ஆசை மட்டும் சிறிதும் குறையவே இல்லை 3 50

மெல்லடிகள் வைத்து.. அவள் என்னை நெருங்கி நின்ற போது.. அவளிடமிருந்து கமழ்ந்த.. அவள் பூ மேனியின்.. நறுமணம்.. என்னைக் களிப்படையச் செய்தது.
இளங் குமரியான.. ஒரு கன்னிப் பெண்ணின் பொன்மேனி வாசம்.. வாசணைத் திரவியங்கள் கலந்து.. வந்து.. என் சுவாசத்தில் புகுந்து.. என் உள்ளத்தை மிகவும் களிப்படையச் செய்தது..!!

”மண்டபத்தில் தங்களைக் காணாமல்.. நான்… இங்கு… தேடிக் கொண்டு வந்தேன் இளவரசே…!! ஏன் தனியாக இங்கு வந்து விட்டீர்கள்..??” என்னைக் கேட்ட.. அவளின் இனிமையான குரல் என் செவியை இன்புறச் செய்தது.

”அமைதியை விரும்பி..!!” என்றேன்.

”ஆ.. !!அப்படியெனில் தங்கள் அமைதிக்கு நான்.. குந்தகம் விளைவித்து விட்டேனா..?”

”அப்படித்தான் வைத்துக் கொள்ளேன்..!” என்றேன் குறும்பாக.

”ஓ..!! அப்படியானால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் இளவரசே..!! நான் வருகிறேன்..!!” எனச் சொல்லி விட்டுத் திரும்பியவளின்.. மென் வளைக் கரத்தை எட்டிப் பிடித்தேன்.

”வருகிறேன்.. என்று விட்டு போகிறாயே..??”

”நீங்கள்தான்.. அமைதி வேண்டி.. அதை நான் கெடுப்பதாக…” முதல் முறையாக நான் அவளைத் தொடுவதால்.. அவள் சிறிது நாணத்துடன் தலை கவிழ்ந்து நிலம் நோக்கி.. நின்றவாறு.. முனகினாள்.

”ஆம்.. இளவரசி..! என் அமைதி.. தனிமை.. எல்லாம் சீர்குலைந்து போனது.. உன்னால்..!!” அவள் கரம் ஒரு பட்டாடை புழுபோல.. மிகவும் மிருதுவாக இருந்தது.

”அதனால்தான்.. நான் இங்கிருந்து… செல்லலாம் என்று..”

”நீ இங்கிருந்து செல்வதால் எந்த நன்மையும் ஏற்பட்டு விடாது.. மாறாக.. மேலும் என் மனம் அவதியுறவே செய்யும்..!!”

மிகுந்த தயக்கத்துடன்.. முகம் உயர்த்தி.. என்னைப் பார்த்தாள் மகிழ்வதனி. நான் மெலிதாகப் புன்னகை புரிந்தேன். அவள் மலர்க் கரத்தை விட்டு விடாமல் பிடித்தபடி கேட்டேன்.
”உன் கரத்தை நான் தொடலாம் அல்லவா..? அதைச் சொல்லிவிடு முதலில்..?”

வெட்கம் நிறைந்த முகத்தைச் சற்றுத் திருப்பிக் கொண்டாள்.
”சொல் இளவரசி.. உன் மலர்க் கரத்தைப் பற்றியது குற்றமா..?”

”உரிமையுள்ளவளின் கரங்களைத் தானே.. பற்றுகிறீர்கள் இளவரசே..? அது எந்த வகையில் குற்றமாகும்..??” உள் அமுங்கிய குரலில் முனுமுனுப்பாகச் சொன்னாள்.

”காதல் வழக்காடு மன்றத்தில்.. அது அப்படித்தான் இருக்கிறது.. இளவரசி..!!”

”எனில்.. தங்களுக்கு.. காதலில் தேர்ந்த அனுபவம்.. இருப்பது போல் தெரிகிறது..??” எனக் கேட்ட.. அவள் கேள்வியின் பொருள்.. என்னைச் சற்றுத் திணறச் செய்து விட்டது.

”ஓ.. நான் சொன்னதற்கு இப்படிக் கூட ஒரு பொருள் இருக்கிறதல்லவா..?? சரிதான்.. ஆனால் இளவரசி.. நான் இன்னும்.. எந்தப் பெண்ணின் காதல் வளையிலும் விழாதவன்.. என்பதை.. சற்று பெருமையுடனே சொல்லிக் கொள்கிறேன்..!!” என்றேன்.

”பிறகு எப்படி…அப்படிச் சொன்னீர்கள்..??”

1 Comment

  1. Bro, அம்மாவுடன் மதுரை டூர் itha kathaium ungala mudinja finish pannuga bro plz …

Comments are closed.