ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 3 19

அவள் மண்டையில் ஒரு கொட்டு வைத்துவிட்டு எழுந்து வெளியே போனான்.

பாக்யா எழுந்து போய்… இரண்டு தட்டுக்களில் உணவைப் போட்டாள்.

முகம் துடைத்தவாறு உள்ளே வந்தான் ராசு.
இருவரும் பொதுவாகப்பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள்.

மாலையில் வேலை முடிந்து வந்த. . அவள் அப்பா.. தெளிவாகத்தான் இருந்தார்.
ராசுவைப் பார்த்தவர்..

”வா ராசு. . எப்ப வந்த. .?” எனக்கேட்டுவிட்டு…அவனோடு பேசினார்.

அப்பாவுக்கு காபி வைத்துக் கொடுத்தாள் பாக்யா. அதைக்குடித்தவாறே… அவரது மனக்குமுறல்களையெல்லாம் ராசுவிடம் கொட்டினார். அவரது தவறையும் ஒத்துக்கொண்டார்.

இறுதியாக….
”தனியா ஒரு ஆம்பளை…வீட்ல வயசு வந்த புள்ளைய வெச்சிட்டு என்ன செய்ய செய்யறது.ராசு. அதுக்காகவாவது உங்கக்கா வந்துருக்கனும்…” என்றார்.
”நீங்க போய் கூப்பிட்டிங்களா.?”
”நாலஞ்சு தடவ போய் கூப்பிட்டு பாத்துட்டேன். அவ வரவே மாட்டேனு சொல்லிட்டா.. போனதடவ சீமாத்துலகூட அடிச்சா… அதையும் வாங்கிட்டுத்தான் வந்தேன். என்ன செய்றது… ஏது செய்றதுனு ஒன்னும் புரியல எனக்கு…! ஆனா ஒன்னு ராசு.. உங்கக்கா வல்லேன்னா… குடும்பம் அவ்வளவுதான்… நாசமாவே போயிரும்..” என வருத்தப்பட்டார்.

தன் மனதிலிருந்ததையெல்லாம் கொட்டிவிட்டு. .. இருட்டியதும் வெளியே கிளம்பி விட்டார்

அவர் போனதும்…
”ரொம்பவே வருத்தப்படறார் போலருக்கு..” எனச் சிரித்தான் ராசு.
”இவங்க ரெண்டு பேரும். . மறுபடி ஒன்னு சேருவாங்களா ராசு. .?” எனக்கேட்டாள் பாக்யா.
”சேருவாங்க…” என்றான் ”உங்கம்மாளப் பாத்து பேசனும்.”

இரவு…!!
வெளியே போய்விட்டு வந்த.. பாக்யாவின் அப்பா.. போதையில் இருந்தார்.
பாக்யாவின் அம்மாவை கொல்லாமல் விடப்போவதில்லை என்றார். அந்தக்குடும்பத்தையே.. அழிக்கப் போவதாக சூளுறைத்தார்.

பாக்யாவை சாப்பாடு போட்டுத்தரச்சொல்லி… வற்புறுத்தி… அவரைச் சாப்பிடச் செய்தான் ராசு.
சாப்பிட்ட பின்… உளறிக்கொண்டே… வாசலிலேயே படுத்துத் தூங்கிவிட்டார்.

அவரை எழுப்பிப் பார்த்தார்கள். அவர் அங்கேயே படுத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டார்.
அப்பறம்… அவர்களும் படுத்துக்கொண்டனர். நீண்ட நேரம் பேசினார்கள்.
அவளது காதலைத் தவிர்த்து.. மற்ற எல்லா விசயங்களையும் அவனுடன் பேசினாள் பாக்யா.
இருவரும் பக்கம் பக்கமாகத்தான் படுத்திருந்தனர்.
பேச்சினிடையே… அவ்வப்போது… ஒருவரையொருவர் தொட்டுக்கொள்வதும். .. செல்லமாக அடித்துக்கொள்வதும் நடந்து கொண்டிருந்தது.
அவனோடு பேசிக்கொண்டிருப்பது… அவளுக்கு… மிகப்பெரும் ஆறுதலாகவும். .. சந்தோசமாகவும் இருந்தது.

நேரம் நள்ளிரவாக…
”சரி தூங்கலாம்..” என்றான் ராசு.
”தூக்கம் வந்தாச்சா..?” எனக்கேட்டாள் பாக்யா.
” ம்…ஏன் உனக்கு வல்லியா.. இன்னும். .?”
” வருது… ஆனா உங்கூட பேசிட்டே இருக்கனும் போலருக்கு. .”
” அட… அம்புட்டு பாசமா… என்மேல..?”
” பாசமெல்லாம் ஒன்னுல்ல..”
”அப்பறம்…?”
”ஆத்திரம். ..”
”என்ன ஆத்திரம். ..?”
”எவ்வளவோ இருக்கு..” எனச் சிரித்து அவன் நெஞ்சில் கைவைத்து ”திருந்திட்டியா..?” என்றாள்.
”ஏன். ..?”
”இல்ல… வந்ததுலருந்து.. இன்னும் எனக்கு ஒரு முத்தம்கூட தராம இருக்க..?”

