் வழிந்தது.. மடை திறந்த வெள்ளம் போல…அவளின் கண்களிலிருந்து கண்ணீர் அருவி… வழிய…
பரத் அவள் தோளைத் தொட்டான். ”ஏய்….”

அவளால் தாங்க முடியவில்லை. சட்டென விம்மல் வெடித்தது. அப்படியே மடங்கி உட்கார்ந்து.. முழங்கால்களுக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டு கேவினாள்.
அவள் பக்கத்தில் உட்கார்ந்து.. அவளது தோளைத் தொட்ட பரத்தின் கையைத் தட்டிவிட்டாள்.

4 Comments

  1. Full story padichiten ya..semmmaa…super….waiting for next part….

  2. Bro vera level intha kathai en valkaila nadanthiku bro ana relationship than vera

  3. Next part podunga. Story romba interesting a irukku.

  4. Really good story natural in family incidents in true story

Comments are closed.