ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 3 19

வீட்டிற்குப் போனபோது… எல்லோரும் வெளியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
ராசும்.. அங்கேயே நின்றுவிட்டான்.
பாக்யா வீட்டுக்குள் போனாள். அம்மா மீன் ரோஸ்ட் போட்டுக்கொண்டிருந்தாள்.

”எங்கடி… என் தம்பி. .?” எனக் கேட்டாள் அம்மா.
”உன் பையன் எங்கே..?” என அவள்.. அம்மாவைக் கேட்டாள்.
” மாமா உன்ன கூப்பிடத்தான்டி வந்துச்சு..”

கீழே உட்கார்ந்து..சுவற்றில் சாய்ந்து கொண்டாள்.

” அப்படி போகனுமா.. அந்த டீவிய பாக்கறதுக்கு. .?” எனக் கேட்டாள் அம்மா.
”இனிமே… போகலதாயி…விடு..”
” மாமன் எஙகே..?”
”…….”
” உன்னைத்தான்டி…”

அம்மாவையே முறைத்துப் பார்த்தாள்.

”ஏன்டி…பன்னி..! வாயத் தொறந்து. .சொல்ல மாட்டியா..?”
” இருக்கான்மா…” எனக் கத்தினாள். ”நீ உன் வேலையை பாரு. ..”

சட்டென விறகுக்கொ!ள்ளியை
எடுத்து நீட்டினாள் அம்மா.
”இத பாரு. ..கொள்ளிக்கட்டைல.. சூடு போட்றுவேன்.. இப்படி பேசினீன்னா.. மரியாதையா பேசிப்பழகு..! என்னடி நெனச்சுட்டிருக்க மனசுல…? ஒழுக்கமா… ஸ்கூல்…போய்ட்டு வந்தமா… வீட்டு வேலையப் பாத்தமானு இரு…! ஊருமேயப் போனே..காலமுறிச்சு.. உக்காரவெச்சுருவேன் தெரிஞ்சுக்கோ…” என அம்மா. .சகட்டுமேனிக்குத் திட்ட….

சட்டென அவள் மனசு உடைந்தது. மளமளவென… கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அப்படியே சுருண்டு படுத்துக்கொண்டாள்.

இரண்டு மீன் துண்டுகளை..ஒரு தட்டில் போட்டு. .. அவளிடம் நகர்த்தி வைத்தாள் அம்மா.
”இந்தா… சும்மா அழுகாம…திண்ணுட்டு படு…”

பேசவில்லை. மூக்கை உறிஞ்சினாள்.

”பாப்பா…” அம்மா
”…….”
” பா…ப்பா…”
”……..”
” லேய்…பன்னி…”
”………”
”ஏன்டி… உங்க மாமன்.. திட்டிட்டானா…?”
”.. ……..”
”சரி பேசாட்டி பரவால்ல… சாப்பிட்டு படு…எந்திரி…”

அவள் அசையக்கூட இல்லை.
அம்மா கூப்பிட்டுப் பார்த்து… ஓய்ந்துவிட்டாள்.

பேச்சு முடிந்து. .. அவளது அப்பாவும். ..ராசுவும் வீட்டுக்குள் வந்தனர்.
கதிர் ”அக்கா தூங்கிட்டாளாம்மா..?” எனக்கேட்டான்.
”தெரில… எழுப்பி பாரு. .”
”வேண்டாம். . எந்திரிச்சா..எனக்கு செம ஏத்து கெடைக்கும்” எனச் சிரித்துக்கொண்டே சொன்னான் கதிர்.

அம்மா. . அவள் அப்பாவிடம் புகார் தெரிவித்தாள்.
”அழுதுட்டே..படுத்துட்டா…”

”அவள திட்னியாக்கும்..?”அப்பா.
”திட்டாம…கொஞ்சறதா.. உன்ற மகள…?”