புன்னகைத்தான் ”ம்.. நீதான சொன்ன. ..?”
”என்ன. .?”
”மொதல்ல நீ திருந்துன்னு..”
”ஓ..”சிரித்தாள் ”அப்ப நீ முடிவு பண்ணிட்ட..?”
” ம்…”
” ஆனா எனக்கு வேனுமே..”
”என்ன…?”
” முத்தம். ..?”
” போயி..உன்னோட ஆளுகிட்ட கேளு…”
” ஐயோ…அவனும் குடுப்பான்.”
”அப்ப….மூடிட்டு படு..”
”ஆனா …அது வேற முத்தம்..”
”வேற முத்தம்னா..?”
” ஆசை முத்தம்..”
”ஓ…”
”எனக்கு.. பாச முத்தம். .. அன்பு முத்தம்லாம்… உன்னத் தவற.. வேற யாரு குடுப்பா..” என்றாள்.
” ஒரு கதவு தெறந்தா… இன்னொரு கதவு மூடத்தான் செய்யும். .” என்றான் ராசு.
”அதுக்கும்… இதுக்கும் என்னருக்கு..?”
” மலக்கா படுத்து யோசி… புரியும். .” எனக..

மெதுவாகப் புரண்டு. . அவன் நெஞ்சின்மேல் சாய்ந்து படுத்தாள்.
”அப்படியெல்லாம்.. உன்ன விட முடியாது பையா… என்னால..! நா வேனா… வாபஸ் வாங்கிக்கறேன். .!”
”என்னது..?”
”அன்னிக்கு நான் பேசின.. எல்லாத்தையும்…!! நீ திருந்தல்லாம் வேண்டாம்.. பழைய ராசுவா இரு..! என்னக் கட்டிப்புடிச்சுக்கோ… முத்தம் குடுத்துக்கோ..! ஆனா.. என்னை வெறுக்க மட்டும் செஞ்சிடாதடா..ப்ளீஸ். .!! நீ சண்டை போட்டுட்டு போனதுலருந்து… உன்னை நெனச்சு… நெனச்சே அழுதிட்டிருக்கேன் தெரியுமா..?” என கொஞ்சம் உருக்கமாகவே சொன்னாள்.

அவள் கன்னம் வருடியவாறு சிரித்தான்.
” இல்ல.. இனி நாம பிரிஞ்சுதான் ஆகனும். .”
”ஏன். ..?”
”நீ… ரெக்க மொளச்ச பறவையாகிட்ட.. இனி உனக்குன்னு ஒரு வாழ்க்கை..வரப்போகுது..!!”
”ஏ…! என்ன பேசற.. நீ..?”

அவன் விட்ட பெருமூச்சில்.. அவன் மார்பின் மேல் படுத்திருந்த பாக்யா. .. மேலெழுந்து அடங்கினாள்.
அவள் மூக்கைப் பிடித்து ஆட்டி
” போதும்… படுத்து தூங்கு.. நாளைக்கு பேசிக்கலாம்..” என்றான்.
”இல்ல இப்பவே சொல்லு..”
”என்ன சொல்றது..?”
”நீ சொல்ல வந்தத..”
” நீ எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறே..?”
”ஏன்…?”
”கல்யாணத்துக்கு முன்னயே கர்ப்பமானா.. நல்லாருக்காது..”

அவனை முறைத்தாள்.

” மொறச்சு.. புரியோஜனமில்ல குட்டி..! உன்ன நீதான் பாதுகாத்துக்கனும்..”
” சரி… மூடிட்டு தூங்கு..” என்றாள்.
”ஒரு பொட்டப் புள்ளைக்கு. . இத்தனை ரோசம் நல்லதில்ல..”

அவனைக் கட்டிப்பிடித்து. . அவன் நெஞ்சில் கன்னம் வைத்து… ”நா இப்படியே தூங்கறேன்..” என்றாள்.
அவள் தலையைத் தடவினான். ”எத்தனை வாட்டி.?”
”என்ன. .?”
” நீ செக்ஸ் பண்ணது..?”

சட்டெனத் தலைதூக்கி… அவனைப் பார்த்தாள்.
”ச்சீ…”
”என்ன…லொச்சீ…?”
” பின்ன…என்ன பேச்சு இது..?”
”எங்கிட்ட.. நீ நடிக்கறது வேஸ்ட்றா குட்டி…”
”ஐயோ. . சத்தியமா அப்படிலாம் இல்லடா..”

அவளையே பார்த்தான்.

3 Comments

  1. It’s story is very interesting &very very very super cute story

    1. Quikly part 4 & ❤Love u so much

Comments are closed.