”பாப்பா. .. எந்திரி சாமி.. சாப்பிட்டு படு..” என அவளைக் கூப்பிட்டார் அப்பா.
”வேண்டாம்ப்பா… எனக்கு பசி இல்ல. .” என்றுவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

அவள். . அம்மாவும். .அப்பாவும்..மறுபடி சாப்பிடச் சொன்னார்கள்.
தொந்தரவு தாங்க முடியாமல். .
” எனக்கு ஒன்னும் வேண்டாம். .நீங்க திண்ணுட்டுபோய் படுங்க. ” என எரிச்சலோடு சொல்லிவிட்டுப் படுத்துக்கொண்டாள்.

அப்படியும். .அப்பா.. கூப்பிட்டுக்கொண்டேதான் இருந்தார். அவள் வாயே திறக்கவில்லை.

ராசு… ஒரு வார்த்தைகூட கூப்பிடவில்லையே என்பதுதான். . அவளது ஒரே எண்ணமாக இருந்தது.

சாப்பிட்டு விட்டு. .. அவளது பெற்றோர் படுகககப் போய்விட்டனர்.
கதிரும் படுத்து விட்டான்.
ராசு எழுந்து வெளியே போனான்.

எத்தனை நேரமென்று தெரியவில்லை. லேசாகக் கண்ணயர்ந்துவிட்ட.. அவளை அம்மா வந்து எழுப்பினாள்.
”பாப்பா. ..”
” என்னமா..?” என எரிச்சலோடு கேட்டாள்.
” எந்திரிச்சு சாப்பிட்டு படு..”
”ஒன்னும் வேண்டாம் போ..”
” மாமன் ஏதாவது…திட்டிருச்சா..சாமி…?”

தலைதூக்கிப் பார்த்தாள். ராசு இல்லை.
”நீ..போ..” என்றாள் அம்மாவிடம்.
” சரி..அப்படியே எந்திரிச்சு உக்காரு. ..”
” எதுக்கு..?”
” சோறு ரெண்டு வாய்.. ஊட்டியுட்டுட்டு. . போறேன். .”
”வேண்டாம்… போ..”
” எந்திரி சாமி. ..”
” என்னமா…நீ…” என வேண்டா வெறுப்பாக எழுந்து உட்கார்ந்தாள்.

தட்டில் உணவைப் போட்டுப் பிசைந்து.. ஊட்டிவிட்டாள் அம்மா.
மீன் துண்டையும். . அம்மாவே.. பிய்த்துக்கொடுத்தாள்.

மறுபடி… மெல்லக் கேட்டாள் அம்மா.
” மாமன்கூட சண்டையா..?”
” ம்கூம். ..”
” உன்னை ஏதாவது திட்டுச்சா.?”
”ம்கூம். ..”
” அவன் திட்டமாட்டான்னு தெரியும். . நீ அவன திட்னியா..?” எனச் சிரித்துக்கொண்டு கேட்டாள்.
”இல்ல. .” அவளும் சிரித்தாள்.
”பையன் மூஞ்சியே செரியில்லடி… நீதான் ஏதாவது பேசிருப்ப… உன்னைப் பத்திதான் தெரியுமே..”
”இல்லமா..! உன் தம்பிதான் என்னை திட்னான்…”
” உன் நல்லதுக்குதான்டி.. ஏதாவது சொல்லிருப்பான்..”

” எங்க. .. ஆளவே காணம். .?”
”வருவான்…”

அம்மாவிடம் நன்றாகவே சாப்பிட்டாள் பாக்யா.
”இத்தனை பசிய வெச்சுட்டா.. இல்லாத பிகு பண்ண…”
”நான் ஒன்னும் பிகு பண்ல..! அப்பறமா சாப்பிட்டுக்கலாம்னு சும்மா படுத்திருந்தேன்..” எனச் சிரித்தாள்.

3 Comments

  1. It’s story is very interesting &very very very super cute story

    1. Quikly part 4 & ❤Love u so much

Comments are closed.